என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேலை வாங்கித்தருவதாக கூறி பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது
- தொல்லை அதிகரிக்கவே நீலராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வடமதுரை போலீஸ் நிலையத்தில் பெண் புகார் அளித்தார்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் தாமதம் செய்து வந்துள்ளனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் பாகுராஜா என்ற நீலராஜா (வயது 27). இவருக்கும் திருமலைக்கேணியில் பூக்கடை வைத்துள்ள திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
தனக்கு மில்லில் வேலை வாங்கித்தருமாறு அந்த பெண் கேட்டுள்ளார். அவரும் தான் வேலை பார்க்கும் மில்லிலேயே சேர்த்து விடுவதாகக்கூறி அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். ஆனால் மில்லுக்கு அழைத்துச் செல்லாமல் ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார்.
மேலும் அதனை வீடியோவும் எடுத்துள்ளார். அந்த வீடியோவை காட்டியே அடிக்கடி அந்த பெண்ணை தனியாக அழைத்து பலாத்காரம் செய்துள்ளார். அவரது தொல்லை அதிகரிக்கவே நீலராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் தாமதம் செய்து வந்துள்ளனர்.
இதனிடையே நீலராஜா தான் எடுத்த ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக மிரட்டி மீண்டும் தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார். இதுகுறித்து வேடசந்தூர் கோர்ட்டில் அந்த பெண் மனுதாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து நீலராஜா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வடமதுரை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து நீலராஜாவை சிறயைில் அடைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்