என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "security arrest"
- கடந்த ஆண்டு ஜூன் 26-ந்தேதி இரவு பெண் வீட்டிற்கு சென்ற சாமி தான் வாங்கி சென்ற கூல்ட்ரிங்க்ஸில் மயக்க மருந்து கலந்து பெண்ணுக்கு கொடுத்தார்.
- அதனை குடித்த பெண் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாமி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் 35 வயது பெண். இவருடைய கணவர் ஐதராபாத் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வேலை செய்தபோது உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் அவரது மனைவிக்கு அதே அலுவலகத்தில் வேலை கிடைத்தது. பெண்ணுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு கம்மம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பணியிட மாறுதலில் சென்றார். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காவலாளியாக வேலை செய்து வந்த சாமி என்பவர் அறிமுகமானார். அவர் பெண்ணுக்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்து அவரது பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து விட்டார். மேலும் பெண்ணுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் 26-ந்தேதி இரவு பெண் வீட்டிற்கு சென்ற சாமி தான் வாங்கி சென்ற கூல்ட்ரிங்க்ஸில் மயக்க மருந்து கலந்து பெண்ணுக்கு கொடுத்தார்.
அதனை குடித்த பெண் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாமி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.
மறுநாள் தான் செல்போனில் பதிவு செய்திருந்த வீடியோவை பெண் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி வைத்து தனது ஆசைக்கு இணங்காவிட்டால் சமூக வலைத்தளத்தில் வீடியோவை பதிவிட்டு விடுவதாக மிரட்டி கடந்த ஒரு ஆண்டாக பலாத்காரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் கம்மத்தில் இருந்து பெண் ஐதராபாத் வந்து இருந்தார். அப்போது பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட சாமி செல்போனில் பதிவு செய்து வைத்துள்ள வீடியோவை அழிக்க வேண்டும் என்றால் கணவர் இறந்ததால் அவருக்கு வந்த ரூ.50 லட்சத்தை தர வேண்டும் எனவும், இல்லையெனில் வீடியோவை அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் அனுப்பி விடுவதாக மிரட்டினார்.
சாமி தன்னைத்தொடர்ந்து மிரட்டி வந்ததால் விரத்தி அடைந்த பெண் இதுகுறித்து ஐதராபாத் ஜுபிலி ஹில்ஸ் போலீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமிகள் 2 பேருக்கு ராசையா பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
- உடனே அந்த சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ராசையா(வயது 75). இவர் கல்குவாரி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமிகள் 2 பேருக்கு ராசையா பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். உடனே அந்த சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின்பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசையாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு மாணவி கே.கே. நகர் ஈ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருக்கிறார். இந்த மாணவியை அங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த அருப்புக் கோட்டையைச் சேர்ந்த கணேசன் என்பவர் காதலிக்கும்படி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.
இதுகுறித்து மாணவி புகார் அளித்தார். இதையடுத்து கல்லூரி டீன் காவலாளி கணேசனை கடந்த மார்ச் மாதம் பணியில் இருந்து நீக்கினார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு கணேசன் எழுதிய கடிதம் ஒன்று வந்தது. அதில் தான் உனக்காக 23-ந் தேதி மருத்துவ கல்லூரி வாசலில் காத்திருப்பேன்.
என்னை காதலிக்கிறாயா இல்லையா என்று நீ நேரில் வந்து கூற வேண்டும் என்று மிரட்டும் விதத்தில் எழுதி இருந்தார். இதுகுறித்து மாணவி தனது தந்தைக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
அதேபோல் நேற்று காலை கல்லூரி முன்பு காத்து நின்ற கணேசனை மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் எம்ஜிஆர் நகர் இன்ஸ்பெக்டர் ரூபன், கணேசனை கைது செய்தார்.
விசாரணையில் கணேசன் ராணுவத்தில் பணிபுரிந்தவர். பின்னர் அங்கிருந்து வெளியேறி கடந்த 2012-ம் ஆண்டு முதல் கே.கே. நகர் மருத்துவ கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். திருமணம் ஆனவர். மனைவி 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.
செம்மஞ்சேரி பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான இளம் பெண்கள் தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகிறார்கள்.
இந்த விடுதியில் 2-வது தளத்தில் 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தங்கி உள்ளார். அதே பகுதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் அவர் வேலை செய்து வந்தார்.
காற்றுக்காக இரவு நேரத்தில் தனது அறையின் கதவை லேசாக திறந்து வைத்துக் கொண்டு தூங்கினார். நள்ளிரவில் அவரது அறையில் புகுந்த விடுதி காவலாளி சுபாஷ் அந்த பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சல் போட்டார். விடுதியில் தங்கி இருந்த மற்ற பெண்கள் ஓடி வந்தனர். அதற்குள் சுபாஷ் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து சுபாசை கைது செய்தனர். திருவண்ணாமலையை சேர்ந்த அவர் கடந்த சில ஆண்டுகளாக விடுதியில் காவலாளியாக பணியாற்றியது தெரிய வந்தது. #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்