search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy Youth"

    • மகனை மீட்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் மனதை திடமாக்கிக்கொண்டு திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு கடந்த 17-ந்தேதி பெண் வந்துள்ளார்.
    • பெண்ணை அருகில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த ரஞ்சித்குமார், அவர் அணிந்திருந்த இரண்டு மோதிரங்களை பறித்து விட்டு தப்பிச் சென்றான்.

    திருச்சி:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மம்சாபுரம் பகுதியில் வசித்து வரும் 49 வயதுடைய பெண்ணுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரை பெரம்பலூரில் உள்ள போதை மீட்பு மறு வாழ்வு மையத்தில் அவரது தாய் கடந்த 14-ந்தேதி சேர்த்துள்ளார்.

    இந்த நிலையில் அந்த மையத்திலிருந்து அவர் தப்பித்து திருச்சிக்கு வந்தார். பின்னர் அவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (வயது 25) என்ற வாலிபரிடம் செல்போனைப் பெற்று தனது தாய்க்கு தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது ரஞ்சித் குமார் அந்த வாலிபரின் குடும்ப சூழ்நிலைகளை தெரிந்து கொண்டார். தனக்கு தந்தை இல்லை என்றும், தான் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் ரஞ்சித்திடம் அவர் கூறியுள்ளார்.

    இதையடுத்து ஏற்கனவே 50 வயது பெண்களுடன் சல்லாபம் அனுபவித்து வந்த ரஞ்சித் குமாருக்கு குடிபோதை மகனின் தாயையும் வீழ்த்த முடிவு செய்தார்.

    அடுத்த சில நிமிடங்களில் அந்த அப்பாவி பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட ரஞ்சித் குமார் உனது மகன் இப்போது என் கஸ்டடியில் இருக்கின்றான். நீ முழு நிர்வாணமாக வீடியோ காலில் என்னிடம் பேச வேண்டும். இல்லையென்றால் உன் மகனை விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன். நான் போலீஸ்காரன், சொன்னதை செய் எனக்கூறி மிரட்டியுள்ளார்.

    இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என பயந்து கண்ணீருடன் தனது மேலாடையை களைந்து விட்டு பேசியுள்ளார். இதனை ரஞ்சித்குமார் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு அந்தப் பெண்மணியின் மகனிடம் உனது காதலியின் செல்போன் நம்பரை கொடு என கேட்டுள்ளார்.

    ஆபத்தை உணராத வெகுளித்தனமான அந்த குடிமகன் அதையும் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆபாச படத்தை அந்த பெண்ணின் செல்போனுக்கு அனுப்பி கேவலமான குடும்பத்தைச் சேர்ந்த வாலிபரை எதற்காக காதலிக்கிறாய். இதற்கு என்னை நீ காதலிக்கலாம் என கூறியுள்ளார்.

    பின்னர் இரண்டு நாட்கள் கழித்து ராஜபாளையத்தில் இருந்த அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட ரஞ்சித்குமார், உடனே திருச்சிக்கு புறப்பட்டு வா. இல்லையெனில் உன் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என கூறி இணைப்பை துண்டித்தார்.

    இதனால் அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்ற அந்தப் பெண் மகனை மீட்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் மனதை திடமாக்கிக்கொண்டு திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு கடந்த 17-ந்தேதி வந்துள்ளார்.

    பின்னர் அந்தப் பெண்ணை அருகில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த ரஞ்சித்குமார், அவர் அணிந்திருந்த இரண்டு மோதிரங்களை பறித்து விட்டு தப்பிச் சென்றான்.

    இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், தலைக்கு மேல் வெள்ளம் போய் விட்டாலும், தன்னை போல் வேறு யாரும் இந்த நிலைக்கு ஆளாகக்கூடாது என்று கருதி திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பூரில் பதுங்கி இருந்த ரஞ்சித்தை கைது செய்து இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயில் அடைத்தனர்.

    கைதான வாலிபர் ரஞ்சித்துக்கு 50 வயதுடைய பெண்கள் பலருடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேற்கொண்ட வயது பெண் ஒருவரிடம் அவர் தொடர்பில் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×