search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனியன் நிறுவன பெண் தொழிலாளியை கற்பழித்து கொன்ற வடமாநில வாலிபர் சிக்கினார்
    X

    பனியன் நிறுவன பெண் தொழிலாளியை கற்பழித்து கொன்ற வடமாநில வாலிபர் சிக்கினார்

    • கொலையாளிகளை பிடிக்க திருப்பூர் மாவட்ட எஸ்.பி.சசாங் சாய் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
    • தனிப்படை போலீசார் ரேவதி கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் அருகே வஞ்சிபாளையம் கரியாக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மனைவி ரேவதி (வயது 35). இவர்களது மகன் ஹரிஷ் (8). கடந்த சில ஆண்டுகளாக ரேவதியின் கணவர் ரத்தினசாமி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரால் எழுந்து நடக்க முடியவில்லை.

    இதனால் ரேவதி குடும்பத்தை காப்பாற்றும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து ரேவதி வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்தநிலையில் ரேவதி வேலைக்கு சென்று விட்டு நடந்து வரும் கண்ணாங்காட்டு தோட்டம் பகுதியில் செல்லும் பி.ஏ.பி.கிளை வாய்க்கால் கரையோரம் உள்ள முட்புதர் அருகே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து ஊதியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்தீபன் மற்றும் போலீசார் சென்று ரேவதியின் உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    ரேவதி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    கொலையாளிகளை பிடிக்க திருப்பூர் மாவட்ட எஸ்.பி.சசாங் சாய் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ரேவதி கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது தனிப்படை போலீசார் ரேவதி பணியாற்றிய பனியன் கம்பெனி, அவர் பணி முடிந்து வீட்டிற்கு சென்ற நேரம் , அவர் சென்ற பாதை குறித்து ஆய்வு செய்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். இதில் ரேவதியை பின்தொடர்ந்து வடமாநில வாலிபர் ஒருவர் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த வாலிபர் குறித்து விசாரிக்கும் போது அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட பனியன் நிறுவனத்திற்கு போலீசார் சென்று விசாரித்த போது அவர் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு அவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் வீட்டில் ரேவதியின் வளையல்கள் மற்றும் சில பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் ரேவதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரேவதி கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    ரேவதி வேலை முடிந்து தினமும் வீட்டிற்கு நடந்து செல்வார். அவர் செல்லும் பகுதி காட்டுப்பகுதி. அங்கு ஆள் நடமாட்டம் இருக்காது. இதனை வடமாநில வாலிபர் நோட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று ரேவதி தனியாக செல்வதை அறிந்து பின்தொடர்ந்து சென்ற வாலிபர், ஆட்கள் நடமாட்டம் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரேவதியை வலுக்கட்டாயமாக காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்றுள்ளார். அவர் சத்தம் போடவே அருகில் இருந்த கல்லால் ரேவதியில் தலையில் தாக்கியுள்ளார். இதில் ரேவதி மயங்கினார். அந்த நேரத்தில் வடமாநில வாலிபர் கற்பழித்துள்ளார். சிறிது நேரத்தில் ரேவதி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். போலீசார் விசாரணையில் சிக்கி கொண்டார். இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று வடமாநில வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×