என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காவலாளி கைது"
- கடந்த ஆண்டு ஜூன் 26-ந்தேதி இரவு பெண் வீட்டிற்கு சென்ற சாமி தான் வாங்கி சென்ற கூல்ட்ரிங்க்ஸில் மயக்க மருந்து கலந்து பெண்ணுக்கு கொடுத்தார்.
- அதனை குடித்த பெண் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாமி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் 35 வயது பெண். இவருடைய கணவர் ஐதராபாத் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வேலை செய்தபோது உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் அவரது மனைவிக்கு அதே அலுவலகத்தில் வேலை கிடைத்தது. பெண்ணுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு கம்மம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பணியிட மாறுதலில் சென்றார். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காவலாளியாக வேலை செய்து வந்த சாமி என்பவர் அறிமுகமானார். அவர் பெண்ணுக்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்து அவரது பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து விட்டார். மேலும் பெண்ணுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் 26-ந்தேதி இரவு பெண் வீட்டிற்கு சென்ற சாமி தான் வாங்கி சென்ற கூல்ட்ரிங்க்ஸில் மயக்க மருந்து கலந்து பெண்ணுக்கு கொடுத்தார்.
அதனை குடித்த பெண் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாமி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.
மறுநாள் தான் செல்போனில் பதிவு செய்திருந்த வீடியோவை பெண் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி வைத்து தனது ஆசைக்கு இணங்காவிட்டால் சமூக வலைத்தளத்தில் வீடியோவை பதிவிட்டு விடுவதாக மிரட்டி கடந்த ஒரு ஆண்டாக பலாத்காரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் கம்மத்தில் இருந்து பெண் ஐதராபாத் வந்து இருந்தார். அப்போது பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட சாமி செல்போனில் பதிவு செய்து வைத்துள்ள வீடியோவை அழிக்க வேண்டும் என்றால் கணவர் இறந்ததால் அவருக்கு வந்த ரூ.50 லட்சத்தை தர வேண்டும் எனவும், இல்லையெனில் வீடியோவை அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் அனுப்பி விடுவதாக மிரட்டினார்.
சாமி தன்னைத்தொடர்ந்து மிரட்டி வந்ததால் விரத்தி அடைந்த பெண் இதுகுறித்து ஐதராபாத் ஜுபிலி ஹில்ஸ் போலீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமிகள் 2 பேருக்கு ராசையா பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
- உடனே அந்த சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ராசையா(வயது 75). இவர் கல்குவாரி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமிகள் 2 பேருக்கு ராசையா பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். உடனே அந்த சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின்பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசையாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.
- மாணவியை பின் தொடர்ந்து சென்ற பள்ளி காவலாளி திடீரென அவள் கண்ணையும், வாயையும் பொத்தி கழிவறைக்கு தூக்கி சென்றார்.
- சம்பவம் குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி காவலாளியை கைது செய்தனர்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே கோபிஷா என்ற இடத்தில் உள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி சம்பவத்தன்று மதிய உணவு இடைவெளியில் கழிவறைக்கு சென்றாள். அப்போது பின் தொடர்ந்து சென்ற பள்ளி காவலாளி லட்சுமி நாராயணன் திடீரென அவள் கண்ணையும், வாயையும் பொத்தி கழிவறைக்கு தூக்கி சென்றார்.
பின்னர் அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி அந்த மாணவி தனது ஆசிரியையிடம் கண்ணீர் மல்க கூறினாள். தன்னை மஞ்சள் சட்டை அணிந்த ஒருவர் தான் சீரழித்தாக தெரிவித்தாள்.
இதுதொடர்பாக போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து பள்ளியில் சம்பவம் நடந்த அன்று மஞ்சள் சட்டை அணிந்தவர் குறித்து விசாரித்தனர். அப்போது பள்ளி காவலாளி லட்சுமி நாராயணன் அந்த நிற சட்டை அணிந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்