search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரட்டாசி"

    • தொண்டியில் உள்ள பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு நடந்தது.
    • சுவாமிக்கு பால் அபிசேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத உந்தி பூத்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிசேகங்கள் நடந்தன. புரட்டாசி முழுவதும் விரதம் இருக்கும் பக்தர்கள் அதிகாலை முதலே பெருமாள் கோவிலில் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு துளசி பிரசாதமாக வழங்கப்பட்டது. கருணாகரன் பட்டர் பூஜை ஏற்பாடுகளை செய்தார். அதே போல தொண்டி அருகே உள்ள முகிழ்தகம் கிராமத்தில் உள்ள சொர்ணம் வருஷம் பெய்த பெருமாள் கோவிலிலும் சுவாமிக்கு பால் அபிசேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. சேகர் பட்டாச்சாரியார் பூஜைகளை செய்தார்.

    • 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் வழக்கத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.
    • இன்று ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி சர்வ மகாளய முழு அமாவாசை ஆகும்.

    சேலம்:

    சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் புறநகரில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி , ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் வழக்கத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.

    அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி சர்வ மகாளய முழு அமாவாசை ஆகும். அதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள், மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்பதற்காகவும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர்.

    பழங்கள், தேங்காய், வாழை இலை , கீரை வகைகள் , பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது . இதே போல் , பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் இன்று 1086 விவசாயிகள், பல்வேறு 648 வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்களின் மொத்த வரத்து 277.079 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 62, 057 நுகர்வோர்கள் வாங்கிச் சென்றனர். இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.97,65,895 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனது. இது வழக்கமான வியாபாரத்தை விட இருமடங்கு விற்பனை ஆகும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    • ஆதி கேசவ சேவா சங்க டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    • காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்

    கன்னியாகுமரி:

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பர். மேலும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை தரிசிப்பது சிறப்பானது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.

    நேற்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூ டங்கள் வேலை நாளாக இருந்தபோதும் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில், பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் அலயம், கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேசப்பெருமாள் ஆலயம் ஆகியவற்றில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருவட்டார் ஆதிகே சவப்பெருமாள் கோவி லில் காலை சிறப்பு பூஜை களைத்தொடர்ந்து மதியம் ஸ்ரீபலி பூஜை நடைபெற்றது. மதியம் சிறப்பு அன்ன தானம், மாலையில் சூரி யனின் ஒளிக்கதிர்கள் ஆதி கேசவப் பெருமாளின் திருமேனியில் விழும் நிகழ்வு ஆகியன நடந்தது.

    நேற்று மாலையில் சூரியக் கதிர்கள் விழும் நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இன்றும் சூரியக்கதிர் பெருமாளின் திருமேனியில் விழும் நிகழ்வு நடைபெறும்.

    புரட்டாசி சனிக்கிழமை என்பதால் வழக்கத்தை விட ஏராளமான பக்தர் கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.கிருஷ்ணன் சன்னதியில் முழுக்காப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து ஆதி கேசவ சேவா சங்க டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு பிர சாதம் வழங்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆடி மாதம் பிரசித்த பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாத் துறையுடன் இணைந்து ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலெட்சுமி கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில் "தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவ கோவில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத் துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்" என அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், கடந்த ஆடி மாதம் பிரசித்த பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாத் துறையுடன் இணைந்து ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அதனைத் தொடர்ந்து, புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற வைணவ கோவில்களுக்கு குறைந்த கட்டணத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆன்மிகச் சுற்றுலா அழைத்து செல்லும் வகையில் அறிவிப்புகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    அதன்படி, சென்னையில் புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு ஆன்மிகச் சுற்றுலாவிற்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் பங்கேற்கும் ஆன்மிகச் சுற்றுலாவினை இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் எம். மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இப்பயணத்தின் முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலெட்சுமி கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

    இரண்டாவது திட்டத்தில் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமுல்லைவாயில் பொன்சாமி பெருமாள் கோவில், திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கும் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த இரண்டு திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு, கோவில் பிரசாதம், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் அதிகாலையில் மகா திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடைபெற்றது.
    • ஸ்ரீவீரராகவப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பூர் :

    புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் அதிகாலையில், ஸ்ரீதேவி பூமிதேவி தாயார் சமேத வீரராகவப்பெருமாளுக்கு மகா திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. அடுத்தாக, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கோவில் கொடிமரம் அருகே கருட வாகனத்துடன் பக்தர்களுக்கு சேவைசாதித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விரதம் இருக்கும் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

    அவிநாசி அருகே மொண்டிபாளையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில், தாளக்கரை ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. காங்கேயம் அருகே உள்ள பெருமாள் மலையில் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்போர் இங்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று பிரசன்ன வெங்கட பெருமாளுக்கு மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. சிறப்பு பூஜையில் திருப்பூர், காங்கேயம், சிவன்மலை, ஊதியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருப்பூர் அருகே அவிநாசிபாளையத்தில் ராமசாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டும் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி ராமசாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக அவிநாசிபாளையம் - பொங்கலுார் ரோட்டில் தற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலை 5மணி முதல் இரவு 7 மணி வரை திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையம், திருப்பூர் பழைய பஸ் நிலையம், காங்கயம், பல்லடம், தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    திருப்பூர் மற்றும் அவிநாசியில் இருந்து தாளக்கரை லட்சுமிநரசிம்மர் கோவில், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கும் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. உடுமலை நெல்லுக்கடை வீதியில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவில்,உடுமலை பெரிய கடை வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோவில், ஊத்துக்குளி ரோடு தென்திருப்பதி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

    • மீன் விலை குறைவால் காலை நேரத்தில் வியாபாரம் சற்று சூடுபிடிக்கிறது.
    • புரட்டாசி மாதம் நிறைவு பெறும் வரை வியாபாரம் சற்று குறைவாக தான் இருக்கும்.

    உடுமலை :

    தற்போது புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இம்மாதத்தில் இறைவனை வேண்டி விரதமிருக்கும் பலர் அசைவத்தை தவிர்ப்பர்.

    இந்நிலையில் உடுமலையில் வஞ்சிரம் கிலோ 450 ரூபாய், விளாமீன் 350, பாறை 300, அயிலை 120, சங்கரா 250, முறால் 300, கட்லா 150, ரோகு 130, ஜிலேபி 80 ரூபாய்க்கு விற்கிறது. முந்தைய வாரங்களோடு ஒப்பிடுகையில் மீன் விலை குறைவால் காலை நேரத்தில் வியாபாரம் சற்று சூடுபிடிக்கிறது.ஆனால் நேரம் செல்லசெல்ல கூட்டம் குறைவதால் மீன் விற்பனை குறைகிறது. புரட்டாசி மாதம் நிறைவு பெறும் வரை வியாபாரம் சற்று குறைவாக தான் இருக்கும். தற்போது வரத்து இயல்பாக இருப்பதால் வஞ்சிரம் உட்பட அனைத்து மீன்களின் விலையும் குறைத்தே விற்கப்படுகிறது என மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழ் மாதமான புரட்டாசியில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.
    • கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

    கோவை:

    கோவை மாநகரில் எம்.ஜி.ஆர். மார்க்கெட், டி.கே.மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க்கெட்டுகளுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், சூலூர் உள்ளிட்ட உள்ளூர் பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், அவரை உள்பட பல்வேறு காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. நீலகிரியில் இருந்து கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனைக்கு வருகிறது.

    கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கோவையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து குறைவாகவே இருந்தது. வரத்து குறைவு காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் மற்ற நாட்களை விட ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது.

    டி.கே.மார்க்கெட்டில் சாதாரண நாட்களில் கேரட் ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனையாது. தற்போது வரத்து குறைவால் ஒரு கிலோ கேரட் ரூ.90க்கு விற்பனையாகி வருகிறது.

    கோவை டி.கே.மார்க்கெட்டில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

    கேரட்-ரூ.90, பீன்ஸ்-80, மிளகாய்-ரூ.50, பீட்ரூட்-ரூ.30, முட்டைகோஸ்-ரூ.20, வெள்ளரிக்காய்-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, குடைமிளகாய்-ரூ.50, பாகற்காய்-ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அவரை-ரூ.60, கத்தரிக்காய்-ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.50, மொச்சை-ரூ.55, புடலங்காய்-ரூ.45, கோவக்காய்-ரூ.45, சுரைக்காய்-ரூ.50, இஞ்சி-ரூ.40, சேப்பக்கிழங்கு-ரூ.50, சேனை கிழங்கு-ரூ.40, கருணை கிழங்கு-ரூ.50, தக்காளி-ரூ.40, சின்ன வெங்காயம்-ரூ.40, பல்லாரி-ரூ.20, உருளைக்கிழங்கு-ரூ.30, எலுமிச்சை-ரூ.100க்கு விற்பனையாகி வருகிறது.

    மார்க்கெட்டுகளை தவிர்த்து அங்காடிகளில் இதை விட காய்கறிகள் விலை அதிகமாக இருந்தது. காரட் ரூ.110, பீன்ஸ் 95, பீட்ரூட் ரூ.75-க்கு விற்பனை ஆனது.

    மழை காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. 10 மூட்டை காய்கறிகள் வர வேண்டிய இடத்தில் பாதிக்கு பாதியாக 5 மூட்டை காய்கறிகள் மட்டுமே வருகிறது. இதன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த 3 மாத காலமாகவே காய்கறிகளின் விலை சற்று உயர்வாகவே இருந்து வருகிறது.

    தற்போது தான் மழை குறைந்து, மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் காய்கறி வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது காய்கறியின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ் மாதமான புரட்டாசியில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.

    தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதால் கோவை உக்கடம் மொத்த மீன் சந்தை, சில்லறை மீன் சந்தைகளில் நேற்று விற்பனை மந்தமாக காணப்பட்டது. விற்பனை குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலையும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை குறைந்து விட்டது.

    கோவையில் ராமநாதபுரம், சிங்காநல்லூர், செல்வபுராம், சரவணம்பட்டி, காந்திபுரம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் உள்ள கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. நுகர்வு குறைவால் இறைச்சி விலையும் குறைந்தது.

    கடந்த வாரங்களில் ரூ.270க்கு விற்ற 1 கிலோ கோழி இறைச்சி ரூ.70 குறைந்து ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆட்டிறைச்சி 1 கிலோ ரூ.700க்கு விற்பனை செய்யப்பட்டது.

    புரட்டாசி மாதம் முடியும் வரை இறைச்சி நுகர்வு குறைவாக இருக்கும் என்றும் இதனால் விலை 50 சதவீதம் அளவுக்கு குறையும் எனவும் இறைச்சி வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம்.
    • புரட்டாசி மாதம் வடக்கில் இருக்கும் சூரியன், தெற்கு நோக்கி பயணிக்கிறது.

    ஜோதிடத்தில் 6-வது ராசி கன்னி. கன்னி ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது. பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.

    புரட்டாசி மாதம் வடக்கில் இருக்கும் சூரியன், தெற்கு நோக்கி பயணிக்கிறது. இதனால் சூரிய கதிர்வீச்சால் தட்பவெட்பம் மாறுபடுகிறது. இந்த திடீர் மாறுபாடால் நமக்கு செரிமானக்குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும். ஆதலால் அசைவ உணவை தவிர்த்து, உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்க சொன்னார்கள்.

    - ஜோதிடர் சுப்பிரமணியன்.

    • புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல், விரதம் இருக்கும் பழக்கத்தை இந்துக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
    • உடல் நலத்தை போற்றி பாதுகாக்கும் பொருட்டு புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறினர்.

    சேலம்:

    புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து கோயிலுக்கு செல்வார்கள். மற்ற நாட்களில் அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தாலும், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல், விரதம் இருக்கும் பழக்கத்தை இந்துக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். உடல் நலத்தை போற்றி பாதுகாக்கும் பொருட்டு புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறினர். அதோடு, இந்த காலத்தில் ஏற்படும் உடல் நல பிரச்னையை, பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது. இதனால் தான் புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என முன்னோர்கள் ஒரு பழக்கத்தை வைத்துள்ளனர்.

    புரட்டாசி சனிக் கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். பெரும்பாலான இந்துக்கள், இந்த மாதத்தில் விரதம் இருப்பார்கள். அதனால், வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள். இன்று புரட்டாசி பிறந்ததால் சிக்கன், மட்டன், மீன் வாங்க கடைகளுக்கு செல்வதில்லை.

    வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை களில் சூரமங்கலம் மீன் மார்க்கெட், செல்வாய்பேட்டை, அம்மாபேட்டை அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி, ஜங்ஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் சிக்கன்,மட்டன் கூட்டம் இல்லாம் வெறிச்சோடி கணப்பட்டது. புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று சிக்கன், மட்டன் விற்பனை கூட்டம் இல்லாமல் விற்பனை மந்தமாகவே காணப்பட்டது. தற்போது சிக்கன், மட்டன் விலை குறைந்தாலும் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

    ×