search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மீக சுற்றுலா"

    • ரெயில் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வரை பயணக் காப்புறுதி திட்டம்
    • அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரெயில் சேவை தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரெயில்வே தென் மண்டல பொது மேலாளர் ரவிக்குமார் மற்றும் சென்னை மண்டல துணை மேலாளர் மாலதி ஆகியோர் காட்பாடி ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியன் ெரயில்வே சுற்றுலா பிரிவில், பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயிலை புதியதாக அறிமுகப்படுத்தி உள்ளது.

    இதில் 3 குளிர்சாதன பெட்டிகள், 8 சிலிப்பர் பெட்டிகள், 1 பேண்ட்ரி கார், 2 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் இந்த ரெயிலில் உள்ளது.

    பாரத் கவுரவ் சுற்றுலா பிரிவு தென் மண்டலம் சார்பில், வருகிற ஜூலை மாதம் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணம் திட்டம் அறிமுகப்படுத்த பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் வருகிற ஜூலை 1-ந் தேதி, இந்த சுற்றுப்பயணம் தொடங்குகிறது. 11 இரவுகள் மற்றும் 12 பகல்கள் அடங்கிய இந்த ஆன்மீக சுற்றுலா ஐதராபாத், ஆக்ரா, மதுரா, வைஷ்ணவ தேவி (கட்ரா) அமிர்தசரஸ், புது டெல்லி ஆகிய இடங்கள் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு ரெயில் கொச்சு வேலி, நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் வழித்தடத்தில் செல்லும்.

    இந்த ஆன்மீக சுற்றுலாவை கான ஒருவருக்கு சிலிப்பர் பெட்டிக்கு ரூ. 22 ஆயிரத்து 35-ம், குளிர் சாதன வசதி பெட்டிக்கு ரூ.40 ஆயிரத்து 380 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் இடங்களை பார்வையிடுவதற்கு போக்குவரத்து மற்றும் ரெயில் பயணத்தின் போது தென்னிந்திய சைவ உணவு, சுற்றுலா மேலாளர், தனியார் பாதுகாவலர் என சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வரை பயணக் காப்புறுதி திட்டமும் வழங்கப்பட உள்ளது.

    இதில் மத்திய, மாநில மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த சுற்றுலா ரெயிலில் பயணித்தால், எல்.டி.சி. சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
    • செலவுத் தொகையை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்.

    தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் ஆன்மீக சுற்றுலா குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    கடந்த ஆண்டு மே மாதம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானியக் கோரிக்கையின் போது, 60 வயதிற்கு மேல் 70 வயதுக்கு உள்ளே இருக்கும் 200 பக்தர்கள் காசிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிவித்திருந்தோம்.

    அதற்குரிய 5 லட்சம் ரூபாய் செலவுத் தொகையை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்த பயணத்திற்காக தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இதில் தேர்வு செய்யப்படும் முதியவர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குளிர்காலம் முடிந்தவுடன் முதலமைச்சரின் அனுமதியை பெற்று காசிக்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காசிக்கு ஆன்மீக சுற்றுலா பயணம் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு இந்த ஆண்டில் 200 நபர்கள் ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர்.

    சென்னை:

    உத்தரபிரதேச மாநிலம் காசியில் காசி தமிழ்ச்சங்கம் என்ற நிகழ்ச்சியை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நாளை (19-ந்தேதி) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    ஒரு மாதம் நடைபெறும் இந்த கலாசார விழாவில் தமிழகத்துக்கும், காசிக்கும் உள்ள தொடர்பு தமிழின் பெருமைகளை விளக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து 12 குழுக்கள் கலந்துகொள்கின்றன. இதற்காக ராமேஸ்வரம், கோவை, சென்னையில் இருந்து ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் கலந்துகொள்ள 2,500 பேர் விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு உணவு, தங்கும் இடம், போக்குவரத்து அனைத்தும் இலவசம்.

    இந்த நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காசிக்கு ஆன்மீக சுற்றுலா பயணம் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பில், "ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு இந்த ஆண்டில் 200 நபர்கள் ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும்' என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இந்த ஆன்மீகப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 10 நபர்கள் வீதம் 200 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

    இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து நேரில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மீகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆடி மாதம் பிரசித்த பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாத் துறையுடன் இணைந்து ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலெட்சுமி கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில் "தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவ கோவில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத் துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்" என அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், கடந்த ஆடி மாதம் பிரசித்த பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாத் துறையுடன் இணைந்து ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அதனைத் தொடர்ந்து, புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற வைணவ கோவில்களுக்கு குறைந்த கட்டணத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆன்மிகச் சுற்றுலா அழைத்து செல்லும் வகையில் அறிவிப்புகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    அதன்படி, சென்னையில் புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு ஆன்மிகச் சுற்றுலாவிற்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் பங்கேற்கும் ஆன்மிகச் சுற்றுலாவினை இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் எம். மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இப்பயணத்தின் முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலெட்சுமி கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

    இரண்டாவது திட்டத்தில் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமுல்லைவாயில் பொன்சாமி பெருமாள் கோவில், திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கும் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த இரண்டு திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு, கோவில் பிரசாதம், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நளன் குளத்தில் மாணவி தவறி விழுந்து பலியானார்.
    • 34 பேர் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு வந்தனர்.

    புதுச்சேரி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி அடுத்த கோரலுக்குண்டா பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி. ஆட்டோ ஓட்டி வரும் இவரது மனைவி சுசீலா. இவர்க மகள் கீர்த்தனா (வயது12) இவர் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சக்கரபாணி அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட 34 பேர் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு வந்தனர். நேற்று மாலை திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வந்தவர்கள், முன்னதாக கோவில் அருகே உள்ள நளன் தீர்த்த குளத்தில் குளித்தனர். அப்போது கீர்த்தனா குளத்தில் தவறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

    • மதுரையில் இருந்து சீரடிக்கு ஆன்மீக சுற்றுலா ரெயில் 21-ந் தேதி புறப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    மதுரையில் இருந்து முதன் முதலாக பல்வேறு ஆன்மீக சுற்றுலா தலங்களை இணைத்து மதுரை-காசிக்கு ஆன்மீக சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2-வது ஆன்மீக சுற்றுலா ரெயில் மதுரையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் வருகிற 21-ந்தேதி காலை 7.45 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படுகிறது. இது திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை, எழும்பூர் வழியாக ஐதராபாத் செல்கிறது. அங்கு சலர்ஜங் மியூசியம், சார்மினார், ராமானுஜர் சமத்துவ சிலை, கோல்கொண்டா கோட்டை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க உள்ளனர்.

    பின்னர் வருகிற 24-ந்தேதி சீரடி சென்று சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்கின்றனர். மறுநாள் சனிசிங்னாபூர் சென்று, நாசிக்ந கரில் திரியம்பகேஷ்வர், பஞ்சவடி தரிசனம் செய்கின்றனர். வருகிற 27-ந் தேதி பண்டரிபுரம் பாண்டுரங்கர் கோவிலில் சாமி தரிசனம், 28-ந் தேதி மந்திராலயம் ராகவேந்திரர் தரிசனம், 29-ந் தேதி சுற்றுலா முடிவடைகிறது.

    ஆன்மீக ரெயில் சுற்றுலாவில் தங்குமிடம், உணவு, உள்ளூர் சுற்றுலா போக்குவரத்து ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்படும். சுற்றுலா பயணிகள் தங்கள் வசதிக்ற்பகே ரூ.30 ஆயிரம், ரூ. 24 ஆயிரம், ரூ. 16 ஆயிரத்து 900 ஆகிய 3 வகைகளில் கட்டணங்களில் பயணம் செய்யலாம்.

    2-க்கும் மேற்பட்டோர் குடும்பமாக செல்லும் போது கட்டணம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த சுற்றுலாவுக்கு www.ularail.com இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம், அல்லது 7305858585 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    ×