search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நளன் குளத்தில் தவறி விழுந்த மாணவி சாவு
    X

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நளன் குளத்தில் தவறி விழுந்த மாணவி சாவு

    • திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நளன் குளத்தில் மாணவி தவறி விழுந்து பலியானார்.
    • 34 பேர் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு வந்தனர்.

    புதுச்சேரி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி அடுத்த கோரலுக்குண்டா பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி. ஆட்டோ ஓட்டி வரும் இவரது மனைவி சுசீலா. இவர்க மகள் கீர்த்தனா (வயது12) இவர் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சக்கரபாணி அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட 34 பேர் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு வந்தனர். நேற்று மாலை திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வந்தவர்கள், முன்னதாக கோவில் அருகே உள்ள நளன் தீர்த்த குளத்தில் குளித்தனர். அப்போது கீர்த்தனா குளத்தில் தவறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

    Next Story
    ×