search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி சனிக்கிழமை நாளில் ஆதிகேசவபெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    புரட்டாசி சனிக்கிழமை நாளில் ஆதிகேசவபெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    • ஆதி கேசவ சேவா சங்க டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    • காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்

    கன்னியாகுமரி:

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பர். மேலும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை தரிசிப்பது சிறப்பானது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.

    நேற்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூ டங்கள் வேலை நாளாக இருந்தபோதும் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில், பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் அலயம், கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேசப்பெருமாள் ஆலயம் ஆகியவற்றில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருவட்டார் ஆதிகே சவப்பெருமாள் கோவி லில் காலை சிறப்பு பூஜை களைத்தொடர்ந்து மதியம் ஸ்ரீபலி பூஜை நடைபெற்றது. மதியம் சிறப்பு அன்ன தானம், மாலையில் சூரி யனின் ஒளிக்கதிர்கள் ஆதி கேசவப் பெருமாளின் திருமேனியில் விழும் நிகழ்வு ஆகியன நடந்தது.

    நேற்று மாலையில் சூரியக் கதிர்கள் விழும் நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இன்றும் சூரியக்கதிர் பெருமாளின் திருமேனியில் விழும் நிகழ்வு நடைபெறும்.

    புரட்டாசி சனிக்கிழமை என்பதால் வழக்கத்தை விட ஏராளமான பக்தர் கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.கிருஷ்ணன் சன்னதியில் முழுக்காப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து ஆதி கேசவ சேவா சங்க டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு பிர சாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×