search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி மாதம் பிறந்ததால்  சேலத்தில் இறைச்சி கடைகள் வெறிச்சோடின
    X

    புரட்டாசி மாதம் பிறந்ததால் சேலத்தில் இறைச்சி கடைகள் வெறிச்சோடின

    • புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல், விரதம் இருக்கும் பழக்கத்தை இந்துக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
    • உடல் நலத்தை போற்றி பாதுகாக்கும் பொருட்டு புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறினர்.

    சேலம்:

    புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து கோயிலுக்கு செல்வார்கள். மற்ற நாட்களில் அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தாலும், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல், விரதம் இருக்கும் பழக்கத்தை இந்துக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். உடல் நலத்தை போற்றி பாதுகாக்கும் பொருட்டு புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறினர். அதோடு, இந்த காலத்தில் ஏற்படும் உடல் நல பிரச்னையை, பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது. இதனால் தான் புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என முன்னோர்கள் ஒரு பழக்கத்தை வைத்துள்ளனர்.

    புரட்டாசி சனிக் கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். பெரும்பாலான இந்துக்கள், இந்த மாதத்தில் விரதம் இருப்பார்கள். அதனால், வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள். இன்று புரட்டாசி பிறந்ததால் சிக்கன், மட்டன், மீன் வாங்க கடைகளுக்கு செல்வதில்லை.

    வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை களில் சூரமங்கலம் மீன் மார்க்கெட், செல்வாய்பேட்டை, அம்மாபேட்டை அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி, ஜங்ஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் சிக்கன்,மட்டன் கூட்டம் இல்லாம் வெறிச்சோடி கணப்பட்டது. புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று சிக்கன், மட்டன் விற்பனை கூட்டம் இல்லாமல் விற்பனை மந்தமாகவே காணப்பட்டது. தற்போது சிக்கன், மட்டன் விலை குறைந்தாலும் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

    Next Story
    ×