search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி மாதத்தால் மீன் விற்பனை சரிவு
    X

    மீன் விற்பனை குறைவு.

    புரட்டாசி மாதத்தால் மீன் விற்பனை சரிவு

    • மீன் விலை குறைவால் காலை நேரத்தில் வியாபாரம் சற்று சூடுபிடிக்கிறது.
    • புரட்டாசி மாதம் நிறைவு பெறும் வரை வியாபாரம் சற்று குறைவாக தான் இருக்கும்.

    உடுமலை :

    தற்போது புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இம்மாதத்தில் இறைவனை வேண்டி விரதமிருக்கும் பலர் அசைவத்தை தவிர்ப்பர்.

    இந்நிலையில் உடுமலையில் வஞ்சிரம் கிலோ 450 ரூபாய், விளாமீன் 350, பாறை 300, அயிலை 120, சங்கரா 250, முறால் 300, கட்லா 150, ரோகு 130, ஜிலேபி 80 ரூபாய்க்கு விற்கிறது. முந்தைய வாரங்களோடு ஒப்பிடுகையில் மீன் விலை குறைவால் காலை நேரத்தில் வியாபாரம் சற்று சூடுபிடிக்கிறது.ஆனால் நேரம் செல்லசெல்ல கூட்டம் குறைவதால் மீன் விற்பனை குறைகிறது. புரட்டாசி மாதம் நிறைவு பெறும் வரை வியாபாரம் சற்று குறைவாக தான் இருக்கும். தற்போது வரத்து இயல்பாக இருப்பதால் வஞ்சிரம் உட்பட அனைத்து மீன்களின் விலையும் குறைத்தே விற்கப்படுகிறது என மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×