search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புயல்"

    • ஏரியின் மதகு அருகே கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
    • ஏரி நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன.

    ஸ்ரீபெரும்புதூர்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஏரி, குளங்கள் முழுவதும் நிரம்பி உள்ளன. சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள ஏரியும் முழு அளவில் நிரம்பி காணப்பட்டது.

    இந்த ஏரியின் மதகு பகுதி சேதம் அடைந்து இருந்ததால் பாதுகாப்புக்காக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏரியின் மதகு அருகே கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. இந்த தண்ணீர் நடுவீரப்பட்டு, திருவஞ்சேரி கிராமங்களுக்குள் பாய்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த பின்னரே வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். அப்போது கிராமம் முழுவதும் ஏரி தண்ணீர் புகுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து 2 கிராமங்களில் இருந்தவர்களும் பாதுகாப்பாக வெளியேறினர். அவர்கள் அங்குள்ள அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். திடீரென ஏரி நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன. சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.

    தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். உடனடியாக ஏரியின் உடைந்த கரையில் மணல் மூட்டைகள் அடுக்கி சரிசெய்யப்பட்டது. எனினும் ஏரியில் இருந்த சுமார் 50 சதவீத தண்ணீர் வெளியேறி விட்டது. இந்த ஏரி சுமார் 175 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. சுற்றி உள்ள கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக நடுவீரப்பட்டு ஏரி இருந்தது. இந்த நிலையில் ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெளியேறியதால் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஏரிக்கரை தானாக உடைந்ததா? அல்லது வேறு யாரேனும் உடைத்து விட்டனரா?என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடுவீரப்பட்டு ஏரியில் தண்ணீர் இருப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தண்ணீர்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். ஏரிக்கரை உடைந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • புதிய வரவாக மேலும் சில அரிய வகை பறவைகள் வரத் தொடங்கி இருக்கிறது.
    • வெளிநாடுகளில் இருந்து மேலும் பல பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிது.

    சோழிங்கநல்லூர்:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை துரைப்பாக்கம், பெருங்குடி, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது.

    துரைப்பாக்கம் 200 அடி சாலையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு ஏற்கனவே ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து இருந்தன. புயல், மழை காரணமாக அவை வேறு இடங்களுக்கு சென்று விட்டன. இந்த நிலையில் தற்போது மழை நின்றதும் மீண்டும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி உள்ளது. புதிய வரவாக மேலும் சில அரிய வகை பறவைகள் வரத் தொடங்கி இருக்கிறது.

    ஏராளமான கூழைக்கடா பறவைகள் வந்திருப்பது சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கமான கூழைக்கடா பறவைகள் தங்கும் இடங்களில் அதனுடன் சேர்ந்து கருப்பு நிற கூழைக்கடாக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது பள்ளிக்கரனில் வெள்ளை நிற கூழைக்கடாக்கள் மட்டுமே வழக்கமா வரும். கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுப்பு நிற கூழைக்கடாக்கள் வந்திருந்தன. இப்போது புதிய வரவாக முன் எப்போதும் இல்லாத வகையில் கருப்பு நிற கூழைக்கடாக்கல் வந்துள்ளது. அவை பழுப்பு நிற கூழைக்கடாக்கள் போன்று இல்லாமல் வழக்கமான வெள்ளை கூழைக்கடாவுடன் இணைந்த உலா வருகின்றன.

    தற்போது பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதியல் அதிக தண்ணீர் உள்ளதால் வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து மேலும் பல பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பறவைகள் வரத் தொடங்கி உள்ளதால் அதை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.

    • சில இடங்களில் தண்ணீர் வடியாமல் வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது.
    • பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    மிச்சாங் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தற்போது வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. எனினும் இன்னும் சில இடங்களில் வீடுகளை சூழ்ந்து வெள்ள நீர் வடியாமல் உள்ளது. வெள்ளவேடு அருகே உள்ள புதுச்சத்திரம் அடுத்த கொட்டம்பேடு, வேப்பம்பட்டு, பெருமாள் பட்டு, திருநின்றவூர் உள்ளிட்ட இடங்களில் சில இடங்களில் தண்ணீர் வடியாமல் வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கொட்டம்பேடு பகுதியில் மழை வெள்ள நீரை வெளியேற்ற புதுச்சத்திரம்- திருநின்றவூர் நெடுஞ்சாலையை துண்டித்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் அருகில் உள்ள கூவம் ஆற்றில் கலக்கும் வகையில் வெளியேற்றப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக புதுச்சத்திரத்தில் இருந்து கொசவன்பாளையம், கொட்டம்பேடு, திருநின்றவூர், தாமரைப்பாக்கம் கூட்டுசாலை, புதுவாயல் கூட்டு சாலை வழியாக கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு உள்ளன.

    புதுச்சத்திரத்தில் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர். இதேபோல் திருநின்றவூரில் இருந்து புதுச்சத்திரம் வரும் வாகனங்கள் திருவள்ளுவர் வந்து செல்கின்றன. இதனால் வாகனங்கள் சுமார் 20 கி.மீ, துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    • நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
    • 45 ஏரிகள் 25 முதல் 49 சதவீதத்துக்கு மேலும். நிரம்பி இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.

    இதில் 632 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மேலும் 111 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 121 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் 45 ஏரிகள் 25 முதல் 49 சதவீதத்துக்கு மேலும். நிரம்பி இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மழைக் காலங்களில் ஏற்படக் கூடிய நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
    • முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 'மிச்சாங்' புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெரு மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டது. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

    பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர் பெரு மக்கள் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் மேற்பார்வையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், மழைக் காலங்களில் ஏற்படக் கூடிய நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

    கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகள், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் உள்ள தெருக்கள், சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் தோட்டக் கழிவுகளை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்கள் வர வழைக்கப்பட்டனர்.

    பெருநகர சென்னை மாநகராட்சியின் 22,075 தூய்மைப் பணியாளர்களும், தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மிச்சாங் மற்றும் கனமழையின் காரணமாக 46,727.66 மெட்ரிக் டன் குப்பை மற்றும் தோட்டக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

    கனமழையால் ஏற்பட்ட குப்பைகள் மற்றும் தோட்டக் கழிவுகளை அகற்றிட தாம்பரம் மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி மற்றும் திருவேற்காடு பகுதிகளில் 841 தூய்மைப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு, குப்பைகள் மற்றும் தோட்டக்கழிவுகள் அகற்றப்பட்டன.

    கடினமான இச்சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து குப்பைகளை அகற்றிடும் பணிகளை மேற்கொண்ட 3,449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டி ஊக்கத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    அவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் என மொத்தம் 1 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கும் அடையாளமாக 15 தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், ஜோசப் சாமுவேல், மூர்த்தி, எபினேசர், துணை மேயர் மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    • வெள்ளம் வடிந்த நிலையில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன.
    • குப்பைகளை சேகரித்து செல்லும் லாரிகளும் கொட்ட முடியாமல் பல மணி நேரம் காத்து நிற்கின்றன.

    சென்னை:

    சென்னையை புரட்டிப் போட்ட புயல் மழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். வீடுகளில் புகுந்த வெள்ளத்தால் பொருட்கள் சேதம் அடைந்தன. கார், இரு சக்கர வாகனங்கள், மின் சாதனங்கள், சேர், டேபிள், படுக்கைகள் சேதம் அடைந்தன. கீழ் தளத்தில் குடியிருந்தவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர்.

    வெள்ளம் வடிந்த நிலையில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு வந்தாலும் பாதிப் பில் இருந்து விடுபடவில்லை.

    வெள்ளத்தில் இருந்து மீண்ட மக்கள் வீடுகளை சுத்தம் செய்து வருகின்றனர். சாக்கடை கழிவு நீர் வீட்டிற்குள் புகுந்ததால் துர்நாற்றம் வீசுகிறது. ஆனால் சுத்தம் செய்வது பெரிய சுமையாக உள்ளது.

    மேலும் வீட்டில் சேதம் அடைந்த பொருட்களை வெளியேற்றி வருகிறார்கள். வீட்டு உபயோக பொருட்கள், இரு சக்கர வாகன பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை பெருமளவில் சேதம் அடைந்துள்ளன.

    இதனால் குப்பை கழிவுகள் வழக்கத்தை விட அதிகமாக தெருக்களிலும், சாலைகளிலும் குவிகிறது. சென்னையில் வழக்கமாக தினமும் 6 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படும். ஆனால் வெள்ள பாதிப்புக்கு பிறகு 9 ஆயிரம் மெட்ரிக் டன்னாக அதிக ரித்துள்ளது.

    எங்கு பார்த்தாலும் குப்பைகள் மலை போல் தேங்கி கிடக்கின்றன. மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அள்ள அள்ள மேலும் குவிகிறது.


    மழை வெள்ளத்திற்கு பிறகு 50 சதவீத குப்பை கழிவுகள் தினமும் கூடுதலாக வருகின்றன. இதனை அகற்ற ஊழியர்கள் முழு வீச்சில் இரவு-பகலாக ஈடுபட்டாலும் கூட குப்பைகள் மலை போல் தேங்குகின்றன.

    பிற மாவட்டங்களில் இருந்து வந்த ஊழியர்களை பயன்படுத்தி விரைவாக எடுத்தாலும் கூட தொடர்ந்து ஒரு புறம் குப்பைகள் குவிகிறது. மேலும் குப்பைகளை கிடங்குகளில் கொட்டுவதற்கு இடம் இல்லை.

    நகரின் முக்கிய குப்பை கிடங்குகள் அனைத்தும் நிரம்பி விட்டன. குப்பைகளை சேகரித்து செல்லும் லாரிகளும் கொட்ட முடியாமல் பல மணி நேரம் காத்து நிற்கின்றன.

    சென்னையில் உள்ள பெரும்பாலான தெருக்கள், சாலைகளில் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. சூளைமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, தி.நகர், அரும்பாக்கம் போன்ற பல குடியிருப்பு பகுதிகளில் சாலையில் குப்பை அழுகி கிடக்கிறது. வீடுகளில், தெரு வீதிகளிலும் முறையாக குப்பை எடுக்காததால் கண்ட இடங்களில் குப்பைகளை மக்கள் கொட்டி வருகின்றனர்.

    குப்பைகளை மாற்றம் செய்யக்கூடிய நிலையங்களில் தேங்கி கிடப்பதால் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.

    ஒவ்வொரு பகுதியிலும் குப்பைகள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் தேங்கி வருவதால் அகற்றுவதில் சுணக்கம் ஏற்படுகிறது.

    புளியந்தோப்பில் உள்ள குப்பை மாற்றும் மையங்களில் குப்பை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. கொட்டுவதற்கு இடம் இல்லாததால் தாமதம் ஆகிறது.

    மேலும் திருமண மண்டபங்கள், திரையரங்குகள், மால்கள் போன்றவற்றின் இடங்களில் உருவாகும் மொத்த கழிவுகளை சேகரிக்க ஊழியர்கள் பணிக்கு வராததால் அவர்கள் தங்கள் கழிவுகளை சாலைகளில் கொட்டி வருகிறார்கள்.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "திடக்கழிவுகளை பிரிப்பது அல்லது பதப்படுத்துவது பற்றி மாநகராட்சி தற்போது சிந்திக்கவில்லை. சாலைகளில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம். மற்ற மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரம் பணியாளர்களை இந்த பணியில் கூடுதலாக நியமித்துள்ளோம். சாலையில் உள்ள அனைத்து கழிவுகளையும் நாங்கள் சேகரித்தவுடன் சில கழிவுகளை மறுசுழற்சிக்காக பொருள் மீட்பு மையத்திற்கு அனுப்புவோம்" என்றார்.

    • சங்கிலிபாறை, பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • பக்தர்கள் அடிவார நுழைவு வாயிலில் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு சென்றனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பிரசித்தி பெற்ற சுந்தர சந்தன மகாலிங்க கோவில் உள்ளது. சித்தர்கள் வழிபட்டதாக கூறப்படும் இக்கோவிலுக்கு செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி பகுதியில் மழை பெய்யும் சூழல் இருந்தது. இதன் காரணமாக கார்த்திகை மாத அமாவாசைக்கு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சதுரகிரி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மலை பகுதியில் எலும்போடை, மாங்கனியோடை, சங்கிலிபாறை, பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மேலும் சில இடங்களில் திடீர் காட்டாற்று வெள்ளமும் உருவானது. தடையை அறியாத வெளிமாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் அமாவாசையான இன்று அதிகாலை அடிவாரத்தில் குவிந்தனர்.

    அப்போது அங்கிருந்த வனத்துறை போலீசார் மழை பெய்வதால் மலையேற அனுமதியில்லை என தெரிவித்தனர். இதனால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் அடிவார நுழைவு வாயிலில் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு சென்றனர். சிலர் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியதையும் காண முடிந்தது.

    • பொதுமக்களின் ஆவணங்கள், சான்றிதழ்கள் இழந்து வேலையிழந்து தவித்து வருகிறார்கள்.
    • பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்பதில் அரசு சார்பில் நிவாரண பணிகள் போதுமானதாக இல்லை.

    அரூர்:

    தருமபுரி மாவட்ட இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அரூரில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவர் தமிழரசன் அரூருக்கு வருகை தந்தார்.

    முன்னதாக செ.கு.தமிழரசன் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதில் கடந்த 10 நாட்களுக்கு மேல் சென்னை மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளிலும் கடலூர் தொகுதிகளிலும் எதிர்பாராத அளவிற்கு கடும் மழை புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    வீடுகளில் தண்ணீர் புகுந்து, பொதுமக்களின் ஆவணங்கள், சான்றிதழ்கள் இழந்து வேலையிழந்து தவித்து வருகிறார்கள்.


    பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்பதில் அரசு சார்பில் நிவாரண பணிகள் போதுமானதாக இல்லை. எனவே, நிவாரண பணிகளை உடனடியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஒவ்வொரு ரேசன் கார்டு தாரர்களுக்கும் தலா ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்திய குடியரசு கட்சி வலியுறுத்துகிறது.

    இனிவரும் காலங்களிலே இப்படிப்பட்ட அவலங்கள் ஏற்படாமல் இருக்க நிரந்தர தீர்வுகளை காண நல்லத்திட்டங்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.

    திருமாவளவன் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசு வழக்கறிஞர் பணிக்கு உள்இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு உயர்நீதிமன்றதால் தள்ளுபடி செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து இப்போது இருக்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசிலும் இது நடக்கவில்லை. கேட்டால் இதற்கு சட்டத்தில் இடமில்லை என்கிறார்கள். இப்போது மாநில அரசு வழங்குகிற இட ஒதுக்கீடு 18 சதவீதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் 1 சதவீதம் பழங்குடியின மக்களுக்கு 1969 முதல் வழங்கப்படுகிறது.

    தற்போது அரை நூற்றாண்டு கடந்து விட்ட நிலையில் மக்கள் தொகை கூடிவிட்டது, ஆகையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 19சதவீதமும், குறைந்தபட்சம் 22 சதவீதமும், மலைவாழ் மக்களுக்கு 1 சதவீதம் குறைந்தபட்சம் 2சதவீதம் ஆக இட ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்.

    தி.மு.க. அரசுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான உண்மையான சமூக கல்வி பொருளாதார இந்த வளர்ச்சியில் அக்கறை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10,11,12,13,14 வார்டுகளை சேர்ந்தவர்கள்- 46, மேற்கு மாடவீதி, திருவொற்றியூர்.
    • 145, 148, 149, 152 வார்டுகளை சேர்ந்தவர்கள் சி.வி. கோவில் தெரு, ஆழ்வார்திரு நகர்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாவட்டத்தில், மிச்சாங் புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தி, பொதுமக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

    இதைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களில் ( 1 முதல் 15 வரை) உள்ள கீழ்கண்ட 46 பகுதி அலுவலகங்களில் நாளை (செவ்வாய்க் கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    1,2,3,4 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.606, கே.எச்.ரோடு, எண்ணூர் என்ற இடத்தில் நடைபெறும் முகாமில் சான்றிதழ்களை பெறலாம்.

    மேலும் சான்றிதழ்கள் வழங்கப்படும் இடங்களும், வார்டுகளும் வருமாறு:-

    5,6,7,8,9 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.5/17, எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு, மஸ்தான் கோவில் தெரு, கக்கன்ஜி நகர், திருவொற்றியூர்.

    10,11,12,13,14 வார்டுகளை சேர்ந்தவர்கள்- 46, மேற்கு மாடவீதி, திருவொற்றியூர்.

    15,16,17 வார்டுகளை சேர்ந்தவர்கள்- ஆண்டார் குப்பம் செங்குன்றம் ஹைரோடு, ஜங்சன் டி.பி.பி. சாலை, மணலி.

    18,19,20,21,22 வார்டுகளை சேர்ந்தவர்கள்- 127, பட சாலை தெரு, மணலி.

    23,24,32 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.1, காந்தி முதல் தெரு, புழல்.

    25,26,27,28 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.1, பெருமாள் கோவில் மெயின் ரோடு, மாதவரம் பஸ் நிலையம் அருகில்.

    29,30,31,33 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.1, எம்.ஆர்.எச். ரோடு, மாதவரம்.

    34,35,36,37,38 வார்டுகளை சேர்ந்தவர்கள்- சர்மா நகர், யு.பி.சி. மருத்துவமனை.

    39,40,41,42,43 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.600, திருவொற்றியூர் ஹைரோடு, கிருஷ்ணமூர்த்தி தெரு, தண்டையார்பேட்டை.

    44,45,46,47,48 வார்டுகளை சேர்ந்தவர்கள்- 96, பார்த்த சாரதி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை.

    49,50,51,52,53 (எல்.எப்.இசட்) வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.6/86, பெரம் பாலு தெரு, பழைய வண்ணாரப்பேட்டை.

    54,55,56,57,60 வார்டுகளை சேர்ந்தவர்கள்- 28, சண்முகம் தெரு, ஏழுகிணறு தெரு, ஏழுகிணறு, ஜார்ஜ் டவுன்.

    58,59,61,62,63 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.2, ஆதி கேசவலு தெரு, சிந்தாதிரிபேட்டை.

    64,65,69 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.45/107, எஸ்.ஆர்.பி. கோவில் தெரு (தெற்கு), அகரம்.

    66,67,68,70 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.32, ஜவகர் நகர், 3-வது சர்கிள், 2-வது குறுக்குத் தெரு, பெரவள்ளுர்.

    71,72,73,74,75,76,77,78 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.50, அருணாச்சலம் தெரு, கொசப்பேட்டை, 5 லைட் அருகில்.

    79,80,81,82,83 வார்டுகளை சேர்ந்தவர்கள்- வடக்கு பூங்கா தெரு, வெங்கடபுரம், அம்பத்தூர்.

    84,85,86,87,88 வார்டுகளை சேர்ந்தவர்கள்- சர்ச் ரோடு, பாடி.

    89,90,91,92,93 வார்டுகளை சேர்ந்தவர்கள்- சீதக்காதி சாலை, முகப்பேர் கிழக்கு, இ-சேவை மையம்.

    94,95,96,97,104 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.4, யுனைடெட் இந்தியா நகர், முதல் பிரதான சாலை, பாலவாயல் மார்க்கெட் அருகில், அயனாவரம்.

    102, 103, 105, 106, 107 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.124,கேபிளாக், அண்ணா நகர், 2-வது மெயின் ரோடு.

    98, 99, 100, 101, 108 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.4, கோவில் தெரு, கீழ்பாக்கம்.

    109, 110, 111, 118, 119 வார்டுகளை சேர்ந்தவர்கள்-எண்.9, சி.ஐ.டி. காலனி, 6-வது குறுக்குத் தெரு, மைலாப்பூர்.

    123, 124, 125, 126 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.1, சித்திரக்குளம் தெற்கு தெரு, மைலாப்பூர்.

    112, 113, 117, 122 வார்டு களை சேர்ந்தவர்கள்- ஆலயம்மன் கோவில் தெரு, தேனாம்பேட்டை.

    114, 115, 116, 120, 121 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.12, துளசிங்கம் பெருமாள் கோவில், 2-வது சந்து, திருவல்லிக்கேணி.

    136, 137, 138, 139 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.27, 61வது தெரு, 10-வது செக்டர், கே.கே.நகர்.

    127, 128, 129, 130 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.2 அம்மன் கோவில் தெரு, வடபழனி.

    133, 140, 141, 142 வார்டுகளை சேர்ந்தவர்கள்- 12, மாசிலாமணி தெரு, தியாகராய நகர்.

    131, 132, 134, 135 வார்டுகளை சேர்ந்தவர்கள்- க.எண்.1, கார்பரேஷன் காலனி ரோடு, கோடம்பாக்கம்.

    143, 144, 146, 147 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எம்.எம்.டி.ஏ. 6-வது பிளாக், 33-வது தெரு, மதுரவாயல்.

    145, 148, 149, 152 வார்டுகளை சேர்ந்தவர்கள் சி.வி. கோவில் தெரு, ஆழ்வார்திரு நகர்.

    150, 151, 153, 154, 155 வார்டுகளை சேர்ந்தவர்கள் மவுண்ட் பூந்தமல்லி சாலை, போரூர்.

    156, 157, 158, 159 வார்டுகளை சேர்ந்தவர்கள்- வார்டு அலுவலகம், கோட்டம்-156, அரசு உயர்நிலைப் பள்ளி பாடசாலை, முகலிவாக்கம்.

    160, 161, 162, 163 வார்டுகளை சேர்ந்தவர்கள்- சூப்பர் பஜார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், புதுத் தெரு, ஆலந்தூர்.

    164, 165, 166, 167 வார்டுகளை சேர்ந்தவர்கள்- வார்டு அலுவலகம், கோட்டம்-165. ராம் நகர், 8-வது தெரு, நங்கநல்லூர்.

    174, 179, 180 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.2, 8-வது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், தெற்கு அவென்யு சாலை, திருவான்மியூர்.

    176, 177, 178 வார்டுகளை சேர்ந்தவர்கள்- 65, வேளச்சேரி மெயின்ரோடு, வேளச்சேரி,

    169, 170, 171, 173 வார்டுகளை சேர்ந்தவர்கள்-115, டாக்டர் முத்துலெட்சுமி சாலை, அடையாறு.

    168, 172, 175 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.92, மகாலட்சுமி நகர், ஆதம்பாக்கம்.

    181, 182, 183, 184 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.2, ஸ்கூல் ரோடு, கந்தஞ்சாவடி, கோட்டம்- 182, வார்டு அலு வலகம், பெருங்குடி.

    185, 186, 187, 188 வார்டுகளை சேர்ந்தவர்கள்- கோட்டம்- 188, வார்டு அலுவலகம் எண்.1, டாக்டர் அம்பேத்கர் சாலை, மடிப்பாக்கம்.

    189, 190, 191 வார்டுகளை சேர்ந்தவர்கள்- கோட்டம்- 189, வார்டு அலுவலகம் எண்.1, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, பள்ளிக்கரணை.

    192, 194, 197, 199 வார்டுகளை சேர்ந்தவர்கள்- கோட்டம்- 194, வார்டு அலுவலகம், எண். 14, வி.ஓ.சி. தெரு, ஈஞ்சம்பாக்கம்.

    193, 195, 196, 198, 200 வார்டுகளை சேர்ந்தவர்கள்-கோட்டம்- 196, வார்டு அலுவலகம் கண்ணகி நகர் 8-வது பிரதான சாலை, துரைப்பாக்கம்.

    சிறப்பு முகாம்கள் நாளை தொடங்கி தினந்தோறும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடைகளில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.
    • பள்ளத்தை உடனே மூடி இந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் ஏற்பட்ட புயல் மழை காரணமாக கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து 2 நாட்கள் பெய்த பலத்த மழையால் சூளைமேடு பகுதியில் பல தெருக்களை வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக அண்ணா நெடும்பாதை, நேரு தெரு, 3-வது சந்து, சுப்பராயன் தெரு, ஆண்டவர் தெரு, ராஜ வீதி, பெரியார் பாதை உள்ளிட்ட பல தெருக்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து 4 நாட்கள் வரை தேங்கி நின்றது. பல வீடுகளில் சுமார் 6 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    மேலும் அண்ணா நெடும்பாதையில் உள்ள பல கடைகளுக்குள்ளேயும் இடுப்பளவுக்கு தண்ணீர் புகுந்து 2 நாட்கள் தேங்கி நின்றது. இதனால் கடைகளில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. இது மார்க்கெட் பகுதி என்பதால் மளிகை கடைகள், காய்கறி கடைகள், துணிக்கடைகள், இறைச்சி கடைகள், மருந்து கடைகள், ஆஸ்பத்திரி வளாகம் என பல கடைகளிலும் தண்ணீர் புகுந்தது. இந்த பகுதிகளில் தேங்கிய தண்ணீர் மோட்டார் மூலம் அகற்றப்பட்டது.

    நேரு தெருவில் 4 நாட்களாக வெள்ளம் வடியாததால் ராட்சத மோட்டார் மூலம் வெள்ளத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக அண்ணா நெடும்பாதை நேரு தெரு சந்திப்பில் சாலை ஓரத்தில் உள்ள மழைநீர் கால்வாயை உடைத்து பெரிய அளவில் பள்ளம் தோண்டி தண்ணீரை அகற்றும் பணி நடந்தது.

    அந்த பகுதியில் தண்ணீரை வெளியேற்றிய பிறகு சாலை ஓரத்தில் உள்ள பெரிய பள்ளத்தை மூடாமல் ஊழியர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த பள்ளத்தாலும், அதில் தோண்டிய மண்ணை சாலை ஓரத்திலேயே போட்டு வைத்திருப்பதாலும் அண்ணா நெடும்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    மேலும் இது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பள்ளத்தை உடனே மூடி இந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

    • சாலை மிச்சாங் புயலினால் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்பட்டது.
    • கவுன்சிலர் சுமித்ரா குமார் போக்குவரத்திற்கு தற்காலிகமாக சீர் செய்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சி பழவேற்காடு காட்டுப்பள்ளி ஒன்றிய சாலை மிச்சாங் புயலினால் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்பட்டது.

    இதனை அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு சமரசம் பேசி சாலையில் மணல் கொட்டி கவுன்சிலர் சுமித்ரா குமார் போக்குவரத்திற்கு தற்காலிகமாக சீர் செய்தார்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது

    ×