search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீர் தட்டுப்பாடு"

    • டாஸ்மாக் கடைகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பீர் விற்பனை அதிகரித்து வருகிறது.
    • கடந்த 3 நாட்களாக பீர் கேட்டால் இல்லை என்ற பதில் தான் வருகிறது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டாரத்தில் ஈங்கூர், வெள்ளோடு, பெருந்துறை ஆர்.எஸ். உட்பட 14 இடங்களில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகிறது.

    தற்போது கோடை வெயில் வெழுத்து வாங்குவதாலும், 109 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருப்பதாலும், டாஸ்மாக் கடைகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பீர் விற்பனை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் சென்னிமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் திடீரென பீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக பீர் கேட்டால் இல்லை என்ற பதில் தான் வருகிறது. இதனால் குடிமகன்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல கடைகளில் தேடி அழைந்தும் பீர் கிடைக்காத விரக்தியில் சரக்கு குடித்து செல்கின்றனர்.

    மேலும் டாஸ்மாக் கடைகளில் உயர் ரக சரக்குகள் வரவு அதிகரித்துள்ளதாலும், "குடிமகன்கள்" விரும்பும் சரக்குகள் கிடைப்பதில்லை. குடிமகன்கள் விரும்பி கேட்கும் பிராண்டுகள் படிப்படியாக குறைந்து விட்டன.

    விலை அதிகரிப்பு உள்ள சரக்குகள் தான் கிடைக்கின்றன. என்ற குற்றசாட்டுகள் நீண்ட நாட்களாக உள்ள நிலையில், தற்போது பீர் பிரியர்களும் குளு குளு பீர் வகைகள் கிடப்பதே இல்லை என குறைபட்டு கொள்கின்றனர்.

    டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுபாடு இன்றி கிடைக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிராம பகுதியில் உள்ள மதுக்கடைகளில் பீர் முழுமையான அளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • பல சிறிய மற்றும் நடுத்தர பீர் உற்பத்தி நிறுவனங்கள் நிதி நெருக்கடியை மேற்கொண்டுள்ளன.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது வெப்பநிலை உயர்ந்து வருகிறது.

    இதனால் மது பிரியர்கள் அதிக அளவில் பீர் குடிக்க தொடங்கி விட்டனர். இந்த நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிராம பகுதியில் உள்ள மதுக்கடைகளில் பீர் முழுமையான அளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இது குறித்து மதுக்கடை ஊழியர்கள் கூறுகையில்:-

    தெலுங்கானா மாநிலத்தில் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மதுபான ஆலைகளுக்கு ரூ.1000 கோடி நிலுவைத் தொகை உள்ளது. ஆனால் கலால் துறை ரூ.100 கோடி மட்டுமே செலுத்தி உள்ளது.

    இதனால் கடந்த சில மாதங்களாக பீர் உற்பத்தி செய்ய முடியவில்லை.

    பல சிறிய மற்றும் நடுத்தர பீர் உற்பத்தி நிறுவனங்கள் நிதி நெருக்கடியை மேற்கொண்டுள்ளன. இதனால் மது கடைகளுக்கு பீர் சப்ளையை படிப்படியாக குறைத்துள்ளன.

    மாநிலத்தில் பெருமளவில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு கலால்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதியில் 14 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
    • கோடை வெயில் காலம் என்பதால் மது பிரியர்களுக்கு பீர் மீது மோகம் அதிகரித்துள்ளது.

    அம்மாப்பேட்டை:

    அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதியில் உள்ள குருவரெட்டியூர், கோனேரிப்பட்டி பிரிவு, பூனாச்சி, முளியனூர், ஒலகடம், வெள்ளித்திருப்பூர், பட்லூர், நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 14 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

    ஒவ்வொரு கடை களிலும் நாள் ஒன்றுக்கு தலா 250 பீர்கள் என அனைத்து கடைகளிலும் சேர்ந்து சுமார் 3 ஆயிரம் பீர்கள் விற்பனை நடைபெறுகிறது.

    தற்போது கோடை காலம் என்பதால் மதுப்பிரியர்கள் அதிகம் பீர் வகை மதுவை வாங்கி குடிக்கின்றனர். ஆனால் தற்போது ஒவ்வொரு கடைக்கும் வரும் பீர் பாட்டில்கள் வந்து 2 மணி நேரம் 3 மணி நேரத்திலேயே முழுவதும் விற்பனையாகி விடுகிறது.

    3 நாளைக்கு ஒரு முறை தான் பீர் பாட்டில்கள் கடைகளுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலில் குளிர்ந்த பீர் அருந்த விரும்பும் மது பிரியர்களும் ஏமாற்றத்திற்கு உள்ளாகின்றனர்.

    இது குறித்து மது பிரியர்கள் கூறுகையில்,

    வழக்கமாக மது அருந்துபவர்களை விட பீர் வகை மது அருந்துபவர்கள் குறைந்த அளவே இருக்கிறோம். அதிலும் சிலர் என்றாவது ஒருநாள் மட்டுமே பீர் அருந்தும் பழக்கத்தை உடையவர்களாக உள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் தற்போது கோடை வெயில் காலம் என்பதால் மது பிரியர்களுக்கு பீர் மீது மோகம் அதிகரித்துள்ளது.

    இந்த சூழ்நிலையில் அனைத்து கடைகளிலும் பீர் பற்றாக்குறை என்பது எங்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. எனவே பீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அரசு வழிவகை செய்து உதவி செய்ய வேண்டும் மது பிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.

    • மது பிரியர்கள் பீர் குடிப்பதில் அதிக நாட்டம் செலுத்தி வருகின்றார்கள்.
    • அந்தியூர் பகுதிகளில் பீர் பாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தவிட்டுப்பாளையம், பச்சாம்பாளையம்,மூலக்கடை, பிரம்மதேசம் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் மது பிரியர்கள் பீர் குடிப்பதில் அதிக நாட்டம் செலுத்தி வருகின்றார்கள்.

    இதனால் அந்தியூர் பகுதிகளில் செயல்படும் கடைகளில் பீர் பாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் மது பிரியர்கள் 160 ரூபாய் விலைக்கு விற்க கூடிய பீர் பாட்டிலை 220 ரூபாய் கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையோடு தெரி விக்கின்றார்கள்.

    மேலும் தினமும் நாங்கள் கூலி வேலைக்கு சென்று வருகின்றோம்.

    இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது உடம்பிற்கு உஷ்ணத்தை போக்கும் வகையில் பீர்குடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி நாங்கள் பீர் வாங்க டாஸ்மார்க் கடைக்கு சென்றால் அங்கு தற்போது இருப்பு இல்லை என்று கூறி விடுகின்றார்கள்.

    இதனால் வெளியிடங்களில் விற்கப்படும் பீர் பாட்டிலை அதிக விலை கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    தற்போது வெயில் காலம் முடியும் வரை பீர் பாட்டில் அதிக அளவில் டாஸ்மாக்கடை களுக்கு இறக்குமதி செய்து கூலித்தொழி லாளர்களின் வருமானத்திற்கு ஏற்றார் போல் டாஸ்மாக் கடைகளிலேயே கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மது பிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பீர் கிடைக்காத விரக்தியில் மது குடித்து செல்கின்றனர்.
    • குடிமகன்கள் விரும்பும் மதுவகைகள் கிடைப்பதில்லை.

    சென்னிமலை:

    சென்னிமலை வட்டா ரத்தில் ஈங்கூர், வெள்ளோடு, பெருந்துறை ஆர்.எஸ். உள்பட 14 இடங்களில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகிறது.

    தற்போது கோடை வெயில் 104 டிகிரிக்கு மேல் இருப்பதால் டாஸ்மாக் கடைகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பீர் விற்பனை அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக பாட்டில் பீர் கேட்டால் டின் பீர், டின் பீர் கேட்டால் பாட்டில் பீர் என கிடைத்து வந்தது. கடந்த 3 நாட்களாக எந்த பீர் வகைகளும் கிடைக்கவில்லை.

    குடிமக ன்களும் பல கடைகளில் தேடி அழைந்து பீர் கிடைக்காத விரக்தியில் மது குடித்து செல்கின்றனர். மேலும் டாஸ்மாக் கடைகளில் உயர் ரக மதுபா னங்கள் வரவு அதிகரி த்துள்ளதாலும் குடிமகன்கள் விரும்பும் மதுவகைகள் கிடைப்பதில்லை.

    குடிமகன்கள் விரும்பி கேட்கும் பிராண்டுகள் படிப்படியாக குறைந்து விட்டன. விலை அதிகரிப்பு, உள்ள மதுபானங்கள் தான் கிடைக்கின்றன என்ற குற்றசாட்டுகள் நீண்ட நாட்களாக உள்ள நிலையில், தற்போது பீர் பிரியர்களும் மன வேதனை அடைந்துள்ளனர்.

    தட்டுபாடு மற்றும் பீர் கிடைக்காமல் அவதியுறுகின்றனர். அதிலும் கேட்ட பீர் வகைகள் கிடைப்பதே இல்லை என குறைபட்டு கொள்கின்றனர். 

    ×