search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் கடைகளில்"

    • கடை பணியாளர்களின் இருப்பிடங்களுக்கு எடுத்து செல்லுதல் கூடாது.
    • உட்புறம் பூட்டிய நிலையில் வைத்து மது விற்பனை செய்ய வேண்டும்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மோகனசுந்தரம் மாவட்ட த்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மேற்பார்வை யாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டாஸ்மாக் கடைகளின் விற்பனை தொகை இருப்பை பண பாதுகாப்பு பெட்டியில் தினமும் வைத்து பூட்ட வேண்டும். கடை பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டியில் வைக்காமல், கடை மேஜை இருப்பறை, காலி அட்டை பெட்டிகள், கடை பணியாளர்களின் இருப்பிடங்க ளுக்கு எடுத்து செல்லுதல் கூடாது.

    விற்பனை நேரங்களில் கடைகளுக்கு முன் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கிரில் கேட்டை பூட்டாமல் விற்பனை செய்வதால் வெளி நபர், மர்ம நபர்கள் கடையினுள் புகுந்து பணியாளர்களை தாக்கும் சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது.

    எனவே, கடை இயங்கும் நேரமான மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கடையின் இரும்பு கிரில் கேட்டை உட்புறம் பூட்டிய நிலையில் வைத்து மது விற்பனை செய்ய வேண்டும்.

    கடை பணியாளர்கள் விற்பனை தொகையை பண பாதுகாப்பு பெட்டியில் வைக்காமல் வீட்டுக்கு எடுத்து செல்லும்போது ஏற்படும் அசம்பாவித செயலுக்கு நிர்வாகம் பொறுப்பாகாது.

    விற்பனை தொகை இழப்பீட்டுக்கு காப்பீடு தொகை வழங்க இயலாது. மதுபான கடையின் 21 பதிவேடுகளை நடப்பு தேதி வரை முழுமையாக பதிவிட்டிருக்க வேண்டும்.

    இந்நடைமுறை தவறும்பட்சத்தில் நட வடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதியில் 14 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
    • கோடை வெயில் காலம் என்பதால் மது பிரியர்களுக்கு பீர் மீது மோகம் அதிகரித்துள்ளது.

    அம்மாப்பேட்டை:

    அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதியில் உள்ள குருவரெட்டியூர், கோனேரிப்பட்டி பிரிவு, பூனாச்சி, முளியனூர், ஒலகடம், வெள்ளித்திருப்பூர், பட்லூர், நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 14 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

    ஒவ்வொரு கடை களிலும் நாள் ஒன்றுக்கு தலா 250 பீர்கள் என அனைத்து கடைகளிலும் சேர்ந்து சுமார் 3 ஆயிரம் பீர்கள் விற்பனை நடைபெறுகிறது.

    தற்போது கோடை காலம் என்பதால் மதுப்பிரியர்கள் அதிகம் பீர் வகை மதுவை வாங்கி குடிக்கின்றனர். ஆனால் தற்போது ஒவ்வொரு கடைக்கும் வரும் பீர் பாட்டில்கள் வந்து 2 மணி நேரம் 3 மணி நேரத்திலேயே முழுவதும் விற்பனையாகி விடுகிறது.

    3 நாளைக்கு ஒரு முறை தான் பீர் பாட்டில்கள் கடைகளுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலில் குளிர்ந்த பீர் அருந்த விரும்பும் மது பிரியர்களும் ஏமாற்றத்திற்கு உள்ளாகின்றனர்.

    இது குறித்து மது பிரியர்கள் கூறுகையில்,

    வழக்கமாக மது அருந்துபவர்களை விட பீர் வகை மது அருந்துபவர்கள் குறைந்த அளவே இருக்கிறோம். அதிலும் சிலர் என்றாவது ஒருநாள் மட்டுமே பீர் அருந்தும் பழக்கத்தை உடையவர்களாக உள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் தற்போது கோடை வெயில் காலம் என்பதால் மது பிரியர்களுக்கு பீர் மீது மோகம் அதிகரித்துள்ளது.

    இந்த சூழ்நிலையில் அனைத்து கடைகளிலும் பீர் பற்றாக்குறை என்பது எங்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. எனவே பீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அரசு வழிவகை செய்து உதவி செய்ய வேண்டும் மது பிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.

    • பீர் கிடைக்காத விரக்தியில் மது குடித்து செல்கின்றனர்.
    • குடிமகன்கள் விரும்பும் மதுவகைகள் கிடைப்பதில்லை.

    சென்னிமலை:

    சென்னிமலை வட்டா ரத்தில் ஈங்கூர், வெள்ளோடு, பெருந்துறை ஆர்.எஸ். உள்பட 14 இடங்களில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகிறது.

    தற்போது கோடை வெயில் 104 டிகிரிக்கு மேல் இருப்பதால் டாஸ்மாக் கடைகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பீர் விற்பனை அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக பாட்டில் பீர் கேட்டால் டின் பீர், டின் பீர் கேட்டால் பாட்டில் பீர் என கிடைத்து வந்தது. கடந்த 3 நாட்களாக எந்த பீர் வகைகளும் கிடைக்கவில்லை.

    குடிமக ன்களும் பல கடைகளில் தேடி அழைந்து பீர் கிடைக்காத விரக்தியில் மது குடித்து செல்கின்றனர். மேலும் டாஸ்மாக் கடைகளில் உயர் ரக மதுபா னங்கள் வரவு அதிகரி த்துள்ளதாலும் குடிமகன்கள் விரும்பும் மதுவகைகள் கிடைப்பதில்லை.

    குடிமகன்கள் விரும்பி கேட்கும் பிராண்டுகள் படிப்படியாக குறைந்து விட்டன. விலை அதிகரிப்பு, உள்ள மதுபானங்கள் தான் கிடைக்கின்றன என்ற குற்றசாட்டுகள் நீண்ட நாட்களாக உள்ள நிலையில், தற்போது பீர் பிரியர்களும் மன வேதனை அடைந்துள்ளனர்.

    தட்டுபாடு மற்றும் பீர் கிடைக்காமல் அவதியுறுகின்றனர். அதிலும் கேட்ட பீர் வகைகள் கிடைப்பதே இல்லை என குறைபட்டு கொள்கின்றனர். 

    ×