search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மாபேட்டை பகுதியில்"

    • கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைக்கிறது.
    • இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

    அம்மாபேட்டை:

    பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில் பவானி கோட்டம் கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மாப்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சின்னப்பள்ளம், சிங்கம்பேட்டை, ஆனந்தம்பாளையம், காடப்பநல்லூர், சித்தார், கேசரிமங்கலம், குட்டமுனியப்பன் கோயில், கல்பாவி, குறிச்சி, பூதப்பாடி, எஸ்.பி.கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

    • அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதியில் 14 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
    • கோடை வெயில் காலம் என்பதால் மது பிரியர்களுக்கு பீர் மீது மோகம் அதிகரித்துள்ளது.

    அம்மாப்பேட்டை:

    அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதியில் உள்ள குருவரெட்டியூர், கோனேரிப்பட்டி பிரிவு, பூனாச்சி, முளியனூர், ஒலகடம், வெள்ளித்திருப்பூர், பட்லூர், நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 14 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

    ஒவ்வொரு கடை களிலும் நாள் ஒன்றுக்கு தலா 250 பீர்கள் என அனைத்து கடைகளிலும் சேர்ந்து சுமார் 3 ஆயிரம் பீர்கள் விற்பனை நடைபெறுகிறது.

    தற்போது கோடை காலம் என்பதால் மதுப்பிரியர்கள் அதிகம் பீர் வகை மதுவை வாங்கி குடிக்கின்றனர். ஆனால் தற்போது ஒவ்வொரு கடைக்கும் வரும் பீர் பாட்டில்கள் வந்து 2 மணி நேரம் 3 மணி நேரத்திலேயே முழுவதும் விற்பனையாகி விடுகிறது.

    3 நாளைக்கு ஒரு முறை தான் பீர் பாட்டில்கள் கடைகளுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலில் குளிர்ந்த பீர் அருந்த விரும்பும் மது பிரியர்களும் ஏமாற்றத்திற்கு உள்ளாகின்றனர்.

    இது குறித்து மது பிரியர்கள் கூறுகையில்,

    வழக்கமாக மது அருந்துபவர்களை விட பீர் வகை மது அருந்துபவர்கள் குறைந்த அளவே இருக்கிறோம். அதிலும் சிலர் என்றாவது ஒருநாள் மட்டுமே பீர் அருந்தும் பழக்கத்தை உடையவர்களாக உள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் தற்போது கோடை வெயில் காலம் என்பதால் மது பிரியர்களுக்கு பீர் மீது மோகம் அதிகரித்துள்ளது.

    இந்த சூழ்நிலையில் அனைத்து கடைகளிலும் பீர் பற்றாக்குறை என்பது எங்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. எனவே பீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அரசு வழிவகை செய்து உதவி செய்ய வேண்டும் மது பிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.

    ×