search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிபோர்ஜோய்"

    • குஜராத் முதலமைச்சருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
    • குஜராத்தில் புயலின் சேதம் குறித்து ஆய்வு செய்த பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்தார்.

    அரபிக்கடலில் கடந்த 5-ந் தேதி உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக உருமாறியது. இது நேற்று மாலை குஜராத் மாநிலம் ஜாகவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது.

    பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்டது. இங்குள்ள கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ராட்சத மரங்களும் வேரோடு சரிந்து விழுந்தது.

    சிறியதும், பெரியதுமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தது. மேலும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் இடிந்ததில் அப்பகுதியில் இருந்த வாகனங்களும் சேதமானது.

    இதைதொடர்ந்து, புயலால் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குஜராத் முதலமைச்சருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

    குஜராத்தில் புயலின் சேதம் குறித்து ஆய்வு செய்த பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- பிபர்ஜாய் புயலால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. புயல் காரணமாக 47 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 234 விலங்குகள் உயிரிழந்துள்ளனர்.

    1,600 கிராமங்களில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது மற்றும் ஜூனாகத் மற்றும் போர்பந்தர் மாவட்டங்களில் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது.

    பயிர்கள், பழத்தோட்டங்கள் மற்றும் மீன்பிடி படகுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து மாநில அரசு விரைவில் கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணப் தொகை குறித்து அறிவிக்கும்.

    புயலை எதிர்கொள்ள மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து வெற்றிகரமாக செயல்பட்டன.

    முகாமில் தங்க வைக்கப்பட்டவர்கள் ஓரிரு நாட்களில் அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சகம், குஜராத் அரசு மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் தொடர்ந்து வழிகாட்டி வருகிறார். இந்த பேரழிவிலிருந்து குறைந்தபட்ச சேதத்துடன் வெளிவருவது பயனுள்ள குழுப்பணிக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 1,171 கர்ப்பிணி பெண்களில் 1,152 கர்ப்பிணி பெண்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
    • கரையோரத்தில் வசித்து வந்த சுமார் ஒரு லட்சம் பேரை வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    அரபிக்கடலில் கடந்த 5-ந் தேதி உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக உருமாறியது. இது நேற்று மாலை குஜராத் மாநிலம் ஜாகவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது.

    புயலின் மையப்பகுதி நேற்று நள்ளிரவில் கரையை கடந்த போது ஜாகவ் துறைமுக பகுதியில் 125 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. புயல் கரையை கடக்கும்போது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான கடலோர கிராம மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

    பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இங்குள்ள கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ராட்சத மரங்களும் வேரோடு சரிந்து விழுந்தது. சிறியதும், பெரியதுமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தது. மேலும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் இடிந்ததில் அப்பகுதியில் இருந்த வாகனங்களும் சேதமானது.

    புயல் முன்னெச்சரிக்கை காரணமாக ஜாகவ், பவ் மாவட்டங்களை சேர்ந்த 1000 கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

    இவ்வளவு இடர்பாடுக்கு மத்தியில், பிபோர்ஜோய் புயலின்போது குஜராத்தில் 700 குழந்தைகள் பிறந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கரையோரத்தில் வசித்து வந்த சுமார் ஒரு லட்சம் பேரை வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதில் எட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 1,171 கர்ப்பிணி பெண்களில் 1,152 கர்ப்பிணி பெண்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதில், 707 கர்ப்பிணி பெண்கள் வெற்றிகரமாக குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.

    குறிப்பாக கட்ச் மாவட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 308 குழந்தைகள் பிறந்துள்ளன. ராஜ்கோட் மாவட்டத்தில் நூறு குழந்தைகளும், தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் 93 குழந்தைகளும் பிறந்துள்ளன.

    இதுகுறித்து குஜராத் அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கைியல், " குஜராத் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் 707 குழந்தைகள் வெற்றிகரமாக பிறந்துள்ளன. புயல் எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 302 அரசு வாகனங்கள் மற்றும் 202 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன. ஒவ்வொன்றும் மருத்துவ பணியாளர்களுடன், இரவும் பகலும் விடாமுயற்சியுடன் பணியாற்றின" என்று குறிப்பிட்டிருந்தது.

    • பாகிஸ்தானில் உள்ள மூன்று மாவட்டங்களின் ஏழு தாலுகாக்களில் வசிக்கும் 71,380 பேரில் இதுவரை 56,985 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
    • 64 மீனவர்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருக்கும் 'பிபோர்ஜோய்' அதிதீவிர புயல் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இன்று காலை நிலை கொண்டிருந்தது. இது நாளை (வியாழக்கிழமை) மாலை குஜராத்தின் ஜாக்ஹா துறைமுகப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதி தீவிர புயல் கரையை கடக்கும் போது பலத்த மழையும், பலத்த காற்றும் வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், பாகிஸ்தானில் உள்ள கடற்கரை நகரங்கள் மற்றும் சிறிய தீவுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பன இடங்களுக்கு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

    குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள மூன்று மாவட்டங்களின் ஏழு தாலுகாக்களில் வசிக்கும் 71,380 பேரில் இதுவரை 56,985 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    மேலும், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து வெளியேறினர். அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட பல்வேறு இடங்களில் 37 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

    ஷா பண்டாரின் பல்வேறு கிராமங்களில் இருந்து 700 பேரை ராணுவத்தினர் வெளியேற்றியதாகவும், 64 மீனவர்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.

    பலுசிஸ்தானின் கடலோரப் பகுதிகளிலும், ஹைதராபாத், ஷாஹீத் பெனாசிராபாத், சுக்கூர் மற்றும் சங்கர் உள்ளிட்ட சிந்துவின் கிராமப்புறங்களிலும் கடற்படை அவசரகால பதில் மற்றும் மருத்துவக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    • புயல் காரணமாக குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது.
    • புயல் நாளை மாலை கரையை கடக்கும் போது கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. அதன்பிறகு அது கடந்த 6-ந்தேதி புயலாக மாறியது. அந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    அந்த புயல் வடக்கு திசை நோக்கி கடந்த சில தினங்களாக நகர்ந்து வந்தது. இந்த நிலையில் அது தீவிர புயலாகவும், அதி தீவிர புயலாகவும் அடுத்தடுத்து மாறியது.

    வடகிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருக்கும் 'பிபோர்ஜோய்' அதிதீவிர புயல் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இன்று காலை நிலை கொண்டிருந்தது. இது நாளை (வியாழக்கிழமை) மாலை குஜராத்தின் ஜாக்ஹா துறைமுகப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதி தீவிர புயல் கரையை கடக்கும் போது பலத்த மழையும், பலத்த காற்றும் வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மணிக்கு 125 முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் நேற்று முதல் மிக பலத்த மழையும், மிக பலத்த சூறாவளி காற்றும் வீசத் தொடங்கியுள்ளது.

    இன்று (புதன்கிழமை) காலை முதல் பலத்த காற்றுடன் குஜராத் கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

    இதனால் குஜராத் கடலோர மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 95 ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    புயல் நாளை மாலை கரையை கடக்கும் போது கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து பேரிடர் மீட்பு குழுவின் 17 படை வீரர்கள் குஜராத் கடலோர பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    புயல் காரணமாக குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. புயல் அபாயம் உள்ள இதர மாவட்டங்களிலும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    6 மாநிலங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று இன்று காலை வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.

    புயல் கரையை கடக்கும் போது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. எனவே புயலை எதிர்கொள்வது தொடர்பாக குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

    மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் கடற்படை வீரர்கள் கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். கடற்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 40 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    • இந்திய வானிலை மைய அறிவிப்பு ராமேசுவரம் மீனவர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    தமிழக கடற்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    அதன்படி கடற்கரை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை வங்க கடலில் மீனவர்கள் மேற்கண்ட காலங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவதில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடற்கரையில் இருந்து சில மைல் தூரத்தில் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் வருகிற 14-ந்தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடை காலமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விசைப்படகு மீனவர்கள் வேலை இழந்தனர். இந்த காலகட்டங்களில் தங்களது படகு, வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நாளை மறுநாள் (14-ந்தேதி) இரவு டன் மீன்பிடி தடை காலம் முடிவடைகிறது. 2 மாதம் தடை முடியும் நிலையில் ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். படகுகளில் டீசல் நிரப்புவது, ஐஸ் கட்டிகளை இருப்பு வைப்பது போன்றவற்றில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் அரபி கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த சில நாட்கள் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    புயல் சின்னம் காரண மாக வருகிற 14-ந்தேதி வரை ராமேசுவரம் மீன வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த அறிவிப்பு ராமேசுவரம் மீனவர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புயல் சின்னத்தால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் மீன்பிடி தடைக் காலம் முடிந்து ராமேசுவரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மீன்பிடி தடை காலத்தில் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. அரசு கொடுத்த நிவாரண உதவியும் போதவில்லை. எனவே வேறு வேலைக்கு சென்றோம். வருகிற 14-ந்தேதி முதல் கடலுக்கு செல்ல தயாராகி வந்த நிலையில் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தனர்.

    ×