search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Storm symbol"

    • ஆந்திர பிரதேசம்-தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியை நோக்கி மெதுவாக நகர்கிறது.
    • அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    ஆந்திரா அருகே மத்திய மேற்கு அதனையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றிரவு உருவானது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது ஆந்திர பிரதேசம்-தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியை நோக்கி மெதுவாக நகர்கிறது.

    இது நாளை (புதன்) அல்லது வியாழக்கிழமை வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக காற்று மாறுபாடு ஏற்பட்டு தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டுடன் வட மாவட்டங்களில் 2 நாட்கள் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் பகலில் லேசான மழை பெய்யும்.

    மாலையில் இருந்து வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சில நேரங்களில் இடி மின்னலுடன் மழை கொட் டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் இரவில் பரவலாக மழை பெய்தது. காலையில் மேகமூட்டத்துடன் சிறு சிறு தூறல்களாக பெய்து வருகின்றன. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இந்திய வானிலை மைய அறிவிப்பு ராமேசுவரம் மீனவர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    தமிழக கடற்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    அதன்படி கடற்கரை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை வங்க கடலில் மீனவர்கள் மேற்கண்ட காலங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவதில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடற்கரையில் இருந்து சில மைல் தூரத்தில் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் வருகிற 14-ந்தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடை காலமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விசைப்படகு மீனவர்கள் வேலை இழந்தனர். இந்த காலகட்டங்களில் தங்களது படகு, வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நாளை மறுநாள் (14-ந்தேதி) இரவு டன் மீன்பிடி தடை காலம் முடிவடைகிறது. 2 மாதம் தடை முடியும் நிலையில் ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். படகுகளில் டீசல் நிரப்புவது, ஐஸ் கட்டிகளை இருப்பு வைப்பது போன்றவற்றில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் அரபி கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த சில நாட்கள் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    புயல் சின்னம் காரண மாக வருகிற 14-ந்தேதி வரை ராமேசுவரம் மீன வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த அறிவிப்பு ராமேசுவரம் மீனவர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புயல் சின்னத்தால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் மீன்பிடி தடைக் காலம் முடிந்து ராமேசுவரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மீன்பிடி தடை காலத்தில் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. அரசு கொடுத்த நிவாரண உதவியும் போதவில்லை. எனவே வேறு வேலைக்கு சென்றோம். வருகிற 14-ந்தேதி முதல் கடலுக்கு செல்ல தயாராகி வந்த நிலையில் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தனர்.

    • மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, காரைக்கால் வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல், தற்போது காரைக்காலுக்கு தென்கிழக்கே 500 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 580 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டு குறைந்த வேகத்தில் நகர்ந்துவருவதால், கடல் சீற்றம், தரைகாற்று அதிகம் இருக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கு ஏற்றார்போல், காரைக்கால் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

    காரைக்கால் மாவட்டத்தைச்சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்ச ல்மேடு, கோட்டுச்சேரி மேடு, மண்டபத்தூர், திரு.பட்டினம் பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவகிராமத்தைச்சேர்ந்த சுமார் 15 ஆயிரம் மீனவர்கள் நேற்று 3ம் நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், மீனவர்கள் விசை ப்படகுகள் காரைக்கால் மீன்பிடிதுறைமுகத்திலும், பைபர் படகுகள் காரைக்கால் அரசலாற்றங்கரையோரம் மற்றும் மீனவ கிரா மங்களிலும் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

    காரைக்கால் தனியார் துறைமுகத்தில், 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர் உத்தரவுப்படி, காரைக்கால் வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு க்குழுவினர், பிரதீப்குமார் தலைமையில், முன் எச்சரிக்கை நடவடி க்கையாக, காரைக்கால் கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடற்கரையில் உள்ள மீனவர்களிடம் புயல் குறித்து எச்சரிக்கை விடுத்து, மீனவ கிராமங்களில் உள்ள படகுளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்ல வலியுறுத்தினர். மேலும், பொதுமக்கள் மழை மற்றும் புயல் நேரங்களில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    • கடலுக்கு செல்ல கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
    • வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.

    புதுச்சேரி:

    வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லகூடாது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் காரைக்கால் பகுதியை சேர்ந்த 11 கிராமங்களில் உள்ள மீனவர்களுக்கு யாரும் கடலுக்கு செல்ல கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதையொட்டி காரை க்கால் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இந்த பகுதியில் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசை படகுகள் அனைத்தும் துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    பைபர் படகுகள் அரசலாற்றங்கரை மற்றும் துறைமுக பகுதியில் மீனவர்கள் நிறுத்தி உள்ளனர். காரைக்காலில் கடலில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. எனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர். 

    வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக 15, 16-ந்தேதிகளில் சென்னை மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Rain #Bayofbengal
    சென்னை:

    சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி இந்தியப் பெருங்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது.

    அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்தமாகவும் 15-ந்தேதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாகவும் (புயல் சின்னம்) மாறி தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகம் நோக்கி நகரும்.

    இதன் காரணமாக 15, 16-ந்தேதிகளில் 2 நாட்களுக்கு சென்னை மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்யும்.



    மீனவர்கள் இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், நாளை (13-ந்தேதி) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிக்கும், 15-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம், ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் புயலாக மாறி 15-ந்தேதி சென்னையை நெருங்கும் என்றும் 16-ந்தேதி வடக்கு நோக்கி நகர்ந்து அன்று இரவு 10 மணிக்கு மேல் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்றும் தனியார் வானிலை அமைப்புகள் தெரிவித்து உள்ளன. #Rain #Bayofbengal

    ஒடிசா அருகே வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்தம் உருவானதால் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. #Storm #IndianWeatherCenter

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களிலும் தென் மேற்கு பருவமழையால் மழை பெய்து அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன.

    சென்னையில் மழை இல்லாமல் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தும் குழாய் கிணறுகள் வற்றியும் போனதால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. வெப்பச்சலனம் காரணமாக பெய்த மழையால் வெப்பம் தணிந்தது என்றாலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

    இந்த நிலையில் ஒடிசா அருகே வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்தம் உருவானதால் வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாலையில் லேசாக மழை தூறியது. இரவில் பலத்த மழை கொட்டியது. விடிய, விடிய மழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜில்லென குளிர் காற்று வீசியது.

    தொடர்ந்து இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது லேசான மழை தூறியது.

    சென்னையில் நேற்று இரவு 8.30 மணி வரை நுங்கம்பாக்கத்தில் 3.32 செ.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 3.64 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    இதற்கிடையே ஒடிசா அருகே வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் நிலவுகிறது. அதனுடன் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் மேலடுக்கு சுழற்சியும் உருவாகி இது தெற்கு தீபகற்பம் முழுவதும் நிலவுகிறது.

    இதன் காரணமாக ஒடிசா, தெலுங்கானா, ஆந்திராவிலும், வட தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்தமானது அடுத்த 48 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என்றும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக வால்பாறையில் 18 செ.மீ. மழையும், கோவை சின்னக்கல்லாரில் 17 செ.மீ. மழையும் பெய்துள்ளது. நீலகிரி நடுவட்டத்தில் 10 செ.மீ., நெல்லை பாப நாசத்தில் 9 செ.மீ, நீலகிரி தேவாலாவில் 8 செ.மீ., ஜி.பஜாரில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    குமரி மாவட்டம் பூதப்பாண்டி, பேச்சிப்பாறையில் 6 செ.மீ., தேனி பெரியாறில் 5 செ.மீ., பொள்ளாச்சியில் 4 செ.மீ., குளித்துறை, நாகர்கோவிலில் 3 செ.மீ., தென்காசியில் 2 செ.மீ., ராதாபுரம், ஆயிக்குடி, செங்கோட்டை, ஏற்காடு, குளச்சல் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.  #Storm #IndianWeatherCenter

    ஒடிசா அருகே வங்க கடலில் புயல் சின்னத்தையொட்டி தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. #Storm #IndianWeatherCenter

    சென்னை:

    வடக்கு ஒடிசா கடற்கரை மற்றும் மேற்கு வங்காள கடற்கரை பகுதியையொட்டி உள்ள வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்தம் (புயல் சின்னம்) உருவாகி உள்ளது.

    இது இன்று காலை 5.30 மணி அளவில் வடக்கு ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் நோக்கி நகர்கிறது. ஜாம்ஷெட்பூரில் இருந்து தென்கிழக்கில் 90 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

    இந்த புயல் சின்னம் அடுத்த 12 மணி நேரத்தில் மெதுவாக வலு இழக்க தொடங்கும். அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    புயல் சின்னத்தையொட்டி தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தென் மேற்கு பருவ மழை காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Storm #IndianWeatherCenter

    ×