search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bay of Bengal storm"

    அரபிக் கடல், வங்க கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகி நகர்ந்து செல்வதால் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. #Cyclone #ChennaiRain

    சென்னை:

    இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேற்கு மத்திய அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 7-ந்தேதி புயலாக மாறியது. லூபன் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் மேலும் வலுப்பெற்று ஓமன், ஏமன், வளைகுடா நோக்கி நகர்ந்து செல்கிறது.

    இதேபோல் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப் பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது புயலாக உருப்பெற்று ஒடிசா நோக்கி நகர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     


    அரபிக் கடல், வங்க கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகி நகர்ந்து செல்வதால் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும்.

    சென்னையை பொறுத்த வரை பகலில் வெயில் அடிக்கும். இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு.

    மீனவர்கள் 10-ந்தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #Cyclone #ChennaiRain

    ஒடிசா அருகே வங்க கடலில் புயல் சின்னத்தையொட்டி தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. #Storm #IndianWeatherCenter

    சென்னை:

    வடக்கு ஒடிசா கடற்கரை மற்றும் மேற்கு வங்காள கடற்கரை பகுதியையொட்டி உள்ள வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்தம் (புயல் சின்னம்) உருவாகி உள்ளது.

    இது இன்று காலை 5.30 மணி அளவில் வடக்கு ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் நோக்கி நகர்கிறது. ஜாம்ஷெட்பூரில் இருந்து தென்கிழக்கில் 90 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

    இந்த புயல் சின்னம் அடுத்த 12 மணி நேரத்தில் மெதுவாக வலு இழக்க தொடங்கும். அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    புயல் சின்னத்தையொட்டி தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தென் மேற்கு பருவ மழை காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Storm #IndianWeatherCenter

    ×