search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "andaman"

    அந்தமானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.
    போர்ட்பிளேர் :

    அந்தமானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. நள்ளிரவு 12.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.

    நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. நிலநடுக்கத்தை  தொடரந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 
    கூட்டு ராணுவ பயிற்சியை பார்வையிடுவதற்காக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 2 நாள் பயணமாக போர்ட் பிளேருக்கு நேற்று சென்றார். #NirmalaSitharaman #Andaman
    புதுடெல்லி:

    அந்தமான் நிகோபார் தீவுகளில் இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொள்கின்றன. இதை பார்வையிடுவதற்காக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 2 நாள் பயணமாக போர்ட் பிளேருக்கு நேற்று சென்றார்.

    அங்கு நீரிலும், நிலத்திலும், வானிலும் வீரர்கள் நிகழ்த்தும் சாகசங்களை அவர் பார்வையிட உள்ளார். மேலும் அவர் ராணுவ வீரர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளையும் திறந்து வைக்கிறார்.

    இந்த தகவலை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவித்து உள்ளது. #NirmalaSitharaman #Andaman 
    அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளை ‘பபுக் புயல்’ நேற்று மாலை தாக்கியது. #Andaman #Cyclone #Pabuk
    புதுடெல்லி:

    கடந்த சில தினங்களுக்கு முன்பு தாய்லாந்து வளைகுடா கடல் பகுதியில் உருவான ‘பபுக்’ புயல் அந்தமான் தீவு பகுதியை நோக்கி வேகமாக நகர்ந்து வந்தது. இந்த புயல் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் மற்றும் ஒடிசா மாநிலத்தின் கடலோர பகுதிகளை மணிக்கு 80 கி.மீட்டர் வேகத்தில் தாக்கும் என்று இந்திய வானிலை இலாகா தெரிவித்து இருந்தது. மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் பபுக் புயல் நேற்று மாலை 5.30 அளவில் அந்தமான் தீவின் தலைநகர் போர்ட் பிளேர் பகுதியை தாக்கியது. இதேபோல் நிகோபார் தீவு பகுதிகளும் புயலின் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது பல இடங்களில் பலத்த மழையும் கொட்டியது. புயல் அந்தமானை தாக்குவதற்கு முன்பாகவே வலு இழந்து போனதால் அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்கவில்லை.

    அதன்பின்னர் பாபுக் புயல் ஆழந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தென்கிழக்கு வங்காள வளைகுடா கடல் பகுதியை நோக்கி நகர்ந்தது.

    புயல் தாக்கியதால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரியவரவில்லை.

    முன்னதாக வானிலை இலாகாவின் அறிக்கையை சுட்டிக் காண்பித்து, மத்திய உள்துறை அமைச்சகம் பபுக் புயல் குறித்து அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுத்தது.

    இந்த எச்சரிக்கையின்படி சாலை வழி மற்றும் வான்வழி போக்குவரத்துக்கு இடையூறும் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பெருத்த சேதம் ஏற்படலாம் என்பதால் 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.
    அந்தமான் தீவுகளில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Earthquake
    அந்தமான்:

    வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட அந்தமான் தீவுகளில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவானது. 

    பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமாக நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதம் அந்தமான் தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
     
    முன்னதாக, பெரு - பிரேசில் நாட்டு எல்லையில் சுமார் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. #Earthquake
    இலங்கையில் இருந்து அந்தமானுக்கு அகதிகளாக வந்து குடியேறிய 48 இலங்கை தமிழர்கள் குடும்பத்துக்கு ஒன்றரை ஹெக்டேர் நிலம் ஒதுக்க வேண்டும் என பாராளுமன்ற எம்.பி. வலியுறுத்தியுள்ளார். #1.5hectors #TamilSettlers #SriLankaTamils #AndamanTamilSettlers
    போர்ட் பிளையர்:

    இலங்கையின் முன்னாள் அதிபர் பண்டாரநாயகே மற்றும் இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கையில் இருந்து பல தமிழர்கள் குடும்பங்கள் அகதிகளாக வந்து அந்தமான் - நிக்கோபர் தீவில் உள்ள ஷோயல் வளைகுடா பகுதியில் குடியேறின. இவர்களுக்கான வாழ்வாதாரமாக இரண்டு ஹெக்டேர் நிலம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், கடந்த 1976-ம் ஆண்டில் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து அந்தமானில் உள்ள  கட்சல் தீவில் தஞ்சம் அடைந்த 48 தமிழர்கள் குடும்பத்துக்கு வெறும் அரை ஹெக்டேர் நிலம் மட்டுமே வழங்கப்பட்டது.



    இவர்களுக்கு ஒன்றரை ஹெக்டேர் நிலம் ஒதுக்கீடு செய்து அளிக்கப்படும் என முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அந்த குடும்பங்கள் இங்கு வந்து குடியேறி 42 ஆகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

    இந்த விவாகரத்தை தற்போது கையில் எடுத்துள்ள அந்தமான் - நிக்கோபார் தீவின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான பிஷ்னு பாடா ரே, தற்போது காம்ரோட்டா தீவில் வாழும் இந்த 48 குடும்பங்களுக்கு  ஒன்றரை ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #1.5hectors #TamilSettlers #SriLankaTamils  #AndamanTamilSettlers

    அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையொட்டி மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #rain #IndiaMeteorologicalDepartment

    திருவனந்தபுரம்:

    தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாத நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே மழை தொடங்கும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் தெற்கு அந்தமான், நிக்கோபார் பகுதிகளில் தீவுகளில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த மழை அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு அரபிக்கடல், குமரி கடல், மாலத்தீவு பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளிலும் தொடங்கு வதற்கு சாதகமான சூழ்நிலையும் உள்ளது.

    இதனால் குமரி கடல் கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சத்தீவு கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வருகிற 30-ந்தேதி வரை இந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் ஏற்கனவே கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக அங்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று மிக பலத்த மழை பெய்யுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 28-ந்தேதி வரை கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யுமென்றும், சில மாவட்டங்களில் அதிக மழை பொழிவு நீடிக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 21 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் மலை பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென்றும், சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்லவோ, கடலில் குளிக்கவோ வேண்டா மென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    கொச்சி வானிலை மையம் மழை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்யும். திருவனந்தபுரம், கோழிக்கோடு, பத்தனம் திட்டா, மலப்புரம் உள்பட 14 மாவட்டங்களில் மிகவும் பலத்த மழை பெய்யுமென்றும் கூறப்பட்டுள்ளது.

    மழை எச்சரிக்கையை தொடர்ந்து கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக மழை கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இந்த கட்டுப்பாட்டு அறைகள் செயல்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது. தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டு மென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    10 ஆண்டுகளுக்கு பிறகு பெய்யும் கனமழையாக இது இருக்கும் என்றும், 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் 30-ந்தேதி வரை கேரள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளு குளு கால நிலை நிலவுகிறது. இன்றும் வானில் மேக மூட்டமாகவே காணப்பட்டது. மாவட்டத்தின் சில பகுதிகளில் மழையும் பெய்தது. #rain #IndiaMeteorologicalDepartment

    ×