என் மலர்
நீங்கள் தேடியது "Spice Jet"
- கண்ட்லா விமான நிலையத்தில் டேக்ஆஃப் ஆனபோது டயர் கழன்று விழுந்தது.
- மும்பை விமான நிலையத்தில் தற்காலிக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது.
குஜராத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்படும்போது டயர் கழன்று விழுந்த நிலையில், மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லா விமான நிலையத்தில இருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. டேக்ஆஃப் ஆன நிலையில் டயர் ஒன்று கழன்று விழுந்தது. இதை விமானத்தில் இருந்து பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அவர் விமானத்தின் டயர் கழன்று விழுந்தது என தொடர்ந்து சத்தம் போடுவது வீடியோவில் பார்க்க முடிந்தது.
மும்பை விமான நிலையத்தில தற்காலிக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு, விமானம் தரையிறக்கப்பட்டது, விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதால், பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர்.
முன்னெச்சரிக்கை காரணமாக தற்காலிக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதால், எப்போதும் பரபரப்பாக இயங்கப்படும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானத்தில் சுற்று பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
- பத்து நாட்களுக்கு சுமார் 120 விமானங்கள் ரத்து.
- பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் டெல்லி ஐதராபாத், சீரடி, கோவா, அந்தமான் உட்பட பல்வேறு நகரங்களுக்கு விமானம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அனைத்து நகரங்களுக்கும் செல்லும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இன்று காலை சீரடி, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஏற்கனவே முன்புதிவு செய்து இருந்தவர்கள் பயணம் செய்ய வந்தனர். அவர்களை பாதுகாப்பு வீரர்கள் அனுமதிக்கவில்லை. 10-ந் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரு நாளைக்கு அந்த நிறுவனத்தின் 12 விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.
பத்து நாட்களுக்கு சுமார் 120 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிர்வாகம், நிர்வாக சீர்திருத்தம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.






