என் மலர்
நீங்கள் தேடியது "கூட்டு ராணுவ பயிற்சி"
- அவர்களின் பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு வடகொரியா தனது ஏவுகணைகளை ஏவி கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.
- போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுவீசி 30 பேர் காயமடைந்தனர்,
வட கொரியா கடலுக்குள் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இன்று, தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்கள் வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சியைத் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, இரு நாடுகளின் படைகளும் தங்கள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் திறன்களை வெளிப்படுத்தும்.
இந்த இராணுவப் பயிற்சி இந்த இரு படைகளின் வருடாந்திர பயிற்சியின் ஒரு பகுதியாகும். இருப்பினும், இது தாக்குதலுக்கு முந்தைய ராணுவப் பயிற்சி என கூறி, வட கொரியா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
எனவே அவர்களின் பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு வடகொரியா தனது ஏவுகணைகளை ஏவி கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.
இந்த ஏவுகணைகள் ஹ்வாகி மாகாணத்திலிருந்து ஏவப்பட்டன. வருடத்தில் ஐந்தாவது முறையாக வடகொரியா இதுபோன்ற ஏவுகணைகளை கடற்பகுதியில் ஏவியுள்ளது என்று தென் கொரியாவின் கூட்டு ராணுவத் தலைவர் தெரிவித்தார்.
தென் கொரியா - அமெரிக்கா ராணுவ கூட்டுப்பயிற்சியை எதிர்த்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வெளியே போராட்டம் நடந்து வருகிறது. இந்த பயிற்சி நாட்டில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதால் அதை நிறுத்த போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

கடந்த வாரம் ஒரு பயிற்சியின் போது, வட கொரிய எல்லையில் உள்ள போச்சான் பகுதியில் இரண்டு தென் கொரிய KF-16 போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுவீசின.

இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் கூட்டு ராணுவ பயிற்சியும், கடலில் வடகொரியாவின் ஏவுகணை வீச்சும் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அந்தமான் நிகோபார் தீவுகளில் இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொள்கின்றன. இதை பார்வையிடுவதற்காக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 2 நாள் பயணமாக போர்ட் பிளேருக்கு நேற்று சென்றார்.
அங்கு நீரிலும், நிலத்திலும், வானிலும் வீரர்கள் நிகழ்த்தும் சாகசங்களை அவர் பார்வையிட உள்ளார். மேலும் அவர் ராணுவ வீரர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளையும் திறந்து வைக்கிறார்.
இந்த தகவலை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவித்து உள்ளது. #NirmalaSitharaman #Andaman
கொரியா தீபகற்பத்துக்கு உட்பட்ட கடல்பகுதி மற்றும் நிலப்பரப்பில் ஆண்டுதோறும் தென்கொரியா மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
சிங்கப்பூர் நகரில் சமீபத்தில் அமெரிக்கா - வடகொரியா இடையே அணு ஆயுத ஒழிப்பு உடன்பாடு ஏற்பட்ட பின்னர், வடகொரியாவை அச்சுறுத்தும் வகையில் இனி போர் விளையாட்டுகளில் அமெரிக்கா ஈடுபடாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.







