search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "biparjoy cyclone"

    • எட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 1,171 கர்ப்பிணி பெண்களில் 1,152 கர்ப்பிணி பெண்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
    • கரையோரத்தில் வசித்து வந்த சுமார் ஒரு லட்சம் பேரை வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    அரபிக்கடலில் கடந்த 5-ந் தேதி உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக உருமாறியது. இது நேற்று மாலை குஜராத் மாநிலம் ஜாகவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது.

    புயலின் மையப்பகுதி நேற்று நள்ளிரவில் கரையை கடந்த போது ஜாகவ் துறைமுக பகுதியில் 125 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. புயல் கரையை கடக்கும்போது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான கடலோர கிராம மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

    பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இங்குள்ள கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ராட்சத மரங்களும் வேரோடு சரிந்து விழுந்தது. சிறியதும், பெரியதுமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தது. மேலும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் இடிந்ததில் அப்பகுதியில் இருந்த வாகனங்களும் சேதமானது.

    புயல் முன்னெச்சரிக்கை காரணமாக ஜாகவ், பவ் மாவட்டங்களை சேர்ந்த 1000 கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

    இவ்வளவு இடர்பாடுக்கு மத்தியில், பிபோர்ஜோய் புயலின்போது குஜராத்தில் 700 குழந்தைகள் பிறந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கரையோரத்தில் வசித்து வந்த சுமார் ஒரு லட்சம் பேரை வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதில் எட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 1,171 கர்ப்பிணி பெண்களில் 1,152 கர்ப்பிணி பெண்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதில், 707 கர்ப்பிணி பெண்கள் வெற்றிகரமாக குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.

    குறிப்பாக கட்ச் மாவட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 308 குழந்தைகள் பிறந்துள்ளன. ராஜ்கோட் மாவட்டத்தில் நூறு குழந்தைகளும், தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் 93 குழந்தைகளும் பிறந்துள்ளன.

    இதுகுறித்து குஜராத் அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கைியல், " குஜராத் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் 707 குழந்தைகள் வெற்றிகரமாக பிறந்துள்ளன. புயல் எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 302 அரசு வாகனங்கள் மற்றும் 202 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன. ஒவ்வொன்றும் மருத்துவ பணியாளர்களுடன், இரவும் பகலும் விடாமுயற்சியுடன் பணியாற்றின" என்று குறிப்பிட்டிருந்தது.

    ×