search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராட்டு விழா"

    • வருகிற 11-ந் தேதி நடக்கிறது
    • ஐயப்ப பக்தர்கள் 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்

    ராணிப்பேட்டை:

    சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் வேலூர் மண்டலத்தில் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா மற்றும் குரு வந்தனம் அழைப்பு நிகழ்ச்சி வருகிற ஜூன் 11-ந்தேதி ரத்தினகிரி அடுத்த அரப்பாக்கத்தில் உள்ள ரமணி சங்கர் மஹாலில் நடைபெறகிறது.

    இந்த நிகழ்ச்சியில் வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகள் சேவா சமாஜத்தின் நிர்வாகிகள், குருமார்கள், ஐயப்ப பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிகழ்ச்சியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாநில நிர்வாகிகள், குருமார்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மேயர், ஹரிவராசனம் நூற்றாண்டு விழா குழு தேசிய கமிட்டி நிர்வாகிகள், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ தேசிய பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், ஐயப்ப பக்தர்கள் என 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். அவர்களை கவுரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    இந்த தகவலை சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் வட தமிழ்நாட்டின் மாநில தலைவரும் சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோவில் குருசாமியுமான ஜெயச்சந்திரன் ெதரிவித்துள்ளார்.

    • தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    காங்கயம் :

    கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய மூத்தோர் தடகள போட்டியில் தமிழக அணியில் காங்கயம் ரன்னர்ஸ் சார்பாக 35 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா காங்கயம்-சென்னிமலை சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் தேசிய மூத்தோர் தடகள போட்டியில் தமிழக அணியில் காங்கயம் ரன்னர்ஸ் சார்பாக 35 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் 5000 மீட்டர் நடை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற களிமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை பிரேமலதா மற்றும் வட்டு எறிதல் போட்டியில் தேசிய அளவில் வெண்கலம் வென்ற ஜோதி மற்றும் காங்கயம் ரன்னர்ஸ் சார்பாக கலந்து கொண்ட லதா மற்றும் ராஜ்குமார் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. விழாவில் காங்கயம் ரன்னர்ஸ் அமைப்பை சேர்ந்த லதா மகேஷ்குமார் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்த விழாவில் ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    • மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது
    • போட்டியில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி பூவிதா மாநில அளவில் நான்காம் இடம் பெற்று கோப்பையும், பாராட்டுச் சான்றிதழும் பெற்றார்

    கரூர்:

    கரூரில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. போட்டியில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி பூவிதா மாநில அளவில் நான்காம் இடம் பெற்று கோப்பையும், பாராட்டுச் சான்றிதழும் பெற்றார். மாணவி தனனி 15வது இடம் பெற்றார். மேலும், ஹேமஸ்ரீ, திகழ், அஸ்வந்த், பத்ரிநாத், சர்வேஸ் ஆகியோர் தகுதி சான்று பெற்றனர்.

    தொடர்ந்து, பள்ளியில் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடந்தது. இதில், மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்த ஓய்வுபெற்ற ஆசிரியர் வீரமலை, பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டினர். விழாவில் தலைமை ஆசிரியர் சாகுல் அமீது உட்பட பலர் பங்கேற்றனர்.


    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வஸ்திரம் வழங்குதல், பாராட்டு விழா நடைபெற்றது.
    • மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு 100 தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி ,சேலை, வாளி உள்பட வழங்கினார்‌.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சௌராஷ்டிரா மேல ராஜவீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வஸ்திரம் வழங்குதல், பாராட்டு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தலைமை தாங்கினார். முன்னாள் சௌராஷ்டிர சபை தலைவர்கள் சுப்பராமன், ராமச்சந்திரன், கோவிந்தராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு 100 தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி ,சேலை, வாளி உள்பட பல்வேறு வகையான பொருட்களை வழங்கி பாராட்டினார் ‌‌.

    இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூய்மை பணவர்களுக்கான உதவிப் பொருட்கள் அனைத்தையும் மாநகராட்சி 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தனது சொந்த நிதியில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    • ஸ்மிருதி இரானி ஜவுளித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ரூ.1300 கோடி பட்ஜெட் செலவில் திறன் மேம்பாடு கிடைத்தது என்றார்.

    மங்கலம் :

    கோவையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு ஜவுளி தொழில் அமைப்புகள் ,சைமா,மற்றும் பல்வேறு வர்த்தக அமைப்பினர் சார்பில் ஸ்மிருதி இரானி ஜவுளித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் மேற்கொண்ட நடவடிக்கைககளுக்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது .

    விழாவிற்கு தலைமை வகித்து பேசிய இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் ,அமைச்சர் ஸ்மிருதி இரானி ஜவுளித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரின் முயற்சியால் ஜவுளித்துறையில் ரூ.1300 கோடி பட்ஜெட் செலவில் திறன் மேம்பாடு கிடைத்தது என்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் செயலாளர் இரா.வேலுச்சாமி, ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன்,அமைப்புச்செயலாளர் பா. கந்தவேல், தலைமை ஆலோசகர்வி.டி.கருணாநிதி,தொழில்நுட்ப ஆலோசகர் ஆர். சிவலிங்கம், பல்லடம் விசைத்தறி சங்க துணைச் செயலாளர் பாலாஜி, கண்ணம்பாளையம் விசைத்தறி சங்க செயலாளர் செல்வகுமார்,மங்கலம் விசைத்தறி சங்க செயலாளர் பழனிச்சாமி, மங்கலம் விசைத்தறி சங்க துணைத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர். கோபால் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்டனர். 

    • அரியலூர் மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது
    • தேசிய அளவில் செஸ் போட்டியில் முதலிடம்

    அரியலூர்:

    தேசிய அளவிலான செஸ் போட்டியில் முதலிடம் பெற்ற அரியலூர் மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    உடையார்பாளையம், கைகள நாட்டார் தெருவை சேர்ந்த சரவணன் அன்புராஜாவின் இரண்டாவது மகள் ஷர்வானிகா (வயது7). உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் இவர், செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று பரிசும் பெற்று வந்துள்ளார்.

    கடந்த 6 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற 7 வயதுக்குட்பட்ட தேசிய அளவிலான எம்.பி.எல் 35 ஆவது ஓபன் அண்ட் பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட ஷர்வானிகா, அனைத்து போட்டிகளிலும் வென்று சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றார்.

    இதனை ெதாடர்ந்து இவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.

    வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்வி அலுவலர் மதலைராஜ், ஆசிரியர் பயிற்றுநர் குறிஞ்சி தேவி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆனந்தபாபு , பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயலட்சுமி,கிராம நிர்வாக அலுவலர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஷர்வானிகாவை பாராட்டி பேசினர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் உமா சரஸ்வதி வரவேற்றார். முடிவில் இடைநிலை ஆசிரியர் மைதிலி நன்றி கூறினார்.

    • ராமநாதபுரம் மாவட்ட கபடி அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • மாநில அளவிலான ஆண்களுக்கான 48-வது ஜூனியர் கபடி போட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்தது.

    ராமநாதபுரம்

    மாநில அளவிலான ஆண்களுக்கான 48-வது ஜூனியர் கபடி போட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 32 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட அணி 3-ம் பரிசை வென்றது. இந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழா கராத்தே பழனிச்சாமி தலைமையில் நடந்தது.

    மருதம் விளையாட்டு குழு தலைவர் ஜெயகணேஷ், அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கபடி அணி வீரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ரொக்கம், பாராட்டு சான்றிதழ், பதக்கம், கேடயம் மற்றும் கபடி விளையாட்டு உபகரணங்கள், 5 லட்சம் மதிப்பில் காப்பீடு செய்யப்பட ஆவணம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை சாண்டா ஸ்போர்ட்ஸ் கிளப் அருண்குமார், பெரியார் நகர் பசுபதி ஆகியோர் செய்திருந்தனர். தேசிய கபடி நடுவர் குழந்தை, தேசிய கபடி வீரர்கள் மனோஜ், செல்வின், வேல் அழகன், துரை.ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தேசிய அளவில் நடைபெற உள்ள கபடி போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வீரர்களை அனுப்புவதற்காக சிறப்பு பயிற்சி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • பெங்களூருவில் 4,500 சதுர மீட்டர் பரப்பளவில் ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
    • கிரையோஜெனிக் என்ஜினை தயாரிக்கும் 6-வது நாடாக இந்தியா உள்ளது.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கர்நாடகம் வருகை தந்தார். மைசூரு தரசா விழாவை தொடங்கி வைத்த அவர், பின்னர் உப்பள்ளி சென்று ஐ.ஐ.டி. வளாகத்தை திறந்து வைத்திருந்தார்.

    இந்த நிலையில், உப்பள்ளி நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து தனி விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று மாலையில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் ராஜ்பவன் ரோட்டில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற அவர் பின்பு ஓய்வு எடுத்தார்.

    இன்று மாலையில் பெங்களூரு விதானசவுதாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கர்நாடக அரசு சாா்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் இந்த பாராட்டு விழா நடக்கிறது.

    ஜனாதிபதி விதானசவுதாவுக்கு வருவதையொட்டி, பாதுகாப்பு கருதி அங்கு பணியாற்றும் அனைத்து அரசு ஊரியர்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையத்தை அமைத்து கொடுக்க கடந்த 2013-ம் ஆண்டு எச்.ஏ.எல். நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து இருந்தது.

    இதையடுத்து இந்த ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையத்தை ரூ.208 கோடி செலவில் கட்டி முடிக்க கடந்த 2016-ம் ஆண்டு இஸ்ரோ-எச்.ஏ.எல். இடையே மீண்டும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருந்தது. இந்தநிலையில் பெங்களூருவில் 4,500 சதுர மீட்டர் பரப்பளவில் ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று திறந்து வைக்க உள்ளார்.

    அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சீனா, ரஷியா ஆகிய நாடுகளில் மட்டுமே கிரையோஜெனிக் என்ஜின்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கின. 2014-ம் ஆண்டு இந்தியா விண்ணில் ஏவிய ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது.

    இதன்மூலம் கிரையோஜெனிக் என்ஜினை தயாரிக்கும் 6-வது நாடாக இந்தியா உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் கிரையோஜெனிக் என்ஜின்களுடன் கூடிய பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை தயாரிக்க ரூ.860 கோடி ஒப்பந்தத்தை புதிய விண்வெளி இந்திய நிறுவனத்திடம் இருந்து எச்.ஏ.எல்.எல் அன்ட் டி நிறுவனங்கள் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தடகள விளையாட்டு போட்டிகள் கெலமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயகோட்டை சரக அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் கெலமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் 18- க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 280 -க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் காமராஜர் விருது பெற்ற கெலமங்கலம் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மோனிஷா என்ற மாணவி தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களுடன் தனிநபர் சாம்பியன் பட்டத்தையும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டத்தை தேஜாஸ்ரீ என்ற மாணவி வென்றதுடன் பல்வேறு போட்டிகளில் 80-க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர்.

    இதற்காக 22-ம் தேதி பள்ளியில் நடந்த பாராட்டு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர்கள் திம்மப்பா, அனைவரையும் வரவேற்று பேசினார். பட்டதாரி ஆசிரியர்கள் லட்சுமி நாராயா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆஷா பீ, உள்ளாட்சி பிரதிநிதி உமா சுரேஷ் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு விருந்தின ராக கெலமங்கலம் தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் தேவராஜ் மற்றும் தொழிலதிபர் ராம் தேவ் என்கிற குமன்ராம் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.

    இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.

    • விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் கல்லணைக்கால்வாய் பாசனதார் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மறைந்த மூத்த நிர்வாகிகளுக்கு நினைவேந்தல் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

    நாகுடி தனியார் மண்டபத்தில் சங்க தலைவர் கொக்குமடை ரமேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சங்க நிர்வாகிகளாக சிறப்பாக செயலாற்றிய, மறைந்த சங்க செயலாளர் பழசுப்பையா, ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், துணை தலைவர் ஆத்மநாதன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு நினைவு கேடயம் மற்றும் தென்னங்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த 28 ஆயிரம் ஏக்கர் நில விவசாயிகளுக்கு உரிய பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், தனியார் கடைகளில் உரங்களின் விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது, இதனை அரசு கவனத்தில் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி அரசு நிர்ணயித்த விலையிலேயே கூட்டுறவு சங்கம் மூலம் கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும், 100 நாள் வேலை பணியாளர்களை, விவசாய காலங்களில், விவசாய பணிகளில் ஈ.டுபடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் முகமதுஇக்பால், மாதவன், இளைய ஜமீன்தார் ஜெயேந்திரன், ஒருங்கிணைப்பாளர் பொன்கணேசன், கௌரவ தலைவர் கணேசன், ஆலோசகர் ராமசாமி, பொருளாளர் கோவிந்தராஜ், சட்ட ஆலோசகர் சிவசுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • குளித்தலை நகராட்சியில் கடந்த ஓராண்டுகளாக மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றி, சிறப்பாக பணியாற்றிய நகராட்சி ஆணையர் சுப்புராம் பணி நிறைவு பெரும் பிரிவு உபச்சார விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
    • விழாவில் நகராட்சி தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா மற்றும் துணைத் தலைவர் கணேசன் நகராட்சி பொறியாளர் ராதா ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்/

    கரூர் :

    குளித்தலை நகராட்சியில் கடந்த ஓராண்டுகளாக மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றி, சிறப்பாக பணியாற்றிய நகராட்சி ஆணையர் சுப்புராம் பணி நிறைவு பெரும் பிரிவு உபச்சார விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவில் குளித்தலை எம்எல்ஏ இரா.மாணிக்கம் கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி சிறப்பாக பணியாற்றியது குறித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்,

    விழாவில் நகராட்சி தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா மற்றும் துணைத் தலைவர் கணேசன் நகராட்சி பொறியாளர் ராதா ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்/

    இதில் நகர அவைத்தலைவர் வழக்கறிஞர் சாகுல்அமீது, நகர துணை செயலாளர் ,கே.எம்.செந்தில்குமார், நகர துணை செயலாளர் எம்.கே.வடிவேல், நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் ஜாபருல்லா, நகர்மன்ற உறுப்பினர்கள் பொன்னர், சரோஜா, இந்திரா, சையத்உசேன், சமீமா, சரவணன், ராணி, சாந்தி சுரேஷ், ஜெயந்தி, கே.எம்.எஸ்.ஆனந்தலெட்சுமி, சக்திவேல், மஞ்சு, கீதா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • எஸ் .ஆர் .ரங்கநாதன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • நிறைவாக நூலகர் கணேசன் ஏற்புரையாற்றினார்.

    உடுமலை:

    உடுமலை கிளை நூலகம் எண் 2ல் நூலகராக பணியாற்றி இம்மாதம் ஓய்வு பெறும் நூலகர் வீ. கணேசனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. உடுமலை தேஜஸ் மகாலில் நடந்த பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு திருப்பூர் மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன் தலைமை வகித்து நூலகத் தந்தை எஸ் .ஆர் .ரங்கநாதன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில்உடுமலை கிளை நூலகம் எண் இரண்டின் நூலக வாசகர் வட்ட தலைவர் இளமுருகு வரவேற்று பேசி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.முன்னாள் மாவட்ட நூலக அலுவலர்கள் மனோகரன், தண்டபாணி, நூலகர்கள் மாணிக்கம், முத்து மணி, திருஞான சம்பந்தம் ,வெங்கட்ராமன், ராதா ருக்மணி, சக்திவேல் ,சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உடுமலை பகத்சிங் சிலம்பம் களரி அறக்கட்டளை ஆசான் வீரமணி ,பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் நல்லாசிரியர் விஜயலட்சுமி மற்றும் நூலகர்கள் வாழ்த்தி பேசினர். திருப்பூர் மாவட்ட நூலக ஆணை குழு சார்பில் நூலகர் கணேசனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்கத்தினர், ஓய்வூதிய சங்கத்தினர் ,உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் ,அரிமா சங்கம் மற்றும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர், உடுமலை சாதனைப் பெண்கள் குழுவினர் வாழ்த்தி பேசினர்.

    நிறைவாக நூலகர் கணேசன் ஏற்புரையாற்றினார். இதில் உடுமலை ,பொள்ளாச்சி, கோவை ,திருப்பூர், தாராபுரம் ,காங்கேயம், மூலனூர் வட்ட நூலகர்கள் கலந்து கொண்டனர். உடுமலை கிளை நூலகம் எண் இரண்டில் நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் சிவக்குமார், ஆலோசகர் அய்யப்பன் ,கனரா வங்கி பணி நிறைவு மேலாளர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர் . முடிவில் நூலகர் மகேந்திரன் நன்றி கூறினார்.

    ×