search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபடி அணி"

    • தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்த மாசானமுத்து இடம் பெற்றுள்ளார்.
    • பெற்றோருக்கு டிக்கெட் எடுத்து வைத்திருந்தேன்.

    சென்னை:

    10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    இதன் 4-வது சுற்று போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது. இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    தமிழ் தலைவாஸ் அணியில் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்த மாசானமுத்து இடம் பெற்றுள்ளார்.

    இதற்கிடையே தூத்துக்குடியில் பெய்த மழை-வெள்ளத்தில் மாசானமுத்துவின் வீடு இடிந்துள்ளது.

    இதுகுறித்து மாசான முத்து கூறும்போது, "வெள்ளத்தில் சிக்கி எனது வீடு இடிந்துள்ளது. நான் விளையாடும் போட்டியை பார்ப்பதற்காக பெற்றோருக்கு டிக்கெட் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் வெள்ளத்தில் வீடு இடிந்து விட்டதால் அவர்களால் சென்னைக்கு வர முடியாத சூழல் உள்ளது" என்றார்.

    • வீராங்கனைகள் தோ்வு ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
    • மே 5-ந் தேதி முதல் மே 7ந் தேதி வரையில் நடைபெறுகின்றன.

    திருப்பூர் :

    மாநில அளவிலான கபடி சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்பத ற்கான திருப்பூா் மாவட்ட ஆடவா், மகளிா் கபடி அணிகளுக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வு ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கபடி கழகத்தின் செயலாளா் ஜெயசித்ரா ஏ.சண்முகம் வெளியிட்டு ள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது :- செங்கல்பட்டு மாவட்ட த்தில் மாநில அளவிலான ஆடவா் கபடி சாம்பியன் ஷிப் போட்டிகள் வரும் மே 5-ந்தேதி முதல் மே 7ந்தேதி வரையில் நடைபெறுகின்றன. அதேபோல, கோவை மாவட்டம் மேட்டுப்பாளை யத்தில் மகளிருக்கான மாநில அளவிலான கபடி சாம்பியன் ஷிப் போட்டிகள் மே 12-ந்தேதி முதல் மே 14ந் தேதி வரையில் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் திருப்பூா் மாவட்டத்தின் சாா்பில் பங்கேற்பதற்கான ஆடவா், மகளிா் அணிகளுக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வானது ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

    திருவள்ளுவா் நற்பணி மன்றம் சாா்பில் நடத்தப்படும் மாநில தொடா் கபடிப் போட்டியில் இருந்து வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இப் போட்டியில் பங்கேற்க ஆடவா் 85 கிலோவுக்கு மிகாமலும், மகளிா் 75 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. இதில், தோ்வு செய்யப்படும் வீரா், வீராங்கனைகளுக்கு மாவட்ட கபடிக் கழகத்தின் சாா்பில் பயிற்சி முகாம் நடத்தி மாநில அளவிலான சாம்பியன் ஷிப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவா்.

    மேலும், மதுரையில் ஹரியாணா ஸ்டீல்ஸ் புரோ கபடி போட்டிக்கான ஆள்கள் தோ்வு ஏப்ரல் 30-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக திருப்பூா் மாவட்ட கபடிக் கழகத்தின் சாா்பில் 5 சிறந்த விளையாட்டு வீா்கள் தோ்வு செய்யப்பட்டு மதுரைக்கு அனுப்பிவைக்க ப்படவுள்ளனா். இந்த புரோ கபடிப் போட்டியில் பங்கேற்க வயது வரம்பு சிறுவா்களுக்கு மே 25-ந் தேதியன்று 16 வயதுக்கு உள்பட்டவா்களாக இருக்க வேண்டும். பள்ளிச் சான்றிதழ் அல்லது ஆதாா் அட்டையை எடுத்துவர வேண்டும் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்ட கபடி அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • மாநில அளவிலான ஆண்களுக்கான 48-வது ஜூனியர் கபடி போட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்தது.

    ராமநாதபுரம்

    மாநில அளவிலான ஆண்களுக்கான 48-வது ஜூனியர் கபடி போட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 32 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட அணி 3-ம் பரிசை வென்றது. இந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழா கராத்தே பழனிச்சாமி தலைமையில் நடந்தது.

    மருதம் விளையாட்டு குழு தலைவர் ஜெயகணேஷ், அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கபடி அணி வீரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ரொக்கம், பாராட்டு சான்றிதழ், பதக்கம், கேடயம் மற்றும் கபடி விளையாட்டு உபகரணங்கள், 5 லட்சம் மதிப்பில் காப்பீடு செய்யப்பட ஆவணம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை சாண்டா ஸ்போர்ட்ஸ் கிளப் அருண்குமார், பெரியார் நகர் பசுபதி ஆகியோர் செய்திருந்தனர். தேசிய கபடி நடுவர் குழந்தை, தேசிய கபடி வீரர்கள் மனோஜ், செல்வின், வேல் அழகன், துரை.ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தேசிய அளவில் நடைபெற உள்ள கபடி போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வீரர்களை அனுப்புவதற்காக சிறப்பு பயிற்சி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    ×