search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெரிசல்"

    • ஈரோடு மாநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
    • ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கா னவர்கள் தங்கி பல்வேறு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பிறப்பு போன்ற விசேஷ நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நேரங்களில் ஈரோட்டில் தங்கி இருக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்த வர்கள் குடும்பத்து டன் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவது வழக்கம்.

    இந்த நேரத்தில் ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் இன்று தமிழ் புத்தாண்டு மற்றும் அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் ஈரோட்டில் உள்ள வெளி மாவட்ட மக்கள் நேற்று இரவே சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினர்.

    இதன் காரணமாக நேற்று மாலை முதல் இரவு வரை ஈரோடு மாநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

    குறிப்பாக ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை மக்கள் கூட்டம் அலை மோதியது. சேலம், கோவை செல்லும் பஸ்களில் வழக்க த்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதேபோல் மதுரை, நெல்லை செல்லும் பஸ் நிலையங்ளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. தற்போது பள்ளிகளில் விடுமுறை விடப்பட்டுள்ளதால் குடும்பத்தி னருடன் பஸ் நிலைய ங்களில் பொது மக்கள் வந்திருந்தனர்.

    இதேப்போல் ஈரோடு ரெயில் நிலையத்திலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. அனைத்து ெரயில்களிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்பி விட்டன. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டா போட்டி போட்டனர்.

    குறிப்பாக கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூட்டம் கட்டு க்கடங்காமல் இருந்தது.

    இதன் காரணமாக நேற்று மாலை முதல் ஈரோடு மேட்டூர் ரோடு, காளை மாட்டுசிலை, ஸ்வஸ்திக் கார்னர், பன்னீர்செல்வம் பூங்கா பகுதிகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதேபோல் பல்வேறு வெளி மாவட்டங்களில் பணி புரியும் ஈரோட்டை சேர்ந்த வர்களும் தொடர் விடுமுறை காரணமாக ஈரோட்டிற்கு தங்களது குடும்பத்துடன் வர தொடங்கியுள்ளனர்.

    இன்று காலையும் ஈரோடு ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வர்த்தக சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    • தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை,

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வர்த்தக சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் விடுத்த கோரிக்கைகளின் விவரம் வருமாறு:-

    மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை அமல்படுத்தி அங்கு 17 ரெயில் நிலையங்களை அமைத்து, சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்டப் பாலம் கொண்டு வரப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு நடப்பாண்டு நிதி நிலை அறிக்கையில் போதிய நிதி ஒதுக்க வேண்டும்.

    மதுரை சக்கிமங்கலத்தில் சிட்கோ புதிய தொழில் பூங்கா அமைக்க வேண்டும். மதுரை நகரின் மையப் பகுதியில் உள்ள ஒட்டுமொத்த விற்பனை சந்தைகளையும் புறநகருக்கு மாற்றி, நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    மதுரை மையப் பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை, மாநகராட்சிக்கு வெளியே புதிய இடத்திற்கு மாற்றி அமைக்கப்படவுள்ளது. எனவே சிறைச்சாலை அமைந்த இடத்தை பசுமைப் பகுதியாக மேம்படுத்த வேண்டும்.

    விரகனூர் சந்திப்பு, அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பு, மண்டேலா நகர் சந்திப்பு, அரசு மருத்துவமனை சந்திப்பு போன்ற அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள சந்திப்புகளில் புதிய மேம்பாலம் அமைக்க ஏற்கனவே விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்கு நடப்பு நிதியாண்டில் போதிய நிதி ஒதுக்க வேண்டும்.

    மதுரை விமான நிலையத்தின் ஓடு தளத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் சுரங்க பாலம் (அண்டர்பாஸ்) அமைக்க வேண்டும். கப்பல்-விமான மார்க்கமாக ஏற்றுமதி செய்யும் சரக்கு மீதான போக்குவரத்து கட்டணம் மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி விலக்கு நீட்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று திடீரென்று லாரி பழுது ஏற்பட்டு சாலையில் நின்றது.
    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகே சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கடலூர்:

    வெளி மாவட்டங்களில் இருந்து சிதம்பரம், நாகப்பட்டினம் செல்ல க்கூடிய பெரும்பாலான வாகனங்கள் கடலூர் வழியாக சென்று வருகின்றது.இந்த நிலையில் கனரக வாகனங்கள் முழுவதும் கடலூர் ஜவான் பவன் சாலை வழியாக திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் , விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.இன்று காலை எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகில் ஜவான் பவன் சாலை வழியாக செல்வதற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று லாரி பழுது ஏற்பட்டு சாலையில் நின்றது. இதனால் பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் ஒன்றின் பின் ஒன்று அணிவகுத்து நிற்க தொடங்கியது. இதனை தொடர்ந்து அனைத்து வாகனங்களும் அதிக ஒலி எழுப்பி கொண்டிருந்தன.ஆனால் பழுதடைந்த லாரியை உடனடியாக சரி செய்ய முடியவில்லை.

    இதன் காரணமாக மிக முக்கிய சாலையாக கருதக்கூடிய திருப்பாதிரிப்புலியூர் சாலை முழுவதும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் பகுதி என்பதால் கூடுதலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பள்ளிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்ததோடு வெளியூருக்கு செல்லும் பொதுமக்களும் பஸ்களில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தனர். இதனை தொடர்ந்து அவசர அவசரமாக மெக்கானிக்கை வரவழைத்து வாகனத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகே சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சரி செய்தும் வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • சக டிரைவர்கள் மற்றும் பயணிகள் அவர்களை சமதானம் செய்து வைத்தனர்.
    • போக்கு–வரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் யார் முதலில் செல்வது என தனியார் மற்றும் அரசு பஸ்களுக்கும் இடையே போட்டி நிலவுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

    பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில், பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் வழித்தடத்தில் பகல் நேரத்தில் 3 நிமிடங்களுக்கு ஒரு பஸ் புறப்பட்டு செல்லும் வகையில் நேரம் ஒதுக்கீடு செய்து பஸ்கள் இயக்கபட்டு வருகிறது.

    பட்டுக்கோட்டை-– தஞ்சாவூர் வழித்தடத்தில் செல்லும் சில தனியார் பஸ்கள், அரசு பஸ்களை முந்தி செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அசுர வேகத்தில் செல்வதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் பட்டுக்–கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூருக்கு செல்வதற்கு அரசு பஸ் ஒன்று தயாராக இருந்த நேரத்தில், அதற்கு அடுத்த–தகாக தஞ்சாவூருக்கு செல்ல இருந்த தனியார் பஸ் ஒன்றில் பயணிகளை ஏற்றியுள்ளனர்.

    இது தொடர்பாக அரசு பஸ் ஓட்டுநருக்கும், தனியார் பஸ் ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த சக ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் சமதானம் செய்து வைத்தனர்.

    இதனால் பஸ் நிலை–யத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அவதி அடைந்த னர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தனியார் பஸ்சில் ஏறினால் விரைவாக சென்றுவிடலாம் என கருதி பயணிகள் ஏறுகின்றனர்.

    ஆனால் சில தனியார் பஸ்கள் தங்கள் பஸ்சில் அதிக அளவு பயணிகளை ஏற்ற வேண்டும் என்ற லாப நோக்கத்தில் செயல்பட்டு அரசு பஸ்சுக்கு பிறகு புறப்பட்டு அரசு பஸ்சை முந்தி சென்று அதிக அளவில் பயணிகளை ஏற்றுகின்றனர்.

    இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலரும், மாவட்ட கலெக்டரும் உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    பொதுமக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் போக்குவரத்து நெரிசலில் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், நீதிமன்ற வளாகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அண்ணா விளையாட்டு மைதானம், மஞ்சக்குப்பம் மைதானம், அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தற்காலிக உழவர் சந்தை போன்றவற்றை இருந்து வருகின்றது.

    இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்களும் மற்றும் மாணவர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் என ஆயிரக்கணக்கானோர் இவ்வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தையில் தற்போது புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் தற்காலிகமாக மஞ்சக்குப்பம் மைதானத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து மஞ்சகுப்பம் மைதானத்தின் ஒரு பகுதியில் கூரை கொட்டகை அமைத்து உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்கு உள்ள சிறு வியாபாரிகள் சாலையின் ஓரமாக காய்கறிகள், பழ வகைகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக சாலையில் நடந்து செல்லக்கூடிய மக்களும் வாகனங்களில் செல்லக்கூடிய மக்களும் சாலையில் நின்று கொண்டு தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழ வகைகளை வாங்கி செல்கின்றனர்.

    இதன் காரணமாக இவ்வழியாக வந்து செல்லக்கூடிய பொதுமக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் போக்குவரத்து நெரிசலில் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இது மட்டும் இன்றி போலீஸ் உயர் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகளும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளும் போது அங்குள்ள போக்குவரத்து போலீசார் உடனடியாக நேரில் வந்து போக்குவரத்தை சரி செய்து அங்குள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை எச்சரிக்கை செய்து செல்கின்றனர்.

    ஆனால் தினந்தோறும் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இதற்கு யார்? நிரந்தரமாக நடவடிக்கை எடுப்பார்கள் அல்லது சாலை ஓரத்தில் உள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் பொருட்களை தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள உழவர் சந்தைக்கு உள்ளே கொண்டு சென்று விற்பனை செய்தால் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இது மட்டும் இன்றி சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் முன்னேறுவதற்கு தடையாக இருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அனைவரும் இருந்தாலும் இது போன்ற போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சமயத்தில் போலீசார் மற்றும் அதிகாரிகள் இதற்கு நிரந்தர நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, எடப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். இந்த சாலைகளின் ஓரங்களில் பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.
    • இதனால் போக்குவரத்து மேலும் இடையூறு ஏற்படு–கிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, எடப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும்.

    இந்த சாலைகளின் ஓரங்களில் பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. சாலையின் நடுவில் டிவைடர் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே சாலை குறுகியதாக உள்ளது. அதில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்றால் டூவீலர்கள் கூட போக முடியாது.

    இந்த நிலையில் சாலையோரங்களில் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களும், கடைக–ளுக்கு சரக்கு கொண்டு வரும் டெம்போ, லாரி, சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.

    இதனால் போக்குவரத்து மேலும் இடையூறு ஏற்படு–கிறது. சரக்கு வாக–னங்கள் நகர் எல்லைக்குள் வந்து செல்ல குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும்.

    இதுபோல் போக்கு–வரத்திற்கு இடையூறு ஏற்ப–டுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் உரிமை–யாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • பல சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
    • இட பற்றாக்குறை இருப்பதால் பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அவசியம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றது. அதில் ஒரு பகுதியாக பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே தெற்கு அலங்கம் பகுதியில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் பல அடுக்கு நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகின்றது.

    இங்கே ஒரே நேரத்தில் 56 கார்களை நிறுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு வருகின்றது.

    இந்த பணியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது.பணி விரைவில் முடிந்து மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, நகர வளர்ச்சி மற்றும் வாகனங்களின் பெருக்கம் போன்றவற்றால் ஏற்படும் சாலை நெரிசல்கள் காரணமாக பல சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

    சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்வதாலும் நெரிசல் ஏற்படுகின்றது.

    இட பற்றாக்குறை இருப்பதால் பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அவசியம்.

    இந்த பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும்.

    இதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் ஓட்டுநர்கள் தங்கள் கார்களை நிறுத்த அங்கு இங்குமாக அலைய வேண்டிய அவசியம் இருக்காது என்றனர்.

    • மணல் காற்றில் பறப்பதால் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
    • பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சில இடங்களில் விபத்துகளும் நடந்து வருகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மாதிர வேலூர், பாலுரான்படுகை பகுதிகளில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது.

    இங்கிருந்து தினமும் பல லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்கு மணல் எடுத்து செல்லப்படுகிறது.

    அவ்வாறு, மணல் ஏற்றி செல்லும் லாரி, டிராக்டர்கள் பெரும்பாலும் தார்பாய் கொண்டு மூடாமல் மணல் எடுத்து செல்வதால் காற்றில் மணல் பறந்து சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்களில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    சில இடங்களில் மணல் சாலையில் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழுகின்றனர்.

    மேலும், சாலைகளில் கிடக்கும் மணல் காற்றில் பறப்பதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

    இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் கண், மூக்கை மூடிக் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சில இடங்களில் விபத்துகளும் நடந்து வருகிறது.

    எனவே, மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் கட்டாயம் தார்ப்பாய் கொண்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என குவாரி உரிமையாளர்கள், நிர்வாகிகள், லாரி டிரைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்த வேண்டும்.

    அவ்வாறு, தார்ப்பாய் கொண்டு மூடாமல் எடுத்துச் செல்லும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் ஹாரன்களை அலற விட்டதால் அப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள், வர்த்தகர்கள், பணியாளர்கள் அவதியடைந்தனர்.
    • இந்த ரெயில்வே கீழ்பாலம் 4 முனை சந்திப்பில் போக்குவரத்து போலீசாரை காலை முதல் இரவு வரை பணியமர்த்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயில்வே கீழ்பாலம் 4 ரோடு சந்திப்பில் இன்று 12.30 மணிமுதல் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் 4 சாலைகளிலும் ஏராளமான வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் ஹாரன்களை அலற விட்டதால் அப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள், வர்த்தகர்கள், பணியாளர்கள் அவதியடைந்தனர்.

    மேலும் இந்த ரெயில்வே கீழ்பாலம் 4 முனை சந்திப்பில் போக்குவரத்து போலீசாரை காலை முதல் இரவு வரை பணியமர்த்த வேண்டும் என பலரும் கூறினர்.

    நெருக்கடி மிகுந்த இந்த சாலையில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் அனைவரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    • போக்குவரத்து நெரிவல் காரணமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
    • பாதாள சாக்கடை கழிவு நீர் வந்து கொண்டிருப்பதால் அப்குதியில் யாரும் வசிக்க முடியாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஆணையர் மஞ்சுளா முன்னிலை வகித்தனர். உதவி அலுவலர் முருகன் வரவேற்றார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது,

    கிருஷ்ணன் தே.மு.தி.க :-

    செம்பனார்கோவில் கடைவீதி பகுதிகளில் பள்ளிகள் விடும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    அதனால் பள்ளிகள் அருகில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் டாக்டர், செவிலியர்கள் யாரும் இருப்பதில்லை.

    சத்தியன் வாய்க்காலில் மயிலாடுதுறை பாதாள சாக்கடை கழிவு நீர் வந்து கொண்டிருப்பதால் அப்குதியில் யாரும் வசிக்க முடியாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.

    மழை பெய்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் அபாயம் வருமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

    உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் சுகாதார பணியை மேற்கொள்ள வேண்டும்.

    சுமதி:-

    பிள்ளைபெ ருமாள் நல்லூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும்.

    அங்கன்வாடி கட்டடம் கட்ட வேண்டும்.

    சங்கரபாணி:-

    சேமங்க லம், ஆலவேளி, கருவாழக்கரை, கஞ்சா நகரம் பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் பயிர்கள் சேதமடைந்து வருகிறது.

    பூவேந்திரன் வடிகால் வாய்க்கால் தூர்வார வேண்டும், மருதூர் நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.

    சுப்ரமணியன்:-

    கஞ்சாநகரம் வாய்க்காலி ல் கல்வெட்டு சேதமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும், கன்னிகோயில் தெற்குதெரு சாலை சீரமைக்க வேண்டும்.

    அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.

    மைதிலிமகேந்திரன் அ.தி.மு.க. :-

    மேமாத்தூர் கிராமத்தில் காசான்தட்டை சாலை, மேலத்தெரு, வள்ளுவப்புள்ளி சாலை உட்பட பல சாலைகள் சேதமடைந்துள்ளது.

    அவற்றை சீரமைக்க வேண்டும். ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பொதுநிதியில் இருந்து வேலை கொடுக்க வேண்டும்.

    லட்சுமிபதி:-

    திருவிளை யாட்டம் தாமரைகுளம், கலசம்பாடி கிராம சாலைகள், குமாரமங்கலம் சாலை சீரமைக்க வேண்டும்.

    எழில்தாஸ்:-

    டி.மணல்மேடு கிராமத்தில் காலனித்தெரு பகுதியில் உள்ள குளத்தில் மூன்று புறமும் தடுப்புச்சுவர் அமைக்கப்படடுள்ளது.

    ஆனால் வீடுகள் இருக்கும் பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்படாததால் வீடுகள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

    தலைவர் நந்தினிஸ்ரீதர்:-

    ஆக்கூர், செம்பனார்கோவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒன்றியத்தில் சேதமடைந்த சாலைகள் குறித்து தெரிவித்துள்ளீர்கள் இது குறித்து பொறியாளர்கள் கொண்டு ஆய்வு செய்து புதிய சாலைகள் அமைக்கப்படும் என்றார்.

    கொள்ளிடம் கூட்டு குடிநீர் தொழில்நுட்ப அலுவலர் பன்னீர்செல்வம், சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் துணைத் தலைவர் மைனர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    ×