search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை ரெயில்வே கீழ்பாலம் 4 ரோடு சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல்
    X

    போக்குவரத்து நெரிசல் காரணமாக நான்குபுறமும் நீண்டதூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

    தஞ்சை ரெயில்வே கீழ்பாலம் 4 ரோடு சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல்

    • போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் ஹாரன்களை அலற விட்டதால் அப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள், வர்த்தகர்கள், பணியாளர்கள் அவதியடைந்தனர்.
    • இந்த ரெயில்வே கீழ்பாலம் 4 முனை சந்திப்பில் போக்குவரத்து போலீசாரை காலை முதல் இரவு வரை பணியமர்த்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயில்வே கீழ்பாலம் 4 ரோடு சந்திப்பில் இன்று 12.30 மணிமுதல் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் 4 சாலைகளிலும் ஏராளமான வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் ஹாரன்களை அலற விட்டதால் அப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள், வர்த்தகர்கள், பணியாளர்கள் அவதியடைந்தனர்.

    மேலும் இந்த ரெயில்வே கீழ்பாலம் 4 முனை சந்திப்பில் போக்குவரத்து போலீசாரை காலை முதல் இரவு வரை பணியமர்த்த வேண்டும் என பலரும் கூறினர்.

    நெருக்கடி மிகுந்த இந்த சாலையில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் அனைவரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×