search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகள் விடும் நேரத்தில் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும்
    X

    ஒன்றிய குழு கூட்டம்.

    பள்ளிகள் விடும் நேரத்தில் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும்

    • போக்குவரத்து நெரிவல் காரணமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
    • பாதாள சாக்கடை கழிவு நீர் வந்து கொண்டிருப்பதால் அப்குதியில் யாரும் வசிக்க முடியாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஆணையர் மஞ்சுளா முன்னிலை வகித்தனர். உதவி அலுவலர் முருகன் வரவேற்றார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது,

    கிருஷ்ணன் தே.மு.தி.க :-

    செம்பனார்கோவில் கடைவீதி பகுதிகளில் பள்ளிகள் விடும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    அதனால் பள்ளிகள் அருகில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் டாக்டர், செவிலியர்கள் யாரும் இருப்பதில்லை.

    சத்தியன் வாய்க்காலில் மயிலாடுதுறை பாதாள சாக்கடை கழிவு நீர் வந்து கொண்டிருப்பதால் அப்குதியில் யாரும் வசிக்க முடியாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.

    மழை பெய்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் அபாயம் வருமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

    உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் சுகாதார பணியை மேற்கொள்ள வேண்டும்.

    சுமதி:-

    பிள்ளைபெ ருமாள் நல்லூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும்.

    அங்கன்வாடி கட்டடம் கட்ட வேண்டும்.

    சங்கரபாணி:-

    சேமங்க லம், ஆலவேளி, கருவாழக்கரை, கஞ்சா நகரம் பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் பயிர்கள் சேதமடைந்து வருகிறது.

    பூவேந்திரன் வடிகால் வாய்க்கால் தூர்வார வேண்டும், மருதூர் நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.

    சுப்ரமணியன்:-

    கஞ்சாநகரம் வாய்க்காலி ல் கல்வெட்டு சேதமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும், கன்னிகோயில் தெற்குதெரு சாலை சீரமைக்க வேண்டும்.

    அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.

    மைதிலிமகேந்திரன் அ.தி.மு.க. :-

    மேமாத்தூர் கிராமத்தில் காசான்தட்டை சாலை, மேலத்தெரு, வள்ளுவப்புள்ளி சாலை உட்பட பல சாலைகள் சேதமடைந்துள்ளது.

    அவற்றை சீரமைக்க வேண்டும். ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பொதுநிதியில் இருந்து வேலை கொடுக்க வேண்டும்.

    லட்சுமிபதி:-

    திருவிளை யாட்டம் தாமரைகுளம், கலசம்பாடி கிராம சாலைகள், குமாரமங்கலம் சாலை சீரமைக்க வேண்டும்.

    எழில்தாஸ்:-

    டி.மணல்மேடு கிராமத்தில் காலனித்தெரு பகுதியில் உள்ள குளத்தில் மூன்று புறமும் தடுப்புச்சுவர் அமைக்கப்படடுள்ளது.

    ஆனால் வீடுகள் இருக்கும் பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்படாததால் வீடுகள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

    தலைவர் நந்தினிஸ்ரீதர்:-

    ஆக்கூர், செம்பனார்கோவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒன்றியத்தில் சேதமடைந்த சாலைகள் குறித்து தெரிவித்துள்ளீர்கள் இது குறித்து பொறியாளர்கள் கொண்டு ஆய்வு செய்து புதிய சாலைகள் அமைக்கப்படும் என்றார்.

    கொள்ளிடம் கூட்டு குடிநீர் தொழில்நுட்ப அலுவலர் பன்னீர்செல்வம், சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் துணைத் தலைவர் மைனர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×