search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவாரணத்தொகை"

    • கடந்த 128 நாட்களாக அவர்களுடைய சொந்த நிலத்தில் அமைதியாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்
    • டெல்டா மாவட்ட பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக கணக்கெடுத்து விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனம் சார்பில் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களை கையகப்படுத்தி, தொழிற்பேட்டை அமைப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார்கள்.

    இதனால் சிப்காட் திட்டத்தால் பாதிக்கப்பட உள்ள விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 128 நாட்களாக அவர்களுடைய சொந்த நிலத்தில் அமைதியாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அமைதியாக அறவழியில் போராடிய விவசாயிகள் மீது தமிழக அரசு சார்பில் குண்டர் சட்டம் போடப்பட்டது.

    இதற்கு விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்கு பின்னர் அரசு குண்டர் சட்டத்தை திரும்ப பெற்றது. விவசாயிகள் கஞ்சா கடத்தவில்லை, சாராயம் விற்கவில்லை, அவர்களுடைய சொந்த நிலத்தை காப்பாற்ற தான் போராடுகிறார்கள். அவர்கள் மீது குண்டர் சட்டம் போடுவது எந்த விதத்தில் நியாயம் இல்லை. விவசாயிகளை நசுக்கும் எந்த அரசும் நன்றாக இருந்த தில்லை. இதனை தமிழக அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.

    மேலும் தமிழகத்தில் ஏராளமான பொட்டல் காடுகள் இருக்கையில் விவசாய நிலங்களில் சிப்காட் போன்ற திட்டங்களைக் கொண்டு வராமல், மாற்று வழிகளை தமிழக அரசு சிந்திக்க வேண்டும். இந்த பருவ மழை காரணமாக டெல்டா மாவட்ட பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக கணக்கெடுத்து விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். குண்டர் சட்டம் போடும் வேகத்தை இழப்பீடு வழங்குவதிலும் தமிழக அரசு காட்டினால் மகிழ்ச்சியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பேக்கரி உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • உரியகாலத்திற்குள் வழங்காவிட்டால், வழக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புறநகர் அரணாரையில் வடக்கு தாஜ் நகரில் ஸ்நாக்ஸ், இனிப்பு ஆகிய உணவுபொருட்கள் தயாரிக்கும் ேபக்காி உள்ளது. இதன் உரிமையாளர் ராமஜெயம் (வயது 48). இவர் தனது காருக்கு பெரம்பலூர் பள்ளிவாசல் தெருவில் இயங்கிவரும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தார். காப்பீட்டை புதுப்பித்து தருவதற்காக பிரீமியத்தொகை ரூ.29 ஆயிரத்து 772-ஐ காசோலையாக செலுத்தியிருந்தார்.காப்பீடு 19.7.2022 முதல் 18.7.2023 வரை அமலில் உள்ளதாக தெரிவித்து காப்பீட்டு பாலிசி ராமஜெயத்திற்கு வழங்கப்பட்டது.

    இதனிடையே ராமஜெயம் கொடுத்திருந்த காசோலை மிகவும் தாமதமாக வங்கி கலெக்சனுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் அனுப்பப்பட்டிருந்தது. இந்தநிலையில் வங்கி கணக்கில் போதியளவு பணம் இருந்தும், ராமஜெயம் காப்பீட்டு நிறுவனத்திற்கு கொடுத்திருந்த காசோலையில் குறிப்பிட்ட தொகைக்கு எண்ணால் எழுத்தால் எழுதியிருந்ததற்கு வித்தியாசம் இருப்பதாக கூறி, காசோலை திருப்பி வந்துவிட்டதாக தெரிவித்து காப்பீட்டு கிளை மேலாளர் ராமஜெயத்திற்கு 55 நாட்களுக்கு பிறகு, இதுகுறித்து நோட்டீசு அனுப்பினர்.

    மேலும் அவருக்கு அளித்திருந்த காப்பீட்டு பாலிசியை ரத்து செய்திட வட்டார போக்குவரத்து அலுவலருக்கு, காப்பீட்டு நிறுவன கிளை மேலாளர் கடிதமும் அனுப்பி உள்ளார். ராமஜெயம் தனக்கு அளிக்கப்பட்ட நோட்டீசை எடுத்துக்கொண்டு காப்பீட்டு நிறுவன கிளை மேலாளரிடம் முறையிட்டுள்ளார். காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் ராமஜெயத்தை அவமரியாதை செய்து, திட்டி, அவரை அங்கிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

    இதில் மனவேதனை அடைந்த ராமஜெயம், தனது வக்கீல் வீரமுத்து மூலம் காப்பீட்டு நிறுவனத்தின் சென்னை பொதுமேலாளர், மதுரை மண்டல மேலாளர் மற்றும் பெரம்பலூர் கிளை மேலாளர் ஆகியோர் மீது பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 20.10.2022 அன்று மனுசெய்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மனுதாரரின் மனுவை பகுதியாக அனுமதித்து, இருதரப்பிலும் விசாரணை நடத்தினர்.

    இதில் காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாடு காரணமாக, புதுப்பிக்கப்பட்ட காப்பீட்டு ஆவணத்தை மனுதாரருக்கு உடனே வழங்க வேண்டும். மனஉளைச்சலுக்கு ஆளான மனுதாரருக்கு நிவாரணத்தொகையாக ரூ.50 ஆயிரம், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை 45 நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். உரியகாலத்திற்குள் வழங்காவிட்டால், வழக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தனர்.

    • ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு முதல்வரின் நிவாரண நிதி ரூ.9 கோடி வழங்க வேண்டும்.
    • இதில் 200 நபா்களுக்கு மட்டும் ரூ.2 கோடி நிவாரணத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்காமல் நிலுவையில் உள்ள ரூ.7 கோடி நிவாரணத்தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று பல்லடம் நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது தொடா்பாக தலைமைச் செயலாளா் வெ.இறையன்புக்கு பல்லடம் நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கத் தலைவா் கே.வி.எஸ்.மணிகுமாா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- திருப்பூா் வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட திருப்பூா், பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி உள்ளிட்ட வட்டங்களில் கடந்த 2019 முதல் 2022 ம் ஆண்டு வரை சாலை விபத்துகளில் உயிரிழந்தவா்கள், பாதிக்கப்பட்டவா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு முதல்வரின் நிவாரண நிதி ரூ.9 கோடி வழங்க வேண்டும்.

    இதில் 200 நபா்களுக்கு மட்டும் ரூ.2 கோடி நிவாரணத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள நபா்களுக்கு வழங்க வேண்டிய சுமாா் ரூ.7 கோடி நிவாரணத்தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல தாராபுரம் கோட்டத்தில் சுமாா் 900 நபா்களுக்கு ரூ.10 கோடி அளவுக்கு வழங்க வேண்டிய நிவாரணத்தொகையும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நிவாரணத்தொகை வழங்காததால் கோர்ட்டு ஊழியர்கள் கார்களை ஜப்தி செய்ய வந்தனர்.
    • கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை தத்தனேரியை சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு கூடல்புதூரில் சொந்தமாக நிலங்கள் இருந்தன. இந்த நிலத்தில் 1.14 ஏக்கர் மனையை ரெயில்வே நிர்வாகமும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுவதற்காக 1 ஏக்கர் நிலத்தை மாநக ராட்சியும் கடந்த 1973-ம் ஆண்டு ஆர்ஜிதம் செய்து கொண்டது.

    அப்போது அரசாங்கம் சார்பில் நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவிக்கப் பட்டது. இருந்த போதிலும் தரப்படவில்லை. எனவே கருப்பையா மதுரை நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அப்போது கருப்பையாவுக்கு 20.5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இருந்த போதிலும் அரசாங்கம் நிவாரணத் தொகை வழங்க முன்வரவில்லை.

    எனவே கருப்பையா மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். இதனைத் தொடர்ந்து கலெக்டரின் கார், கடந்த 2019-ம் ஆண்டு ஜப்தி செய்யப்பட்டது. அப்போது 2 மாத காலத்துக்குள் நிவாரண தொகை வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தின் பேரில், அந்த கார் மீட்கப்பட்டது.

    இந்த நிலையில் ெரயில்வே நிர்வாகம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    இதனைத்தொடர்ந்து மதுரை நீதிமன்ற ஊழியர்கள் இன்று மதியம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது கலெக்டர் மற்றும் டிஆர்ஓ ஆகியோரின் கார்களை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. இதனைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கருப்பையா தரப்பிடம் டி.ஆர்.ஒ சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×