search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிவாரணத்தொகை வழங்காததால் கார்களை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள்
    X

    நிவாரணத்தொகை வழங்காததால் கார்களை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள்

    • நிவாரணத்தொகை வழங்காததால் கோர்ட்டு ஊழியர்கள் கார்களை ஜப்தி செய்ய வந்தனர்.
    • கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை தத்தனேரியை சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு கூடல்புதூரில் சொந்தமாக நிலங்கள் இருந்தன. இந்த நிலத்தில் 1.14 ஏக்கர் மனையை ரெயில்வே நிர்வாகமும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுவதற்காக 1 ஏக்கர் நிலத்தை மாநக ராட்சியும் கடந்த 1973-ம் ஆண்டு ஆர்ஜிதம் செய்து கொண்டது.

    அப்போது அரசாங்கம் சார்பில் நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவிக்கப் பட்டது. இருந்த போதிலும் தரப்படவில்லை. எனவே கருப்பையா மதுரை நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அப்போது கருப்பையாவுக்கு 20.5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இருந்த போதிலும் அரசாங்கம் நிவாரணத் தொகை வழங்க முன்வரவில்லை.

    எனவே கருப்பையா மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். இதனைத் தொடர்ந்து கலெக்டரின் கார், கடந்த 2019-ம் ஆண்டு ஜப்தி செய்யப்பட்டது. அப்போது 2 மாத காலத்துக்குள் நிவாரண தொகை வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தின் பேரில், அந்த கார் மீட்கப்பட்டது.

    இந்த நிலையில் ெரயில்வே நிர்வாகம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    இதனைத்தொடர்ந்து மதுரை நீதிமன்ற ஊழியர்கள் இன்று மதியம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது கலெக்டர் மற்றும் டிஆர்ஓ ஆகியோரின் கார்களை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. இதனைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கருப்பையா தரப்பிடம் டி.ஆர்.ஒ சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×