search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவு தினம்"

    • எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது
    • இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்

    ஜெயங்கொண்டம்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜிஆரின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் மாவட்ட துணைச் செயலாளருமான ராமஜெயலிங்கம் தலைமையில் திருச்சி சாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.முன்னதாக அண்ணா சிலையில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர். இதேபோல் தி.க.கட்சி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் தலைமையில் அண்ணா சிலைக்கு அருகில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஒன்றிய தலைவர் கருணாநிதி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஒன்றிய அமைப்பாளர் தமிழ் சேகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ஜெயங்கொண்டம் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரியாரின் திருவுருவ சிலைக்கு ஜெயங்கொண்டம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமையில் ஜெயங்கொண்ட சட்டமன்ற தொகுதி செயலாளர் இலக்கியதாசன் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர்கள் சின்னராஜா, சுந்தர் மற்றும் இளையபாரதி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




    • கறம்பக்குடியில் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
    • அ.இ.அ.தி.மு.க. ஈ.பி.எஸ் அணி சார்பில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது

    கறம்பக்குடி

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மற்றும் நகர அ.இ.அ.தி.மு.க. ஈ.பி.எஸ் அணி சார்பில் அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜிஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு கரம்பக்குடி சீனி கடை முக்கத்திலிருந்து ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், கணேசன் மற்றும் நகர செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக சென்று மீன் மார்க்கெட்டில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி சாகுல் ஹமீது, தீத்தானிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம், குபேந்திரன், பல்லவராயன், முருகேசன், பந்துவக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், வாண்டான விடுதி ஒன்றிய கவுன்சிலர் திருநாவுக்கரசு, ராஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் பழனியப்பன், புது விடுதி சுலைமான் தகவல் தொடர்பு செயலாளர் முத்துசாமி, சேகர் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.




    • அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்துக்கு மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்தனர்.
    • மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர்கள் மகா கணபதி, கோவிந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க.வினர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி சின்ன கடை தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்துக்கு மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    இதில் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் அபுதாஹீர், மாவட்ட துணை செயலாளர் உதயகுமார், மாவட்ட மகளிர் இணை செயலாளர் சசிகலா, துணை செயலாளர் விமல், பொதுக்குழு உறுப்பினர் ஐ.ஓ.பி. பன்னீர்செல்வம், நகர செயலாளர் குமார் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர். கிட்டு, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர்கள் மகா கணபதி, கோவிந்தன் உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • திருப்புவனத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • ஓ.பி.எஸ். அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சோனைரவி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் மணலூர் மணிமாறன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாங்கம், ஒன்றிய பேரவை செயலாளர் பாண்டி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மனோன்மணி மதிவாணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலசந்தர், கிளைச் செயலாளர்கள் மணலூர் பிரபு, ராஜ், பீசர் பட்டினம் ராமசந்திரன், கீழடி சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இளையான்குடி ஒன்றியத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலா ளர்கள் பாரதிராஜன், ஜெகதீசுவரன், கோபி, நகர் செயலாளர் நாகுர்மீரா ஒன்றிய மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஜெயல லிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மானாமதுரை ஒன்றி யத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஸ்ரீதரன் தலைமையிலும் காளையார்கோவில் ஒன்றியத்தில் பஸ்நிலையம் முன்பு ஜெயலலிதா படத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவாஜி, மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பாசறை இணைச்செ யலாளர் மோசஸ், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    சிவகங்கை ஓ.பி.எஸ். அணி

    சிவகங்கை அ.தி. மு.க., (ஓ.பன்னீர் செல்வம் அணி) சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஆர்., அசோகன் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு ஊர்வலமாக வந்து மலர்

    தூவி மரியாதை செலுத்தி னர். நகர் செயலாளர் கே.வி., சேகர், மாவட்ட துணை செயலாளர் என்.எம்., ஜெயச்சந்திரன், மாவட்ட இளைஞரணி செயலா ளர் சுந்தரபாண்டியன், தொகுதி செயலாளர் நாக ராஜன், நகர் துணை செய லாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • தஞ்சை மேலவீதியில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு தஞ்சை மேல வீதியில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா படத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், பால்வளத் தலைவர் காந்தி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுபின்னர் முன்னாள்மேயர் சாவித்ரி கோபால், கவுன்சிலர் கோபால் ஆகியோர் ஏற்பாட்டின்படி பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்வில் எம்.ஜி.ஆர் மன்ற இணை செய லாளர் ராஜமாணிக்கம், கூட்டுறவு அச்சகத் தலைவர் புண்ணி யமூர்த்தி, பகுதி செயலா ளர் சாமிநாதன், மாண வரணி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • அவரது படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    ராமநாதபுரம்

    மறைந்த அ.தி.மு.க, பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் ராமநாதபுரத்தில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ. முனியசாமி ஆலோ சனையின் பேரில், நகர் செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன் ஏற்பா ட்டில் அரண்மனை அருகே ஜெயலலிதா படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சேது பாலசிங்கம், ஸ்டாலின் ஜெயச்சந்திரன், சரவணகுமார், ராமநாதபுரம் நகர் துணைச் செயலாளர் ஆரிப் ராஜா, முன்னாள் நகர் மன்ற தலைவர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் பாரதி நகரில் ராமநாதபுரம் (தெற்கு) ஒன்றியம், ராமநாதபுரம் நகர் (கிழக்கு) அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தர்மர் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதில் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ராஜேந்திரன், ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்து முருகன், ராமநாதபுரம் நகர் செயலாளர் (கிழக்கு) பாலசுப்பிரமணியன், மாவட்ட இணை செய லாளர் சித்ரா, மாவட்ட துணை செயலாளர் கற்பகம், தொகுதி செயலாளர் பரமக்குடி நவநாதன், முதுகுளத்தூர் மூக்கையா, திருவாடானை ராமகிருஷ்ணன், ராமநாத

    பு ரம் முத்துப்பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் உடையத்தேவன், சர வணன், நந்திவர்மன், கோட்டைச்சாமி, ரஜினிகாந்த், கரிகாலன், செந்தில் குமார், சண்முக பாண்டியன், கே.பாண்டி சரவணன், சுரேஷ், சிவக்குமார் சீனிமாரி, அழகர்சாமி மற்றும் பலர் பங்ேகற்றனர்.

    • அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை
    • அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் பங்கேற்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிகாலில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    அக்ரிகிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை போளூர், கீழ்பென்னாத்தூர் செங்கம் ஆகிய தொகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டன.

    • கடற்கரையில் உள்ள தியான மண்டபத்தில் ஜெயலலிதாவின் உருவ படம் வைக்கபட்டு மலர் தூவி அஞ்சலி.
    • அரிசி, காய்கறிகள் பிண்டம் வைத்து மறைந்த முதல்-அமைச்சருக்கு திதி கொடுத்து கடலில் விட்டனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திதி கொடுத்தார்.

    முன்னதாக கடற்கரையில் உள்ள தியான மண்டபத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ படம் வைக்கபட்டு மலர் தூவி அஞ்சலி, செலுத்தினர்.

    பின்னர் அரிசி, காய்கறிகள் பிண்டம் (சோற்று உருண்டை)வைத்து மறைந்த முதல்-அமைச்சருக்கு திதி கொடுத்து கடலில் விட்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதல்வர் ஓமந்தூரர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

     வாடிப்பட்டி

    வாடிப்பட்டி நகர் அரிமா சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் 52-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

    இதில் லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் பாலாஜி, வாடிப்பட்டி லயன்ஸ் தலைவர் சிவசங்கரன், முன்னாள் செயலாளர் குருசாமி, முன்னாள் பொருளா ளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர்.

    • அமைதி பேரணியை மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
    • கருணாநிதி உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தினம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அனுசரிக்கப்பட்டது. பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற அமைதி பேரணியை மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தில் இருந்து கருணாநிதியின் புகைப்படம் தாங்கிய பதாகைகள் ஏந்தியபடி புறப்பட்ட பேரணியானது பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளில் ராஜா எம்.எல்.ஏ., தொழில் அதிபர் ஆ.கே.காளிதாசன் ஆலடி எழில்வாணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், ஒன்றியச் செயலாளர்கள் சீனிதுரை, சிவன் பாண்டியன், அழகுசுந்தரம் மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள், கிளை, வார்டு நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • தி.மு.க.வினர் பழையநீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டு மவுன ஊர்வலமாக வாடிப்பட்டி பஸ்நிலையம் வந்தனர்.

    வாடிப்பட்டி

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவுநாள், வாடிப்பட்டி பஸ்நிலையத்தில் அண்ணாசிலை முன்பு மதுரைபுறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அனுசரிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கருணாநிதி படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பேரூர் செயலாளர் பால்பாண்டியன், ஒன்றியசெயலாளர் பாலராஜேந்திரன், மாவட்ட துணைச்செயலாளர் சேகர், மாநில பொதுக்குழுஉறுப்பினர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் மாவட்டதுணைச்செயலாளர் அயூப்கான், பேரூராட்சிதுணைத்தலைவர் கார்த்திக், மதுசூதனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தி.மு.க.வினர் பழையநீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டு மவுன ஊர்வலமாக பஸ்நிலையம் வந்தனர்.

    • வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • பா.ஜ.க.சாா்பில் அரண்மனை முன்பு அவரது உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துக்கோனின் 265-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பா.ஜ.க.சாா்பில் அரண்மனை முன்பு அவரது உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    அந்த படத்துக்கு, பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினா் சுப. நாகராஜன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தாா். வீரன் அழகுமுத்துக்கோன் வரலாற்றை விளக்கி, மாவட்ட பொருளாளா் தரணி முருகேசன் பேசினார். இதில் ராமநாதபுரம் நகா் தலைவா் நாகராஜன், மாநில மகளிரணி நிா்வாகி கலாராணி, மாநிலச் செயலாளர்கள் ரஜினி, காளீஸ்வரன், கவுன்சிலர் குமாா் உள்பட பலர் கலந்து கொண்டனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.சாா்பில் வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டப் பொறுப்பாளருமான காதா்பாட்சா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் நகராட்சி தலைவா் காா்மேகம் உள்பட பலர் கலந்து கொண்டு உருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினர்.

    ×