search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகராஜா கோவில்"

    • இன்று ஆவணி 3-வது ஞாயிறை முன்னிட்டு வழிபாடு
    • பால் ஊற்றி பெண்கள் வழிபாடு

    நாகர்கோவில், செப். 4-

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு செய்தால் நினைத்தது கைகூடும், திருமணங்கள் நடக்கும், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    எனவே ஆவணி ஞாயிற்று க்கிழமைகளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. 3-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையில் நாகராஜா கோவிலில் அதி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.இதை தொடர்ந்து நாகராஜருக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷே கங்களும், அலங்கார தீபாரா தனைகளும் நடந்தது.

    காலை முதலே கோவி லில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து நாகராஜரை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

    நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.நாகர் சிலைகளுக்கு மஞ்சள் பொடி தூவியும் பாலூட்டியும் வழிபட்டனர்.

    குமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்திருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் தலையாகவே காட்சியளித்தது. கோவில் வளாகத்தை விட்டு நுழைவு வாயில் வெளியே வரை சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    பக்தர்களுக்கு வசதியாக கோவில் நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்திருந்தது.

    மேலும் பக்தர்களுக்கு கோவில் கலையரங்கத்தில் அன்னதானமும் வழங்க ப்பட்டது. கோவிலுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பாக்கெட் பால்களை கப்புகளில் கொண்டு வந்து நாகர் சிலைகளுக்கு ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர் .கோவிலுக்குள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இதனால் நாகராஜா திடலில் பக்தர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தரிசனத்திற்கு சென்றிருந்தனர்.கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தார்கள்.
    • பலர் கைக்குழந்தைகளோடும் வந்து சாமி தரிசனம் செய்தார்கள்.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இ்ந்த கோவில் நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவது விசேஷமாகும். இதனால் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த ஆண்டுக்கான ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான கடந்த 21-ந் தேதி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகைதந்தனர். 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இது கடந்த வாரத்தை விட அதிகம். கோவிலின் உள்புறத்தில் இருந்து பிரதான வாயிலுக்கு வெளியே வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தார்கள்.

    கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாகவும், பலர் கைக்குழந்தைகளோடும் வந்து சாமி தரிசனம் செய்தார்கள். இதனால் நேற்று மதியம் நடை சாத்துவது தாமதம் ஆனது. சிறப்பு அர்ச்சனை டிக்கெட்டுகளும் கடந்த வாரத்தை விட நேற்று அதிக அளவில் விற்பனையானதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதே சமயத்தில் பக்தர்கள் வசதிக்காக அவர்களுக்கு தேவையான பால் பாக்கெட், மஞ்சள் பொடி, பூ, பழம், தேங்காய் தட்டு உள்ளிட்டவை கோவில் வளாகத்துக்குள்ளேயே விற்பனை செய்யப்பட்டது. பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும் நாகராஜா திடலில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவில் வளாகத்தில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. போலீசார் சீருடையிலும், மாற்று உடையிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் நேற்று நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவருடன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேசும், தி.மு.க.வினரும் உடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை இந்த கோவிலின் விசேஷமான நாட்களாகும்.
    • ஆண்களும், பெண்களும் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம்.

    இதனால் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கோவிலில் ஏராளமான ஆண்களும், பெண்களும் வந்து நாகர்சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டு செல்வார்கள். குறிப்பாக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை இந்த கோவிலின் விசேஷமான நாட்களாகும். இந்த நாட்களில் வழக்கத்தை விட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகராஜா கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை நேற்று ஆகும். இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. அதாவது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிடுவதற்கு வசதியாக கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் கடுமையான வெயில் சுட்டெரிப்பதால் பக்தர்களுக்கு வசதியாக பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இருந்தே கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இதையொட்டி பக்தர்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த வரிசை கோவிலின் பிரதான நுழைவு வாயிலுக்கு வெளியே வரை இருந்தது.

    கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு ஆண்களும், பெண்களும் பால் ஊற்றி வழிபாடு செய்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரள மாநில பகுதிகளில் இருந்து, நெல்லை மாவட்டப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

    சிறப்பு அபிஷேக அர்ச்சனைக்கு ரூ.400 கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறும் பக்தர்களுக்கு ஒரு லிட்டர் பால்பாயாசத்துடன் கூடிய சில்வர் பாத்திரம் ஒன்று, தேங்காய், பழம், பிரசாதம் அடங்கிய பிரசாத பை வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக பால்பாக்கெட், மஞ்சள் பொடி பாக்கெட் விற்பனை செய்யப்பட்டது.

    ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகராஜா திடலில் திருவிழாக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. வழக்கமாக மதியம் 12 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். ஆனால் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் நடை சாத்துவதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது.

    கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க கோவிலில் மொத்தம் 26 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    • நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபாடு
    • இன்று ஆவணி முதல் ஞாயிறு

    நாகர்கோவில்:

    நாக தோஷம் தீர்க்கும் புண்ணிய தலங்களில் ஒன்றாக நாகர்கோவில் நாகராஜா கோவில் விளங்குகிறது.

    இந்தக் கோவிலில் நாகர் சிலைகளுக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பால் ஊற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் திரும ணங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை. இதனால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. இதையடுத்து ஆவணி ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந் தது. கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நாகராஜரை தரிசித்தனர்.

    அங்குள்ள நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றியும் மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தார்கள். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவி லுக்கு வருகை தந்திருந்ததால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் தலையாகவே காட்சியளித்தது. கோவில் நுழைவு வாயிலை விட்டு வெளியே நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் நின்றனர். பல மணி நேரம் காத்து நின்று நாகராஜரை தரிசனம் செய்தனர்.

    கோவிலுக்குள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.இதையடுத்து பக்தர்கள் நாகராஜா திடலில் இரு சக்கர வாகனங்களையும், நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்திவிட்டு சாமி தரிசனத்திற்கு சென்றனர். நாக ராஜா திடலில் திருவி ழாக்கடைகள் அமைக்கப் பட்டு இருந்தது.

    அதில் குழந்தைகளுக் கான பலூன் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் விற்ப னைக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் பக்தர்க ளுக்கு வசதியாக பாக்கெட் பால்களும், மஞ்சள் பொடி யும் விற்பனை செய்யப்பட் டது. கோவிலில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி உட்பட அனைத்து வசதிகளையும் கோவில் நிர்வாகம் செய்திருந்தது. கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    வழக்கமாக நாகராஜா கோவிலில் மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படுவது வழக்கம். ஆனால் இன்று கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து நடை சாத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

    கோவிலில் கூட்டம் அலைமோதியதையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவிலுள்ள 26 கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவான காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணித்து வந்தனர்.

    • நாளை மறுநாள் ஆவணி முதல் ஞாயிறு என்பதை முன்னிட்டு ஏற்பாடு
    • நாகராஜா நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கு அனுமதி

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவில் நாக தோஷம் தீர்க்கும் பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.

    இந்த கோவிலில் வழி பட்டால் திருமணங்கள் கைகூடும் நாக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் குமரி மாவட்ட மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதி களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் புண்ணி யங்கள் கிடைக்கும் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் இந்த ஆண்டு நாகராஜா நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிக மாக இருக்கும்.

    எனவே அதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாகம் மேற் கொண்டு வருகிறது.கோவிலில் பந்தல் அமைக்கும் பணி மற்றும் நாகர் சிலைகளை சுத்தம் செய்யும் பணி, வர்ணங்கள் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய வசதியாக தடுப்பு கம்புகளும் கட்டப்பட்டு உள்ளது. ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் இரண்டு நாட் களே உள்ள நிலை யில் முன்னேற்பாடு பணி களை தீவிரமாக நடந்து வருகிறது. ஆவணி ஞாயிற் றுக்கிழமையான நாளை மறுநாள் 21-ந்தேதி நாக ராஜா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    21-ந்தேதி காலை 4 மணிக்கு நடை திறக்கப்படு கிறது.இதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடக்கிறது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடு களை இணை ஆணை யர் ஞானசேகர் தலைமை யில் கோவில் மேலா ளர் ராமச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். கூட்டம் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். பக்தர்களுக்கு வசதியாக குடிநீர் வசதிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அபிஷேக அர்ச்சனை கட்டணமாக ரூ.400 நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

    இதில் ஒரு லிட்டர் பால் பாயாசம் மற்றும் பாத்திரம் இலவசமாக வழங்கப்படும். தேங்காய் பழம் பிரசாதங்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • ஆவணி மாதம் வருகிற 17-ந் தேதி பிறக்கிறது.
    • ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில், நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்றாகும். நாகதோஷ பரிகார தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இந்த கோவிலுக்கு குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வந்து வழிபாடு செய்கிறார்கள். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா தொற்று குறைந்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த ஆண்டுக்கான ஆவணி மாதம் 2 நாட்கள் கழித்து, அதாவது வருகிற 17-ந் தேதி பிறக்கிறது. முதல் ஞாயிற்றுக்கிழமை21-ந் தேதியும், 2-வது ஞாயிற்றுக்கிழமை 28-ந் தேதியும், 3-வது ஞாயிற்றுக்கிழமை 4-ந் தேதியும், 4-வது ஞாயிற்றுக்கிழமை 11-ந் தேதியும் வருகிறது. இந்த தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறையும், கோவில் நிர்வாகமும் இணைந்து முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி, பக்தர்கள் ஒரு பாதை வழியாக சாமி தரிசனம் செய்து, மறுபாதை வழியாக வெளியேறுவதற்கான ஏற்பாடுகள், கோவில் வளாகத்தில் பக்தர்கள் நிற்க வசதியாக பந்தல் அமைக்கும் பணி போன்றவை நடைபெற்று வருகின்றன.

    • ஆவணி ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
    • ஆய்வின் போது கோவில் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிற் றுக்கிழமைகளில் வழிபாடு செய்தால் திருமணங்கள் கைகூடும், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் ஆவணி ஞாயிற் றுக்கிழமைகளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    குமரி மாவட்டம் மட்டு மின்றி பிற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் மேற் கொண்டுள்ளது. கோவிலில் பந்தல் அமைக்கும் பணி உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை இன்று காலை மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு மேற் கொண்டார். பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப் படை வசதிகள் குறித்து அவர் பார்வையிட்டார். கோவிலில் உள்ள கழிவ றையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதை சுத்தமாக வைத்துக்கொள்ள கோவில் ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.

    மேலும் அந்த பகுதியில் கிடந்த மணலை அகற்றவும் உத்தரவிட்டார். மேலும் கோவில் வளாகத்தில் உள்ள முட்புதர்களை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.ஆய்வின் போது கோவில் மேலாளர் ராமச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    • தரிசனம் செய்ய செல்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
    • நாகர் கருவறை சன்னதியின் மேல் கூரை ஓலையால் வேயப்பட்டதாகும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையில் நடை திறக்கப்பட்டது நாக ராஜருக்கு சிறப்பு அபி ஷேகங்களும் தீபாரா தனைகளும் நடந்தது. கோவிலில் சாமி தரி சனத்திற்கு காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தரிசனம் செய்ய செல்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால்ஊற்றியும் மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது .நாகர் கருவறை சன்னதியின் மேல் கூரை ஓலையால் வேயப்பட்டதாகும்.

    இந்த மேற்கூரை ஓலைகள் ஆண்டுதோறும் ஆடி மாதம் மாற்றப்படும். அதன்படி நேற்று ஆடி கிருத்திகை ஒட்டி நாகராஜர் சன்னதியின் மேல் கூரையை பூஜாரிகள் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    • மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமையன்று பொதுமக்கள் கூட்டம் கோவிலில் அதிகமாக இருக்கும்.
    • புதுமண தம்பதிகளும் அதிகளவில் கோவிலுக்கு வந்ததை காணமுடிந்தது.

    குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் முக்கியமான ஒன்று நாகர்கோவில் நாகராஜா கோவில் ஆகும். ஞாயிற்றுக்கிழமையன்று நாகராஜரை தரிசனம் செய்தால் சகல செல்வமும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அதனால் மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமையன்று பொதுமக்கள் கூட்டம் கோவிலில் அதிகமாக இருக்கும்.

    அதிலும் நேற்று ஆயில்யம் நட்சத்திரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் ஒன்றாக வந்ததால் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, மதுரை மற்றும் கேரளா உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்தும் நாகராஜா கோவிலுக்கு பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து சாமியை தரிசனம் செய்தனர்.

    சாமி தரிசனம் செய்ய கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். மேலும் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றியும், மஞ்சள் பொடிதுவியும் வழிபட்டனர். புதுமண தம்பதிகளும் அதிகளவில் கோவிலுக்கு வந்ததை காணமுடிந்தது. பக்தர்களின் கூட்டத்தை முன்னிட்டு கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ×