search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு: நாகராஜா கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
    X

    ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு: நாகராஜா கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    • ஆவணி மாதம் வருகிற 17-ந் தேதி பிறக்கிறது.
    • ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில், நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்றாகும். நாகதோஷ பரிகார தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இந்த கோவிலுக்கு குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வந்து வழிபாடு செய்கிறார்கள். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா தொற்று குறைந்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த ஆண்டுக்கான ஆவணி மாதம் 2 நாட்கள் கழித்து, அதாவது வருகிற 17-ந் தேதி பிறக்கிறது. முதல் ஞாயிற்றுக்கிழமை21-ந் தேதியும், 2-வது ஞாயிற்றுக்கிழமை 28-ந் தேதியும், 3-வது ஞாயிற்றுக்கிழமை 4-ந் தேதியும், 4-வது ஞாயிற்றுக்கிழமை 11-ந் தேதியும் வருகிறது. இந்த தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறையும், கோவில் நிர்வாகமும் இணைந்து முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி, பக்தர்கள் ஒரு பாதை வழியாக சாமி தரிசனம் செய்து, மறுபாதை வழியாக வெளியேறுவதற்கான ஏற்பாடுகள், கோவில் வளாகத்தில் பக்தர்கள் நிற்க வசதியாக பந்தல் அமைக்கும் பணி போன்றவை நடைபெற்று வருகின்றன.

    Next Story
    ×