search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagaraja Temple"

    • மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகராஜர் அருள்பாலிக்கிறார்.
    • பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாகக் கருதுகின்றனர்.

    நாகர்கோவில் புறநகர் பகுதியில் உள்ளது. இக்கோயிலின் பெயரிலேயே ஊர் நாகர்கோவில் என்றழைக்கப்படுகிறது. இது கேரள பாரம்பரியக் கோவில் ஆகும். இங்கு மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகராஜர் அருள்பாலிக்கிறார். இந்த கோவிலைச் சுற்றி ஏராளமான பாம்பு சிலைகள் உள்ளன. பொதுமக்கள் இந்த சிலைகளுக்குப் பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாகக் கருதுகின்றனர்.

    இக்கோவிலின் கருவறையின் மேல் ஓலை வேயப்பட்டு உள்ளது. இது வேறு எந்தக் கோவிலிலும் பார்க்கமுடியாத சிறப்பு அம்சமாகும். அது மட்டுமல்ல இந்தக் கோவிலின் கருவறை மண் ஆறு மாதம் கருப்பாகவும் ஆறு மாதம் வெண்மையாகவும் காணப்படுகிறது.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமையான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாகர் சிலைக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.

    • 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
    • பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகராஜா கோவிலும் ஒன்று. தமிழகத்தில் நாகதோஷ பரிகார தலங்களில் நாகரே மூலவராக வீற்றிருப்பது இங்கு மட்டும் தான். இதனாலேயே வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்கி றார்கள். இப்படி சிறப்பு மிகுந்த நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வாகன பவனி, சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    9-ம் திருவிழாவான இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு பாமா மற்றும் ருக்மணியுடன் அனந்த கிருஷ்ணர் தேரில் எழுந்தருளினார். அதன்பிறகு தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து தேரை ஏராளாமான ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தில் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் ஹரே கிருஷ்ணா...ஹரே கிருஷ்ணா என்ற பக்தி கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது 4 ரத வீதியையும் சுற்றி நிலைக்கு வந்து சேர்ந்தது.

    ஆடி அசைந்து வந்த தேரை ஏராளமான மக்கள் வீடுகளின் மாடியில் நின்றும், ரத வீதிகளின் இருபுறமும் நின்றும் பார்த்து சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்பானங்கள், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

    தேரோட்டத்தை யொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர் நிலைக்கு வந்ததும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று இரவு 8 மணிக்கு கச்சேரியும், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் திருவிழாவான 27-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும், மாலை 5.30 மணிக்கு ஆராட்டும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறப்பு அபிஷேக பூஜையும், சிறப்பு வழிபாடும், மக்கள் இசையும் நடந்தது.
    • தேரோட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தந்திரி நாகராஜன் நம்பூதிரி கொடியேற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து கொடி மரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அபிஷேக பூஜையும், சிறப்பு வழிபாடும், மக்கள் இசையும் நடந்தது.

    விழாவில் விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், சுவாமி பத்மேந்திரா, நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அக்சயா கண்ணன், ரோ சிட்டா திருமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இரவு 7.20 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. இதில் சுவாமி பத்மேந்திரா கலந்து கொள்கிறார். இரவு 8.30 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், இதைத் தொடர்ந்து புஷ்ப விமானத்தில் சாமி எழுந்த ருளல் நிகழ்ச்சியும் நடக்கி றது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை வாகன பவனியும், சமய சொற்பொழிவும், சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனையும் நடக்கிறது.

    9-ம் திருவிழா நாளான 26-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி., எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., ஆணையாளர் ஆனந்த மோகன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள். இதைத் தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு கச்சேரியும், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான 27-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும், மாலை 5.30 மணிக்கு ஆராட்டும் நடக்கி றது. இரவு 9.30 மணிக்கு ஆராட்டுத்துறையில் இருந்து சாமி திருக்கோவி லுக்கு எழுந்தருள் நிகழ்ச்சி நடக்கிறது.

    • ஆண்டுதோறும் தைத்திருவிழா நடைபெறும்.
    • கால்நாட்டு விழா நேற்று காலையில் கோவிலில் நடந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் தைத்திருவிழா நடைபெறும். அதன்படி வருகிற ஜனவரி மாதம் 18-ந் தேதி தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான கால்நாட்டு விழா நேற்று காலையில் கோவிலில் நடந்தது.

    நிகழ்ச்சியில் கோவில் நம்பூதிரி கேசவன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கால் நாட்டப்பட்டது. இதில் கண்காணிப்பாளர் ஆனந்த் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர்.
    • கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கோவில் அலுவலகத்தில் இருந்து போலீசார் கண்காணித்தனர்.

    நாகர்கோவில்:

    நாகதோஷம் தீர்க்கும் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக நாகர்கோவில் நாகராஜா கோவில் விளங்குகிறது. இங்கு பக்தர்கள் தோஷங்கள் நீங்கவும் திருமணங்கள் கைகூடவும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

    நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும். திருமணங்கள் கைகூடும். தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்டு தோறும் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. முதல் ஆவணி ஞாயிற்றுக்கிழமையான இன்று (20-ந் தேதி) காலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட் டது. இதை தொடர்ந்து நாகராஜருக்கு தீபாராதனையும் அபிஷேகமும் நடந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து நாகராஜரை தரிசனம் செய்தனர். குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கோவில் வளாகத்தை விட்டு வெளியே வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சாமி தரிசனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் காத்திருந்தனர். நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபடுவதற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

    பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். இதனால் நாகராஜா கோவில் வளாகம் முழுவதும் இன்று பக்தர்கள் தலையாகவே காட்சியளித்தது. பக்தர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு இருந்தனர். கோவில் கலையரங்கத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவிலில் கூட்டம் அலை மோதியதையடுத்து இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் கோவில் வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. நாகராஜா கோவில் மைதானத்தில் பக்தர்கள் இருசக்கர வாகனங்களையும் 4 சக்கர வாகனங்களையும் நிறுத்தி சென்று இருந்தனர்.

    மேலும் பக்தர்களுக்கு வசதியாக பால் மற்றும் மஞ்சள் பொடிகள் கோவில் வாசலிலும் நாகராஜா திடல் பகுதியில் உள்ள சாலை ஒரங்களிலும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக கோவில் நடை 12 மணிக்கு சாத்தப்படுவது வழக்கம். ஆனால் இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் நடை சாத்துவதில் தாமதம் ஏற்படலாம். சாமி தரிசனத்திற்கு குமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதியதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கோவில் அலுவலகத்தில் இருந்து போலீசார் கண்காணித்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
    • நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தனர்.

    நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தர்கள் காலை முதல் மாலை வரை கோவிலுக்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.

    அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் அரச மரத்தை சுற்றி அமைந்துள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தனர்.

    பின்னர் அங்கு மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசனம் செய்துவிட்டு மூலவரான நாகராஜரை வழிபட்டனர். பல பக்தர்கள் நாகராஜருக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவற்றை அபிஷேகத்துக்காக கொடுத்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாகராஜா கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • 10 நாட்கள் திருவிழா நிறைவடைந்தது.

    தமிழகத்தில் நாகதோஷ பரிகார ஸ்தலங்களில் நாகரே மூலவராக வீற்றிருக்கும் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் தை திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வாகன பவனி, சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    இதைத்தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பாமா மற்றும் ருக்மணியுடன் அனந்த கிருஷ்ணர் தேரில் எழுந்தருளிய காட்சியை ஏராளமான பக்தர்கள் ரத வீதிகளில் இருபுறமும் கூடி நின்று பார்த்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு ஆகியவை நடந்தது. மாலையில் நாகராஜா கோவில் தெப்பகுளத்தில் சாமிக்கு ஆராட்டு விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆராட்டு முடிந்ததும் சாமி ஒழுகினசேரி ஆராட்டு துறைக்கு எழுந்தருளினார். பின்னர் அங்கு அலங்காரம் முடித்து கோவிலுக்கு சாமி புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.

    ஆராட்டுத்துறையில் இருந்து கோவிலுக்கு எழுந்தருளிய சாமியை வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அத்துடன் 10 நாட்கள் திருவிழா நிறைவடைந்தது. முன்னதாக மாலையில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.

    • ஆண்களும் பெண்களும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • நாளை ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாக தோஷம் தீர்க்கும் புண்ணிய ஸ்தலங்களில் நாகராஜா கோவிலும் ஒன்றாகும். இங்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபட்டு வருகிறார்கள். நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தைமாதம் 10-நாட்கள் திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலை மாலை நேரங்களில் வாகன பவனி சிறப்பு அபிஷேகம் சிறப்பு வழிபாடு ஆன்மீக சொற்பொழிவு பரதநாட்டியம் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

    9-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதையடுத்து காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.

    இதைத் தொடர்ந்து சுவாமி அனந்த கிருஷ்ணன், பாமா, ருக்மணியுடன் தேரில் எழுந்தருளினார்கள்.இதைத் தொடர்ந்து தேருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தேர் சக்கரத்திற்கு தேங்காய் உடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆண்களும் பெண்களும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேரோட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், இணை ஆணையர் ஞானசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேர் 4 ரத வீதிகளிலும் இழுத்து வரப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தேர் திருநிலைக்கு வந்தது. தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலை மோதியது. கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தையொட்டி கோவிலில் அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நடைபெறும். 10-ம் திருவிழாவான நாளை 6-ந் தேதி காலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மாலை 5 மணிக்கு நாகராஜா கோவில் திருக்கோவில் திருக்குளத்தில் வைத்து ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருள் நிகழ்ச்சி நடைபெறும்.

    • 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 6-ந்தேதி திருக்கோவில் திருக்குளத்தில் ஆராட்டு நடைபெறும்.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா இன்றுகாலை 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நாகராஜருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.

    இதைத் தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் நம்பூதிரிகள் கொடி ஏற்றி வைத்தனர். கொடியேற்று விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், இணை ஆணையர் ஞானசேகர், சுவாமி பத்மேந்திரா கோவில் மேலாளர் ராமச்சந்திரன், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், சுரேந்திர குமார், மாநகர செயலாளர் ஆனந்த், கவுன்சிலர்கள் ரோசிட்டா, கலாராணி மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது

    கொடியேற்று விழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். இரவு 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் இரவு 8.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    திருவிழா நாட்களில் புஷ்ப விமானம், சிங்க வாகனம், கமலம் வாகனம், சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், ஆதிசேஷ வாகனம், யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    தினமும் சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனைகள் இன்னிசை கச்சேரிகள் சமய சொற்பொழிவு பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கிறது .

    9-ம்திருவிழாவான 5-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம்பிடித்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு கச்சேரியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறும்.

    10-ம் திருவிழாவான 6-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் ஆன்மீக சொற்பொழிவு சொல்ரலுமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நாகராஜா திருக்கோவில் திருக்குளத்தில் வைத்து ஆராட்டு நடைபெறும். இரவு 9 மணிக்கு ஆராட்டு துறையிலிருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.

    தேரோட்டத்தையொட்டி நான்கு ரத வீதிகளும் சீரமைக்கும் பணிநடைபெற்று வருகிறது. தேரேட்ட விழாவில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே அதற்கான முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • இந்த விழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா வருகிற 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி 28-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றம், கொடியேற்று பூஜை, சிறப்பு அபிஷேக பூஜை, வழிபாடுகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மங்கள இசை, 6.30 மணிக்கு சிறப்புரை, இரவு 7 மணிக்கு மண்டகப்படி, ஆன்மிக சொற்பொழிவு, 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி, 8.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சாமி எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 7 மணிக்கு புஷ்ப வாகனத்தில் சாமி எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, மண்டகப்படி, 8.30 மணிக்கு சாமி வாகனத்தில் எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது.

    7-ம் நாள் விழாவான அடுத்த மாதம்(பிப்ரவரி) 3-ந்தேதி இரவு 9 மணிக்கு இந்திர வாகனத்தில் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் நாள் விழாவான 5-ந்தேதி காலை 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் தேர்வடம் தொட்டு இழுத்தல் (தேரோட்டம்) நடக்கிறது. தேரோட்டத்தை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைக்கிறார்.

    தேரோட்ட நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி., எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து அன்னதானம், இரவு 8 மணிக்கு கச்சேரி, 9.30 மணிக்கு சப்தாவர்ணம் ஆகியவை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 6-ந்தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், மாலை 5 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழி, 6.15 மணிக்கு கதா காலசேபம், இரவு 7.45 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து கொம்மண்டை அம்மன் சாமி கொம்மண்டை அம்மன் கோவிலுக்கு எழுந்தருளல், 9.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி கோவிலுக்கு எழுந்தருளுதல் ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • பிப்ரவரி 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 6-ந்தேதி ஆராட்டு நடைபெறும்.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா வருகிற 28-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 7.30 மணிக்கு திரு கொடியேற்றம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக பூஜையும் சிறப்பு வழிபாடும் மங்கல இசையும் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. இரவு 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் இரவு 8.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    2-ம் திருவிழாவான 29-ந் தேதி காலை 7.00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷேக பூஜையும் சிறப்பு வழிபாடும் சொற் பொழிவும் ஆன்மீக சொற் பொழிவும் பக்தி இன்னிசை யும் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    3-ம் திருவிழா வான 30-ந் தேதி காலை 7.00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் சொற்பொழிவும் நடக்கிறது. இரவு இன்னிசை நிகழ்ச்சியும் 8.30 மணிக்கு சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    31-ந்தேதி காலை 7 மணிக்கு சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் அபிஷேகமும் இன்னிசை கச்சேரியையும் நடைபெறும்.இரவு 8 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சியும் இரவு 8.30 மணிக்கு கமல வாக னத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    5-ம் திருவிழாவான அடுத்த மாதம் 1-ந்தேதி அதிகாலை 5.15 மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷே கமும் சிறப்பு வழிபாடும் முளைப்பாரி பூஜையும் பக்தி இன்னிசையும் வீணை கச்சேரியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சி நடக்கிறது.

    6-ம் திருவிழாவான 2-ந்தேதி அதிகாலை 5:15 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருள் நிகழ்ச்சி யும் சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் சொற்பொழிவு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி எழுந்த ருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    7-ம் திருவிழா வான 3-ந்தேதி காலை 5.15 மணிக்கு பல்லக்கில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் ஸ்ரீநாகராஜா சன்னதி சிறப்பு அபிஷேகமும் ஸ்ரீ அனந்த கிருஷ்ணன் சன்னதி சிறப்பு அபிஷேகமும் பக்தி இன்னிசையும் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி எழுந்த ருளல் நிகழ்ச்சி நடைபெறும்.

    8-ம் திருவிழாவான 4-ந்தேதி ஸ்ரீ நாகராஜா சன்னதியில் சிறப்பு அபிஷே கமும் சிறப்பு வழிபாடும் சொல் அரங்கம் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.

    9-ம் திருவிழாவான 5-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாநகர மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி., எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. மாநகராட்சி ஆணை யர் ஆனந்தமோகன், கவுன் சிலர்கள் ரோஸிட்டா திருமால், கலா ராணி ஆகி யோர் கலந்து கொள்கிறார்கள். இதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு கச்சேரியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறும்.

    10-ம் திருவிழாவான 6-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் ஆன்மீக சொற் பொழிவு சொல் ரகமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நாகராஜா திருக்கோவில் திருக்குளத்தில் வைத்து ஆராட்டு நடைபெறும். இரவு 9 மணிக்கு ஆராட்டு துறையிலிருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    • இந்த கோவிலில் 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
    • கும்பாபிஷேகம் நடத்த அரசும், கோவில்கள் நிர்வாகமும் தீர்மானித்துள்ளனர்.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. தற்போது அதற்கான ஏற்பாடுகளை அரசும், மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகமும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது தொடர்பாக கோவிலை சார்ந்தவர்களும், பக்தர்களும் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

    இதுதொடர்பாக நாகராஜா கோவில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி கூறியதாவது:-

    1992-ம் ஆண்டில் இருந்து இந்த கோவிலில் பூஜை செய்து வருகிறேன். கலியுகத்தில் நாகராஜா இங்கு சுயம்புவாக இருக்கிறார். அதனால் ஆயில்ய நட்சத்திர தினம் இங்கு முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். நாகதோஷ பரிகாரங்கள் நடைபெறுகிறது. நாகராஜா, அனந்த கிருஷ்ணன், சிவன் ஆகியோர் மூலவர்களாக உள்ளனர். இங்கு சைவ, வைணவ ஆராதனை நடைபெறுகிறது. துர்க்கைக்கும் பூஜை செய்யப்படுகிறது. ஆகம விதிப்படியும், தாந்திரீக முறைப்படியும் பூஜைகளும், நாகராஜருக்கு பால் அபிஷேகமும் நடைபெறுகிறது. பால்பாயாசம் நைவேத்யமாக வழங்கப்படுகிறது. இந்த கோவில் கும்பாபிஷேகம் 2006-ம் ஆண்டு நடந்தது. தற்போது கும்பாபிஷேகம் நடத்த அரசும், கோவில்கள் நிர்வாகமும் தீர்மானித்துள்ளனர். கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடைபெற பக்தர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    மனக்குறை

    நாகர்கோவிலைச் சேர்ந்த நீலகண்டன் (வயது 63) கூறியதாவது:-

    ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த புனித தலமாக நாகராஜா கோவில் இருந்து வருகிறது. கும்பாபிஷேகம் 2006-ம் ஆண்டு நடந்தது. 12 ஆண்டுகள் கழித்து அதாவது 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தியிருக்க வேண்டும். பல்வேறு சூழ்நிலை காரணமாக நடக்கவில்லை. இது மனதுக்கு பெரும் குறையாக இருந்து வந்தது. தற்போது கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கூடிய விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். விரைவாக கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று ஊர் சார்பாகவும், அனந்தகிருஷ்ணா பக்தசேவா அறக்கட்டளை சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.

    வருமானத்தில்...

    நாகர்கோவிலைச் சேர்ந்த தொழிலதிபர் மோகன் (70) கூறியதாவது:- நான் கடந்த 60 ஆண்டுகளாக நாகராஜரை வழிபட்டு வருகிறேன். கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்கு என்னை போன்ற உபயதாரர்கள் உதவ தயாராக இருக்கிறோம்.

    நமது வருமானத்தில் ஒரு தொகையை சாமிக்கு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை. எனவே சிறப்பாக கும்பாபிஷேகத்தை நடத்தி விடலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    ரூ.1½ கோடி மதிப்பீடு

    குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இந்த கோவில் கும்பாபிஷேகத்துக்கான திட்ட மதிப்பீடு ரூ.1½ கோடியில் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் டைல்ஸ்களை கருங்கல் தளமாக மாற்றுதல், மகாமேரு மாளிகை பழுது பார்த்தல், கிழக்கு முகப்பு மண்டபம் பழுது பார்த்தல், நாகர் சன்னதி முன்பக்க ஆனைக்கொட்டில் மண்டபம் பழுதுபார்த்தல், ஜெனரேட்டர் அறை பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள், கோவில் கதவு மற்றும் ஜன்னல்கள் பழுது பராமரிப்பு செய்தல் போன்ற திருப்பணிகள் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2024-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×