search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபாடு
    X

    நாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபாடு

    • தரிசனம் செய்ய செல்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
    • நாகர் கருவறை சன்னதியின் மேல் கூரை ஓலையால் வேயப்பட்டதாகும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையில் நடை திறக்கப்பட்டது நாக ராஜருக்கு சிறப்பு அபி ஷேகங்களும் தீபாரா தனைகளும் நடந்தது. கோவிலில் சாமி தரி சனத்திற்கு காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தரிசனம் செய்ய செல்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால்ஊற்றியும் மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது .நாகர் கருவறை சன்னதியின் மேல் கூரை ஓலையால் வேயப்பட்டதாகும்.

    இந்த மேற்கூரை ஓலைகள் ஆண்டுதோறும் ஆடி மாதம் மாற்றப்படும். அதன்படி நேற்று ஆடி கிருத்திகை ஒட்டி நாகராஜர் சன்னதியின் மேல் கூரையை பூஜாரிகள் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×