search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி விழா"

    • பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள்.
    • தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தரும் அன்னையாவாள்.

    நவராத்திரி நான்காம் நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபட வேண்டும்.

    கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள்.

    விஷ்ணு பத்தினியாவாள்.

    பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள்.

    தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தரும் அன்னையாவாள்.

    நான்காம் நாள் நைவேத்தியம்:- கற்கண்டு சாதம்.

    • இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு.
    • சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும்.பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள்.

    நவராத்திரி மூன்றாம் நாள் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும்.

    வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள்.

    சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும்.

    பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள்.

    தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள்.

    இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு.

    இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.

    மூன்றாம் நாள் நைவேத்தியம் :- தயிர்சாதம்.

    • தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.
    • சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.

    நவராத்திரி இரண்டாம் நாள் அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும்.

    மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள்.

    தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.

    ஓங்கார சொரூபமானவள்.

    சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.

    வீரத்தை தருபவள்.

    இரண்டாம் நாள் நைவேத்தியம்:- தேங்காய் சாதம்.

    • திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள்.
    • கடின உழைப்பாளிகள் உழைப்பின் பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

    நவராத்திரி முதலாம் நாள் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும்.

    அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள்.

    திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள்.

    அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள்.

    சர்வ மங்களம் தருபவள்.

    தர்மத்தின் திருவுருவம்.

    கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

    முதல் நாள் நைவேத்தியம்:- புளியோதரை.

    • வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.
    • பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.

    புரட்டாதி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூஜை செய்தல் வேண்டும்.

    வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.

    விரதம் கைக்கொள்ளுவோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும்

    பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.

    ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று

    காலை ஒன்பது மணிக்கு முன் பாறணை செய்தல் வேண்டும்.

    இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.

    விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவு பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து

    நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பாராயணம் செய்த,

    குடும்ப அங்கத்தவர்களுடன் பாறணையைப் பூர்த்தி செய்யலாம்.

    தசமி திதியில் பாறணை செய்தல் வேண்டும்.

    இவ்விரதத்தை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து அனுட்டித்தல் வேண்டும்.

    நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள்

    சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள்

    என்று காரணாகமம் கூறுவதாக சொல்லப்படுகின்றது.

    • இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு.
    • அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.

    வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்காபூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

    இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு.

    நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர்.

    இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.

    இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில் சஞ்சரிப்பார்.

    புதன் கல்வி ,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர்.

    அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.

    இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும்

    புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள்.

    புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர்.

    (சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு) கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம்.

    அவற்றை பெற்று வாழ்வு வளம்பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை

    கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.

    • அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.
    • ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.

    அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.

    இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன.

    இந்தப் பெயர்களை சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

    ஜெய் காளி- எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்

    ஜெய் சண்டிகாதேவி- செல்வம் சேரும்

    ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.

    ஜெய் துர்க்கா- ஏழ்மை அகலும், துன்பம் விலகும், போரில் வெற்றி கிடைக்கும், மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.

    ஜெய் சுபத்ரா- விருப்பங்கள் நிறைவேறும்

    ஜெய் ரோகிணி- நோய் தீரும்.

    நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும்,

    அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.

    கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச் சொல்லவும்.

    • கவுமாரி - மயில்
    • நரசிம்மி - சிங்கம்

    இந்திராணி - யானை

    வைஷ்ணவி - கருடன்

    மகேஸ்வரி - ரிஷபம்

    கவுமாரி - மயில்

    வராகி - எருமை

    அபிராமி - அன்னம்

    நரசிம்மி - சிங்கம்

    சாமுண்டி - பூதம்

    • வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
    • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.

    நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான்.

    அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது.

    அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.

    இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு. இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும்.

    இந்த மாதங்களில் உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும்.

    அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும்.

    இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும் என்றார்.

    இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

    வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

    நான்கு வகையான வசதிகளை விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி.

    கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள்,

    அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள், சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது.

    இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும்

    மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.

    மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.

    • செங்கோட்டை, சுற்று வட்டார கோவில்களில் நவராத்திரி விழா நடைபெறுகிறது.
    • தினமும் அம்பாளுக்கு மங்கள ஆரத்தி, தீபாராதனை நடத்தப்பட்டு வருகிறது.

    செங்கோட்டை:

    நவராத்திரி திருவிழா நாடுமுழுவதும் 9 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் துர்க்கா பூஜையாகவும், தென் மாநிலங்களில் விஜயதசமி, ஆயுத பூஜை என்றும், புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் இந்த பூஜை தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.

    செங்கோட்டை கோவில்கள்

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நவராத்திரி விழாவையொட்டி செங்கோட்டை அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரநாத சுவாமி கோவில், முப்புடாதி அம்மன் கோவில், வண்டிமலச்சி அம்மன் கோவில், நித்திய கல்யாணி அம்பாள் கோவில், பிரானூர் பார்டரில் பிரசித்தி பெற்று விளங்கும் தீப்பாய்ச்சி மாரியம்மன் கோவில், முப்புடாதி அம்மன் கோவில், ஸ்ரீவிநாயகர், அரசநங்கை, முப்பிடாதி அம்மன் உட்பட செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார அனைத்து கோவில்களிலும் நவராத்திரி விழா நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு தினமும் அம்பாளுக்கு ஒவ்வொரு அலங்காரம், சிறப்பு தீபாராதனை, விசேஷ நிகழ்ச்சிகள் மற்றும் தினமும் மங்கள ஆரத்தி தீபாராதனை நடத்தப்பட்டு வருகிறது. அதனை போன்று வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும் கொலு பொம்மைகள் வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது.

    கொலு பொம்மைகள்

    இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளிலும் கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டு வருகின்றனர். கொலு பொம்மைகளாக தெய்வ அவதாரங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையிலான பொம்மை செட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் சரித்திர நிகழ்வுகளை பறைசாற்றும் விதமாக கிருஷ்ணன் லீலைகள், விநாயகர் திருவிளையாடல், வள்ளி, தெய்வானை, முருகன் திருவுருவ காட்சிகள், முளைப்பாரி செட், கல்யாண கார் ஊர்வலம், கிராம செட், பொங்கல் செட், ஐஸ்வரேஸ்வரர் செட், கல்யாண செட், அழகர் செட் உள்ளிட்டவைகளும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், குபேரன் பொம்மைகள், காவலர்கள், கிரிக்கெட் செட், விளையாட்டு, உயிரினங்கள் சாதன செட்களுடன் 5, 7, 9, 11 என அவரவர் விருப்பத்திற்கிணங்க படிகள் அமைக்கப்பட்டு அவற்றில் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.

    • அன்னை பாலாவின் கலச ஸ்தாபனத்தை பாலா பீட நிர்வாகி மோகன்ஜி செய்து வைத்து அபிஷேகம், அர்ச்சனை செய்தார்.
    • விழாவில் சாரதி அகாடமி குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    சென்னை:

    நெமிலி ஸ்ரீ பாலா பீடத்தில் பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில் மணி தலைமையில் நடைபெற்ற நவராத்திரி இசை விழாவை சீர்காழி டாக்டர். சிவசிதம்பரம் பாடி தொடங்கி வைத்தார்.

    அன்னை பாலாவின் கலச ஸ்தாபனத்தை பாலா பீட நிர்வாகி மோகன்ஜி செய்து வைத்து அபிஷேகம், அர்ச்சனை செய்தார். குருஜி நெமிலி பாபாஜி தலைமையில் அன்னை பாலா ஆன்மீக குடும்பங்கள் "குடும்ப விருத்தி பூஜை" நடைபெற்றது. விழாவில் சாரதி அகாடமி குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நவராத்திரி கொலு திறக்கப்பட்டது.

    சென்னை சூர்யா மருத்துவமனை இதய நோய் பிரிவு தலைமை மருத்துவர் டாக்டர் ஜெயராஜ், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் ரமணா ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சிகள் "பால மோகி" சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. விழா முடிவில் செயலர் முரளிதரன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நவராத்திரி கொலு விழா நடைபெற்றது.
    • பெண்கள் கும்மி அடித்தபடி நடமாடி அம்மனை வழிபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி நம்பியூர் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன், பிளேக் மாரியம்மன் கோவில்கள்.

    இக்கோவில்களில் ஆண்டுதோறும் நவராத்திரி கொலு விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நவராத்திரி கொலு விழா நடைபெற்றது.

    அதில் 2-வது நாளாக நேற்று பெண்கள் பாரம்பரிய நாட்டுப்புற பாடல்கள் பாடி கும்மி அடித்தபடி நடமாடி அம்மனை வழிபட்டனர். முன்னதாக அம்மனுக்கு வில்வ பல பொடியினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    ×