என் மலர்
நீங்கள் தேடியது "Navaratri Festival at"
- நவராத்திரி கொலு விழா நடைபெற்றது.
- பெண்கள் கும்மி அடித்தபடி நடமாடி அம்மனை வழிபட்டனர்.
பு.புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி நம்பியூர் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன், பிளேக் மாரியம்மன் கோவில்கள்.
இக்கோவில்களில் ஆண்டுதோறும் நவராத்திரி கொலு விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நவராத்திரி கொலு விழா நடைபெற்றது.
அதில் 2-வது நாளாக நேற்று பெண்கள் பாரம்பரிய நாட்டுப்புற பாடல்கள் பாடி கும்மி அடித்தபடி நடமாடி அம்மனை வழிபட்டனர். முன்னதாக அம்மனுக்கு வில்வ பல பொடியினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.






