search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி தற்கொலை"

    • மனம் உடைந்த விநாயக் பல முறை தனது காதலியிடம் பேச முயன்றுள்ளார்.
    • காதலியின் வீட்டிற்கு சென்ற விநாயக் காதலியின் வீட்டு திண்ணையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருப்பூர்:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் விநாயக். இவர் திருப்பூர் ஓம்சக்தி கோவில் அருகே உள்ள வெங்கடேசன் நகரில் குடியிருந்து அதே பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ளார். அவர் ஒடிசாவில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த விநாயக் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த வடமாநில இளம்பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் விடுமுறை நாட்களில் வெளியே சுற்றி வந்துள்ளனர். இது ஒடிசாவில் உள்ள விநாயக்கின் மனைவிக்கு தெரியவந்தது.

    இதையடுத்து திருப்பூர் வந்த விநாயக்கின் மனைவி, அந்த பெண்ணிடம் எனது கணவருடன் இனி பேசக்கூடாது என்று கண்டித்து சென்றுள்ளார். அது முதல் அந்த பெண் விநாயக்கிடம் பேசுவதை தவிர்த்துக் கொண்டார்.

    இதில் மனம் உடைந்த விநாயக் பல முறை தனது காதலியிடம் பேச முயன்றுள்ளார். அதற்கு அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கவே, அதே பகுதியில் உள்ள காதலியின் வீட்டுக்கு பல முறை சென்று தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சியுள்ளார். இதற்கு அந்த பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

    நேற்று காதலியின் வீட்டிற்கு சென்ற விநாயக் காதலியின் வீட்டு திண்ணையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை ஏற்க மறுத்ததால் காதலி வீட்டில் பனியன் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
    • நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே பாலாஜி நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது52). கூலித்தொழிலாளி. நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மாலையில் ராஜூபட்ரா வேலையை முடித்து விட்டு அறைக்கு சென்றுபார்த்தபோது கவுதம் ரஜாக் அங்குள்ள இரும்பு கம்பியில் தூக்கில் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கவுதம்ரஜாக் என்ன காரணத்திற்காக தூக்குபோட்டு கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    மேற்கு வங்கம் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டம் தப்பட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம் ரஜாக் (வயது23). இவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் செங்குட்டை கிராமத்தில் ஒரு அறையை வாடகை எடுத்து தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார். இவருடன் மேற்கு வங்கத்தை சேர்ந்த ராஜூபட்ரா (22) என்பவரும் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கவுதம் ரஜாக் மனவேதனையுடன் காணப்பட்டார். நேற்று காலையில் ராஜூபட்ரா வேலைக்கு செல்லும்போது கவுதம் ரஜாக்கை அழைத்து உள்ளார். அப்போது அவர் சிறிது நேரம் கழித்து வேலைக்கு வருவதாக கூறினார். இதைத்தொடர்ந்து ராஜூபட்ரா வேலைக்கு சென்று விட்டார். ஆனால் கவுதம் ரஜாக் வேலைக்கு வரவில்லை. மாலையில் ராஜூபட்ரா வேலையை முடித்து விட்டு அறைக்கு சென்றுபார்த்தபோது கவுதம் ரஜாக் அங்குள்ள இரும்பு கம்பியில் தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அவர் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கம்பை நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் பிணமாக கிடந்த கவுதம் ரஜாக்கின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கவுதம்ரஜாக் என்ன காரணத்திற்காக தூக்குபோட்டு கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வடவள்ளி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையாம்பாளையத்தை சேர்ந்தவர் 28 வயது கூலித் தொழிலாளி. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த வாலிபரை வீட்டிற்கு அழைத்து ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக தொழிலாளிக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் இளம்பெண் தனது குழந்தைகளுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் தொழிலாளி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மது பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
    • மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி பாரஸ்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம்(48). இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். டெய்லரிங் வேலை பார்த்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனஉளைச்சலில் இருந்த மாரிச்செல்வம் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தேனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வயிற்று வலி இருந்து வந்தது. பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
    • மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

    தேனி:

    தேனி அருகே தேவாரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது55). இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்தது. பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார். உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மனைவி இறந்ததை நினைத்து மன வேதனை அடைந்து வந்தார்.
    • இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமந்தகடவை சேர்ந்தவர் முருகன்(49). கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு அவரது மனைவி இறந்து விட்டார். முருகன் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    அதற்காக அடிக்கடி கோவை வந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதேபோல், நேற்று முன்தினம் முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கோவை வந்தார். தெற்கு உக்கடம் சிஎம்சி காலனியில் உள்ள தனது உறவினர் மாரிசாமி என்பவரது வீட்டில் தங்கினார்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் முருகன் மனைவியின் முதலாவது ஆண்டு நினைவு தினம் என்பதால், தனது மனைவியை நினைத்து மன வேதனை அடைந்துள்ளார். அவரது இறப்பை தாங்கி கொள்ள முடியாமல் அழுது புலம்பியுள்ளார். மேலும் தனது உறவினரான பழனிசாமி என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது ''எனது மனைவி இறந்து ஓராண்டு ஆகி விட்டது. அவரது நினைவை என்னால் மறக்க முடியவில்லை, அவரது நினைவு நாளில் நானும் அவருடன் செல்கிறேன்'' என உருக்கமாக தெரிவித்துள்ளார். அவரது உறவினரும் அவரை தேற்றியுள்ளார்.

    இருப்பினும் மனைவியின் நினைவு வாட்டியதால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முருகன் உறவினரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த உக்கடம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் முதலாவது ஆண்டு நினைவு நாளில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ரவி மது குடிப்பதை குடும்பத்தினர் கண்டித்து வந்தனர்.
    • மனவேதனை அடைந்த ரவி வீட்டின் அருகே திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த ஆதிகேசவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது47). கூலித்தொழிலாளி. இவர் மது குடிப்பதை குடும்பத்தினர் கண்டித்து வந்தனர். இதனால் மன வேதனை அடைந்த ரவி வீட்டின் அருகே திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மாந்தோப்பில் நேற்று அசோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள சாமந்தமலை பகுதியை சேர்ந்தவர் அசோகன் (வயது35). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் கடந்த 5 வருடமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் அசோகன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

    நேற்று அதே பகுதியில் ரைஸ்மில் அருகே உள்ள மாந்தோப்பில் நேற்று அசோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மனைவி பிரிந்து சென்றதால் கண்ணதாசனும் கடந்த சில நாட்களாகவே சோகத்துடன் காணப்பட்டார்.
    • மனைவி பிரிந்து சென்றதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்க சென்றார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சியில் உள்ளது மாணிக்கல்லாடி கிராமம்.

    இந்த கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (45). தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தனது மனைவியுடன் அந்த பகுதியில் வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி சண்டை போட்டதாகவும் தெரிகிறது. அவர்களை உறவினர்கள் சமாதானம் செய்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த கண்ணதாசனின் மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து கண்ணதாசன் மட்டும் தனியாக வாழ்ந்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் கண்ணதாசனும் கடந்த சில நாட்களாகவே சோகத்துடன் காணப்பட்டார்.

    யாரிடமும் சரியாக பேசாமல் மவுனமாகவே இருந்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்க சென்றார்.

    இன்று அதிகாலை 2 மணிக்கு கண்ணதாசனின் வீட்டில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியாகி ஓடி வந்து பார்த்தனர்.

    அப்போது வீட்டிற்குள் கண்ணதாசன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உடனடியாக மக்கள் சம்பவம் குறித்து தேவர்சோலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர் எப்படி இறந்தார் என்பதை அறிய வீடு முழுவதும் சோதனை செய்தனர். அப்போது அவரது உடல் அருகே நாட்டு துப்பாக்கி ஒன்று கிடந்தது.

    அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கண்ணதாசன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரிடம் நாட்டு துப்பாக்கி எப்படி வந்தது? எதற்காக நாட்டு துப்பாக்கி வைத்திருந்தார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாழ்க்கையில் வெறுப்படைந்த ரவி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
    • இன்று அதிகாலை ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைக்கு சென்ற ரவி, நீண்ட நேரம் ஆகியும் வார்டுக்கு திரும்பவில்லை.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சாத்தம்பாடியை சேர்ந்தவர் ரவி(வயது 36). கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி வாய்ப்புண் ஏற்பட்டது. இது தொடர்பாக ரவி பல மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை.

    இதையடுத்து அவர் சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ரவிக்கு நாக்கில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவி மனம் உடைந்தார். டாக்டர்கள் ரவியை மேல் சிகிச்சைக்காக மதுரை பாலரங்காபுரத்தில் உள்ள அரசு புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உள் நோயாளியாக சேர்க்கப்பட்ட ரவி கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால் அவருக்கு வலி அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரவி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். அதன்படி இன்று அதிகாலை ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைக்கு சென்ற ரவி, நீண்ட நேரம் ஆகியும் வார்டுக்கு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் கழிவறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தனது கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்ற நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
    • ஆத்திரம் அடைந்த முனிராஜ், கீழே கிடந்த கல்லை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் மகாதேஸ்வரா பெட்டாவை அடுத்த நாகமலைப்பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி.

    கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் லட்சுமி கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இருப்பினும் தொடர்ந்து முனிராஜ், மனைவியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மனைவியை பார்க்க வந்த முனிராஜ் சமரசம் பேசுவதற்காக அங்குள்ள மலைப்பகுதிக்கு கூட்டி சென்றார். அங்கு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முனிராஜ், கீழே கிடந்த கல்லை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஆத்திரம் தீராத முனிராஜ் இந்த காட்சியை செல்போனில் படம் எடுத்தார். வீடியோவாக படம் பிடித்த அவர் அந்த காட்சியை வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்துள்ளார். இந்த காட்சியை அவரது உறவினர்கள் பலரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் உடனடியாக முனிராஜை போனில் தொடர்பு கொண்டனர். இந்த விவரம் மாதேஸ்வரன் மலை போலீசாருக்கும் தெரியவந்தது. போலீசார் முனிராஜை தொடர்பு கொண்டனர்.

    இதனால் பதறிய முனிராஜ் வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அப்பகுதி மக்கள் உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மகாதேஸ்வரன் மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×