search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி தற்கொலை"

    • நோய் கொடுமையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • கம்பம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம்:

    கம்பம் 25-வது வார்டு நந்தகோபாலன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 45). இவருக்கு கடந்த சில வாரங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

    சம்பவத்தன்று மனமுடைந்த நிலையில் இருந்த ஜெகதீஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கணேஷ்வரி கொடுத்த புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வீடியோ காலில் சின்னையா பேசி வந்துள்ளார்.
    • மீண்டும் மறுநாள் தனது கணவருக்கு போன் செய்தபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள மூங்கில்பட்டியை சேர்ந்தவர் சின்னையா (45). கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கோகிலா என்ற மனைவியும், மாரிச்செல்வம் (14), கவிவரதன் (11) ஆகிய மகன்களும், பிரணிஷா (5) என்ற மகளும் உள்ளனர். உள்ளூரில் சரிவர வேலை கிடைக்காததால் சின்னையா வெளிநாடு செல்ல முடிவு செய்தார். அதன்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனியார் ஏஜெண்ட் மூலம் ஈராக் நாட்டில் கம்பி கட்டும் வேலைக்கு சென்றார்.

    அங்கு சென்ற பின்பு அவ்வப்போது தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வீடியோ காலில் சின்னையா பேசி வந்துள்ளார். வேலை சற்று கடினமாக இருப்பதாகவும் இருந்தபோதும் சில மாதங்கள் இங்கு இருந்துவிட்டு பின்னர் ஊருக்கு வந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். அதன் பிறகு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது மனைவியிடம் சின்னையா அழுகுரலுடன் பேசியுள்ளார். மனைவி கோகிலா கேட்டபோது நான் இனிமேல் ஊருக்கு வரமுடியாது. பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து ஆளாக்குமாறு கூறியுள்ளார்.

    இதனால் பதறிப்போன கோகிலா மீண்டும் அவரிடம் கேட்டபோது, தன்னை இங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் சிலர் ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இனிமேல் நான் உயிர் வாழக்கூடாது. இந்த வீடியோவை நமது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் பார்த்தால் தலைகுனிவாகி விடும் என கண்ணீர் விட்டு பேசியுள்ளார். அதற்கு மனைவி கோகிலா எது நடந்தாலும் பரவாயில்லை. நீங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்துவிடுங்கள். இங்கே கிடைக்கும் வேலையை செய்துகொண்டு வாழலாம் என அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

    பின்னர் மீண்டும் மறுநாள் தனது கணவருக்கு போன் செய்தபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதட்டமான கோகிலா தனது கணவருடன் வேலைக்குச் சென்ற வீரப்புலி என்பவரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கோகிலாவிடம் உனது கணவர் தூக்குப்போட்டு இறந்துவிட்டார் என கூறினார்.

    இதைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்த கோகிலா தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருடன் நத்தம் மண்டல துணை வட்டாட்சியர் அண்ணாமலையிடம் மனு அளித்தார். அதில் தனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் அண்ணாமலை இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து சின்னையா உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • அண்ணாமலை வனவாசியில் உள்ள மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி அண்ணாமலை பரிதாபமாக இறந்துவிட்டார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள சூரப்பள்ளி கடைக்காரன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை (34), நெசவுத்தொழிலாளி. இவரது மனைவி கோகிலா (28). இவர்களுக்கு கவினேஷ் (6), ஜெகதீஷ் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    அண்ணாமலை வனவாசியில் உள்ள மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அண்ணாமலைக்கும், அவரது மனைவி கோகிலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை 2 மகன்களுடன் சூரப்பள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

    இதையடுத்து கோகிலா தனது குழந்தைகளை கணவரிடமிருந்து மீட்டு தரக்கோரி நங்கவள்ளி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் அண்ணாமலையை அழைத்து விசாரித்துள்ளனர். மேலும் குழந்தையை கோகிலாவிடம் அனுப்பி வைக்குமாறு கூறியதாக தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த அண்ணாமலை தனது 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு சன்னியாசி முனியப்பன் கோவில் என்ற பகுதிக்கு சென்றார். பின்னர் தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சிக்கொல்லி மாத்திரைகளை தனது 2 மகன்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் தின்றுள்ளார். மாத்திரைகளை சப்பி பார்த்த குழந்தைகள் கீழே துப்பிவிட்டனர். ஆனால் அண்ணாமலை மாத்திரைகளை விழுங்கியதால் மயங்கினார். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாமலை பரிதாபமாக இறந்துவிட்டார். தொடர்ந்து அவரது 2 மகன்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நங்கவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்மேல்பாக்கம் காட்டுப்பகுதியில் மதியழகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடந்தார்.
    • மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு அருகே உள்ள செங்குன்றம், நரசிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் மதியழகன்(வயது32). மகேந்திராசிட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.

    நேற்று இரவு பணிக்கு சென்ற அவர் பின்னர் திரும்ப வரவில்லை. இந்த நிலையில் இன்று காலை மறைமலைநகர் அருகே உள்ள தென்மேல்பாக்கம் காட்டுப்பகுதியில் மதியழகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடந்தார். அருகில் அவரது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மனம் உடைந்த நிலையில் இருந்தவர் ஒத்தக்கண் பாலம் வழியாக வந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    • ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (வயது 59).கூலித் தொழிலாளி. இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.இதனால் அவர் தனது மகன் இலியாசுடன் வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த அப்துல் மாலிக் ஒத்தக்கண் பாலம் வழியாக வந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி, எஸ்.பி தனிப்பிரிவு காவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி ஏல சீட்டு பணம் எடுத்துச் செல்வதை அறிந்த ஸ்ரீனிவாஸ் நெல்லூர் மார்க்கெட்டில் புதியதாக கத்தி ஒன்றை வாங்கினார்.
    • தனியாக நடந்து சென்ற மனைவியை வழி மடக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், செமுடு குண்டாவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். கூலி தொழிலாளி. இவரது மனைவி மானேயம்மா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    ஸ்ரீனிவாசுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. குழந்தைகள் இருவரும் தனக்கு பிறக்கவில்லை என கூறி தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியை உடல் ரீதியாக துன்புறுத்தி வந்தார்.

    இதனால் விரக்தி அடைந்த மானேயம்மா தனது குழந்தைகளுடன் லிங்கைய்ய பாளையத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். மனைவி பிரிந்து சென்றதால் மாமியார் வீட்டிற்கு சென்ற ஸ்ரீனிவாஸ் அங்குள்ள பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடத்தி மனைவியை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

    இந்த நிலையில் மானேயம்மா கூலி வேலை செய்து குங்கப்பூடி கிராமத்தில் ஏல சீட்டு கட்டி வந்தார். நேற்று இரவு மானேயம்மா ஏல சீட்டு எடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு நடந்து சென்றார்.

    மனைவி ஏல சீட்டு பணம் எடுத்துச் செல்வதை அறிந்த ஸ்ரீனிவாஸ் நெல்லூர் மார்க்கெட்டில் புதியதாக கத்தி ஒன்றை வாங்கினார். தனியாக நடந்து சென்ற மனைவியை வழி மடக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

    பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற ஸ்ரீனிவாஸ் சிறிது நேரத்தில் தனக்குத்தானே உடல் முழுவதும் கத்தியால் வெட்டிக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

    அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீனிவாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூலி தொழிலா ளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
    • மனமுடைந்து காணப்பட்ட சக்திவேல் நேற்று மதியம் வீடடில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண் டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள ராஜா கொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது45).

    கூலி தொழிலா ளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்து காணப்பட்ட சக்திவேல் நேற்று மதியம் வீடடில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண் டார்.

    இது குறித்து இண்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எஸ்.வாழவந்தி அருகே கே.புதுப்பாளையத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கோழிப்பண்ணையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
    • கோழி பண்ணையில் வேலை முடிந்ததும் வெளியே சென்று விட்டு இரவில் வெகுநேரம் கழித்து கணவர் வருவதாக மனைவி கோவிந்தம்மாள் மாமியாரி டம் கூறியதாக தெரிகிறது.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பாலசமுத்திரம்பட்டியைச் சேர்ந்தவர் செளந்தரராஜன். இவரது மகன் முத்துக்குமார் (வயது 22). இவரது மனைவி கோவிந்தம்மாள்.

    இவர்கள் இருவரும் எஸ்.வாழவந்தி அருகே கே.புதுப்பாளையத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கோழிப்பண்ணையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் கோழி பண்ணையில் வேலை முடிந்ததும் வெளியே சென்று விட்டு இரவில் வெகுநேரம் கழித்து கணவர் வருவதாக மனைவி கோவிந்தம்மாள் மாமியாரி டம் கூறியதாக தெரிகிறது. இதனால் முத்துக்கு மாரை அவரது தாய் கண்டித் துள்ளார். தாய் கண்டித்த தால் மன முடைந்து காணப் பட்ட அவர், கடந்த 25-ந் வீட்டிற்கு வந்தவுடன் வாந்தி எடுத்து மயக்க மடைந்தார். அவரை உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அப்போது, முத்துக்குமார் எலி மருந்தை சாப்பிட்டது தெரியவந்தது. சிகிச்சைக்கு பின் கடந்த 27-ந் தேதி வீட்டிற்கு வந்த அவர், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை யில் சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் உயிரிழந் தார். இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் தனியா இருந்த முருகன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி அடுத்த மாதவரம் முஸ்லீம் நகரை சேர்ந்தவர் முருகன் (44). தொழிலாளி. இவரது மனைவி குடும்ப தகராறில் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் வீட்டில் தனியா இருந்த முருகன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என அடையாளம் தெரியவில்லை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அல்லிமுத்து மகன் அருண்குமார் ( வயது 25). இவர் ஏ.சி. மெக்கானிக்கல் படித்து விட்டு, தற்போது சென்ட்ரிங் கூலி வேலை செய்து வந்தார்.

    இவருக்கு திருமணம் ஆகி அபிராமி (21) என்ற மனைவியும், அதிதீ (1½) மகளும் உள்ளனர். இதில் அருண்குமார் நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுசென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் பதறிப்போன அவரது உறவினர்கள் அக்கம், பக்கம் வீடுகளில் தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் வின்னமங்கலம் - ஆம்பூர் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு அருண்குமார் சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன், விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி ரெயில் தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைப் பற்றி பிரத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என விவரம் தெரியவில்லை. ெரயில் முன் பாய்ந்த தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி இறந்தாரா என தெரியவில்லை.

    இது குறித்து ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலாஜி தனியாக பொன்னேரி பகுதியில் வாழ்ந்து வந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த உப்பளம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 52). தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. திருமணமான சில மாதத்திலேயே சாந்தி கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் பாலாஜி தனியாக பொன்னேரி பகுதியில் வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் மனவேதனையில் இருந்த அவர் பொன்னேரி ஆற்றங்கரையோரம் உள்ள சுடுகாட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • மகளின் கல்லூரி கட்டணம் கட்ட முடியாததால் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த பெருமுகை சித்தர் தெருவை சேர்ந்தவர் அன்பு ஜீவ நேசன் (வயது 54).

    இவரது மனைவி ஸ்டெல்லா தேவி. கணவன் மனைவி இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

    அன்பு ஜீவநேசன் மகள் பிளஸ் 2 முடித்து கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். அன்பு ஜீவ நேசனால் மகளின் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் அன்பு ஜீவன் நேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனைக் கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அன்பு ஜீவநேசன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மகளின் கல்லூரி கட்டணம் கட்ட முடியாததால் அன்பு ஜீவ நேசன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×