search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி அருகே வடமாநில தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
    X

    தருமபுரி அருகே வடமாநில தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

    • மாலையில் ராஜூபட்ரா வேலையை முடித்து விட்டு அறைக்கு சென்றுபார்த்தபோது கவுதம் ரஜாக் அங்குள்ள இரும்பு கம்பியில் தூக்கில் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கவுதம்ரஜாக் என்ன காரணத்திற்காக தூக்குபோட்டு கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    மேற்கு வங்கம் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டம் தப்பட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம் ரஜாக் (வயது23). இவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் செங்குட்டை கிராமத்தில் ஒரு அறையை வாடகை எடுத்து தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார். இவருடன் மேற்கு வங்கத்தை சேர்ந்த ராஜூபட்ரா (22) என்பவரும் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கவுதம் ரஜாக் மனவேதனையுடன் காணப்பட்டார். நேற்று காலையில் ராஜூபட்ரா வேலைக்கு செல்லும்போது கவுதம் ரஜாக்கை அழைத்து உள்ளார். அப்போது அவர் சிறிது நேரம் கழித்து வேலைக்கு வருவதாக கூறினார். இதைத்தொடர்ந்து ராஜூபட்ரா வேலைக்கு சென்று விட்டார். ஆனால் கவுதம் ரஜாக் வேலைக்கு வரவில்லை. மாலையில் ராஜூபட்ரா வேலையை முடித்து விட்டு அறைக்கு சென்றுபார்த்தபோது கவுதம் ரஜாக் அங்குள்ள இரும்பு கம்பியில் தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அவர் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கம்பை நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் பிணமாக கிடந்த கவுதம் ரஜாக்கின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கவுதம்ரஜாக் என்ன காரணத்திற்காக தூக்குபோட்டு கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×