search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Laborer commits suicide"

    • தொழிலாளி திருமண ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டிைய சேர்ந்தவர் காமராஜ் மகன் மோகன் (வயது32). கூலித்தொழிலாளி.

    இவர் அடிக்கடி வீட்டில் திருமணம் செய்து வைக்க கோரி சண்டையிடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று திருமணமாகாததால் விரக்தியில் இருந்த மோகன் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வடவள்ளி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையாம்பாளையத்தை சேர்ந்தவர் 28 வயது கூலித் தொழிலாளி. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த வாலிபரை வீட்டிற்கு அழைத்து ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக தொழிலாளிக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் இளம்பெண் தனது குழந்தைகளுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் தொழிலாளி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மனைவி இறந்ததை நினைத்து மன வேதனை அடைந்து வந்தார்.
    • இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமந்தகடவை சேர்ந்தவர் முருகன்(49). கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு அவரது மனைவி இறந்து விட்டார். முருகன் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    அதற்காக அடிக்கடி கோவை வந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதேபோல், நேற்று முன்தினம் முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கோவை வந்தார். தெற்கு உக்கடம் சிஎம்சி காலனியில் உள்ள தனது உறவினர் மாரிசாமி என்பவரது வீட்டில் தங்கினார்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் முருகன் மனைவியின் முதலாவது ஆண்டு நினைவு தினம் என்பதால், தனது மனைவியை நினைத்து மன வேதனை அடைந்துள்ளார். அவரது இறப்பை தாங்கி கொள்ள முடியாமல் அழுது புலம்பியுள்ளார். மேலும் தனது உறவினரான பழனிசாமி என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது ''எனது மனைவி இறந்து ஓராண்டு ஆகி விட்டது. அவரது நினைவை என்னால் மறக்க முடியவில்லை, அவரது நினைவு நாளில் நானும் அவருடன் செல்கிறேன்'' என உருக்கமாக தெரிவித்துள்ளார். அவரது உறவினரும் அவரை தேற்றியுள்ளார்.

    இருப்பினும் மனைவியின் நினைவு வாட்டியதால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முருகன் உறவினரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த உக்கடம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் முதலாவது ஆண்டு நினைவு நாளில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×