search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி கொலை"

    • ஆத்திரம் அடைந்த செல்வம் இரும்பு கம்பியால் பெருமாளை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
    • பலத்த காயம் அடைந்த பெருமாளை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருத்தணி:

    திருவாலங்காடு அருகே உள்ள ரங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(வயது60). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் கருவேல மரத்தை வெட்டி விற்பனை செய்வதில் தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே இது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வம் இரும்பு கம்பியால் பெருமாளை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த பெருமாளை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கொலை நடந்த இடத்திற்கு வீரா என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள அய்யம்பாளையம் ஆண்டிபாளையம் ரோட்டில் செங்கல் சூளை பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டம் அருகே சின்ன கிளை வாய்க்கால் செல்லும் பாலம் மீது இன்று காலை சுமார் 46 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில கிடந்துள்ளார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை மீட்டனர். இதில் அவருக்கு உடலில் ரத்த காயங்கள் மற்றும் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது தெரிந்தது.

    பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் விசாரணையில் அவர் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி (வயது 46) என்பதும், அவர் சமையல் தொழிலாளி என்றும், அவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும், தட்சின் (18), கிஷோர் (16) என்ற 2 மகன்கள் உள்ளதும் தெரியவந்தது.

    மேலும் கொலை நடந்த இடத்திற்கு வீரா என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் பழைய வத்தலக்குண்டு பகுதியிலும், வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் முன்பு அடுத்தடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்த கட்டிடதொழிலாளி பாண்டியராஜன்(34). இவர் நேற்றுமுன்தினம் இரவு திண்டுக்கல் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் கத்தியால் குத்தப்பட்டு இறந்துகிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் பழைய வத்தலக்குண்டு பகுதியிலும், வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் முன்பு அடுத்தடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் அவர்களிடம் சமாதானம் செய்து கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததின்பேரில் மறியலை கைவிட்டனர். இருந்தபோதும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என இன்று 2-ம் நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பிரேத பரிசோதனை முடிந்தும் அவரது உடல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே குற்றவாளிகளை பிடிக்க வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் தயாநிதி, கண்ணாகாந்தி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் குற்றவா ளிகள் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட பாண்டியராஜன் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் இல்லாதவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது தொடர்பில் இருந்தவர்கள் யார் என தெரியவில்லை. வேலைக்கு சென்ற இடத்தில் பழகி வந்த 3 பேர் ஒன்றாக சேர்ந்து டாஸ்மாக் கடைக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் பாண்டியராஜனுடன் சென்றவர்கள் யார் என 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செங்கல் காளவாசலில் வேலை பார்த்து வந்த பாண்டியராஜன் கடந்த சிலநாட்களாக சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
    • குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாண்டியராஜன் தினமும் கணவாய்பட்டி ரோட்டில் உள்ள கடையில் மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு செல்வது வழக்கம்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த அழகர்மகன் பாண்டியராஜன்(35). இவருக்கு திருமணமாகி கனகவள்ளி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    செங்கல் காளவாசலில் வேலை பார்த்து வந்த பாண்டியராஜன் கடந்த சிலநாட்களாக சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாண்டியராஜன் தினமும் கணவாய்பட்டி ரோட்டில் உள்ள கடையில் மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்றுஇரவு அந்த டாஸ்மாக் கடையில் மதுகுடித்துவிட்டு பின்னர் மீண்டும் திண்டுக்கல் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார்.

    அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் இன்றுகாலை பாண்டியராஜன் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைபார்த்த அப்பகுதி மக்கள் வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே வேலைக்கு சென்ற தனது கணவர் வராததது கண்டு கனகவள்ளி மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் வரவே வத்தலக்குண்டு வந்தனர்.

    இதனிடையே சம்பவ இடத்திற்கு நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட பாண்டியராஜன் உடலை கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தலை கழுத்தில் பலத்த காயம் அடைந்த சரத்பாபு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
    • கெலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

    செங்குன்றம்:

    சோழவரத்தை அடுத்த காரனோடை, லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்பாபு (வயது25). கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு காரனோடை பஜாரில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென சரத்பாபுவை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரத்பாபு அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.

    ஆனாலும் விரட்டி சென்ற கும்பல் ஓட, ஓட விரட்டி சரத்பாபுவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தலை கழுத்தில் பலத்த காயம் அடைந்த சரத்பாபு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். உடனே கொலை கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    கொலை குறித்து தகவல் அறிந்ததும் சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கொலையுண்ட சரத்பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கெலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொலை செய்யப்பட்ட அன்பரசனுக்கும், பாண்டி முருகனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
    • போலீசார் பாண்டி முருகன் மற்றும் கொலையை மறைக்க உதவிய வீரபாண்டி, ராஜபாண்டி, மாதவன், அன்பழகன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள புலியூரான்-பி. தொட்டியங்குளம் இடையிலான ரெயில்வே தண்டவாள பகுதியில் சம்பவத்தன்று 50 வயது மதிக்கத்தக்க நபர் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருச்சுழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக புலியூரான் கிராம நிர்வாக அலுவலர் பவானி தேவி கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்டவரின் உடலில் வெட்டு காயங்கள் இருந்தது. எனவே மர்ம நபர்கள் அவரை கொலை செய்துவிட்டு தண்டவாளத்தில் வீசி சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு ரெயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்டவர் திருச்சுழி அருகே உள்ள ஆலடிப்பட்டி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த டீக்கடை தொழிலாளி அன்பரசன் (வயது 50) என தெரியவந்தது.

    அன்பரசனை கொலை செய்தது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க திருச்சுழி போலீஸ் டி.எஸ்.பி. ஜெகநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அன்பரசனின் குடும்ப உறுப்பினர்கள், அவருடன் பழகியவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சின்ன கட்டங்குடி பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பாண்டி முருகன் (25) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

    அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

    கொலை செய்யப்பட்ட அன்பரசனுக்கும், பாண்டி முருகனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி மது குடித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று அன்பரசனும் பாண்டி முருகனும் சேர்ந்து சின்ன கட்டங்குடி பகுதியில் உள்ள தோப்பு வீட்டில் மது அருந்தினர். 2 பேருக்கும் போதை தலைக்கேறியது. அப்போது அன்பரசன் தரக்குறைவாக பாண்டி முருகனை பேசியதாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டி முருகன் அருகில் இருந்த கட்டையை எடுத்து அன்பரசனை சரமாரியாக தலையில் அடித்து தாக்கினார். இதில் நிலைகுலைந்து விழுந்த அன்பரசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டி முருகன் உடனே தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் வீரபாண்டி (32), சோலை மகன் ராஜபாண்டி (27) மற்றும் பாண்டி முருகனின் சகோதரர்கள் மாதவன் (23), அன்பழகன் (32) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் கொலை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் பிணத்தை அப்புறப்படுத்த முடிவு செய்தனர்.

    அதன்படி அன்பரசனின் உடலை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புலியூரான்-பி. தொட்டி யங்குளம் பகுதியில் உள்ள தண்டவாள பகுதியில் தற்கொலை செய்து கொண்டது போல போட்டு விட்டு சென்றுள்ளனர்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் பாண்டி முருகன் மற்றும் கொலையை மறைக்க உதவிய வீரபாண்டி, ராஜபாண்டி, மாதவன், அன்பழகன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • உத்தமபாளையத்தை சேர்ந்த அஜித்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
    • குடிபோதையில் இருந்த கீர்த்தி மற்றும் அருண்குமாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரம் 2-வது வார்டை சேர்ந்த பால்பாண்டி மகன் அருண்குமார் (வயது23). இவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்தார்.

    கடந்த பல மாதங்களாக கருநாக்கமுத்தன்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த கீர்த்தி (25) என்பவருடன் மட்டுமே வேலைக்கு சென்று வந்தார். ஆனால் தற்போது அவரை விடுத்து வேறு நபருடன் வேலைக்கு சென்றார். இதனால் கீர்த்திக்கும், அருண்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இந்நிலையில் உத்தமபாளையத்தை சேர்ந்த அஜித்குமார் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்புக்கு அருண்குமார் மற்றும் கீர்த்தி தரப்பினர் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் மீண்டும் தகராறு வெடித்தது.

    இதனால் அருண்குமாரை தீர்த்து கட்ட கீர்த்தி முடிவு செய்தார். இதற்காக தனது நண்பர்களான கிரேன் (22), பாண்டியன் (24) ஆகியோரை அழைத்துக் கொண்டார். நேற்று இரவு அருண்குமாரை குள்ளப்பகவுண்டன்பட்டி ஈஸ்வரன் கோவில் அருகே அவர்கள் வரவழைத்தனர். குடிபோதையில் இருந்த கீர்த்தி மற்றும் அருண்குமாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.

    இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து அருண்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அருண்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அருண்குமார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் 3 பேரை கைது செய்து அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கி இருந்த மணியை கைது செய்தனர்.

    செங்குன்றம்:

    புழல் அண்ணா நினைவு நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் சரவணன் (வயது33). பெயிண்டர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மணியும் (32) நண்பர்கள் ஆவர்.

    நேற்று இரவு நண்பர்கள் இருவரும் புழலில் உள்ள ஒரு கடையில் மது அருந்தினர். பின்னர் போதை அதிகமானதும் இருவரும் தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர்.

    இந்தநிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் மணி மீண்டும் மதுகுடிக்க நினைத்தார். இதையடுத்து அவர் நண்பர் சரவணன் வீட்டிற்கு சென்று மீண்டும் மதுகுடிக்க வருமாறு அழைத்தார். ஆனால் சரவணன் மதுகுடிக்க வரவில்லை என்று கூறியதாக தெரிகிறது.

    இதனால் நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது.

    ஆத்திரம் அடைந்த மணி அருகில் கிடந்த இரும்பு கம்பியால் சரவணனின் தலையில் பலமாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சரவணன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து புழல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கி இருந்த மணியை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆண் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள வெள்ளப்பட்டி-சிலுவைப்பட்டி இடையேயான உப்பளப் பகுதியில் இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதனை பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. சத்தியராஜ், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது உடலில் வெட்டுக்காயங்களுடன் லுங்கி அணிந்த ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார்? என்று விசாரணை நடத்தினர். உப்பள பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடப்பதால் அவர் தொழிலாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணேசனிடம், ராஜகோபால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜகோபால் வீரவநல்லூர் போலீசில் சரணடைந்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கொட்டாரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கனி என்ற கணேசன்(வயது 50). கூலித்தொழிலாளி.

    இவர் நேற்று இரவு அப்பகுதியில் நின்று கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கனி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து வீரவநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று கனியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கொன்ற மர்ம நபர் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    அத்தாளநல்லூரை சேர்ந்தவர் சிவன் பாண்டி. இவரது மனைவி சிதம்பரத்தம்மாள். இவர் அத்தாளநல்லூர் பஞ்சாயத்து தலைவியாக இருந்து வருகிறார். இவர்களது மகன் ராஜகோபால்(40). கொலை செய்யப்பட்ட கணேசன், பஞ்சாயத்து நிர்வாகம் மீது அடிக்கடி புகார் தெரிவித்து அதிகாரிகளுக்கு மனு அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு கொட்டாரக்குறிச்சி ரோட்டில் நின்று கொண்டிருந்த கணேசனிடம், ராஜகோபால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ராஜகோபால் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கணேசனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதற்கிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜகோபால் வீரவநல்லூர் போலீசில் சரணடைந்தார்.

    • கணவன்- மனைவிக்கி டையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
    • மனைவி சந்தியா மாமனார் ராமமூர்த்தி இருவரும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.

    கடலூர் :

    வடலூர் அருகேயுள்ள திடீர் குப்பத்தை சேர்ந்தவர்ராமமூர்த்தி (வயது 29). இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கும் பண்ருட்டி காடாம்புலியூரை அடுத்தசெம்மங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சந்தியா விற்கும்திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ராமமூர்த்திக்கு குடிப் பழக்கம் இருந்த தால் கணவன்- மனைவிக்கி டையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதில்ஆத்திர மடைந்த சந்தியா குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய்வீடான செம்மங்குப் பத்திற்கு வந்து விட்டார். இந்நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி சந்தியாவை தேடி சந்தியாவின் தங்கை வீடான விருத்தாச்சலத்திற்கு அடுத்த கொம்பாடிகுப்பத்திற்கு சென்று ராமமூர்த்தி சண்டை போட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சந்தியாவின் தங்கை யுடைய கொழுந்தனார் கொம்பாடிகுப்பம் அருண் குமார் (வயது 24) ராமமூர்த்தியின் கைகளைக் கட்டி போட்டு காரில் செம்மங்குப் பத்திற்கு அழைத்துச் சென்று உள்ளார். அங்கு மீண்டும் தகராறில் ஈடுபட்ட ராமமூர்த்தியை அவரது மனைவி சந்தியா மாமனார் ராமமூர்த்தி இருவரும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். ராமமூர்த்தியின் மனைவி சந்தியா,மாமனார் ராமமூர்த்தி ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தியாவின் தங்கையுடைய கொழுந்தனார் கொம்பாடி குப்பம் அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கணேசன் திருவண்ணாகோவில்பட்டியில் கோவில் ஊழியம் உள்ளிட்ட கிடைக்கும் வேலைகளை செய்து சாப்பிட்டு வந்தார்.
    • கொலைக்கான காரணம்? கொலையாளிகள் குறித்து உடனடியாக தெரியவில்லை.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள எண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட திருவண்ணாகோவில்பட்டியை சேர்ந்தவர் கணேசன்(வயது 59).

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த கணேசன், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பின் சொந்த ஊரான திருவண்ணாகோவில்பட்டிக்கு வந்தார்.

    பின்னர் அவர் சென்னைக்கு செல்லவில்லை. மனைவி மற்றும் மகன்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கணேசன் திருவண்ணாகோவில்பட்டியில் கோவில் ஊழியம் உள்ளிட்ட கிடைக்கும் வேலைகளை செய்து சாப்பிட்டு வந்தார். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை தனது வீட்டில் முன் அமர்ந்திருந்தார்.

    அப்போது வாகனத்தில் வந்த சில மர்மநபர்கள் கணேசனை கற்கள் மற்றும் கட்டைகளால் கொடூரமாக தாக்கினர். இதில் அவரது முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். காலையில் விவசாய வேலைக்குச் சென்ற கூலி தொழிலாளிகள் இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கொலைக்கான காரணம்? கொலையாளிகள் குறித்து உடனடியாக தெரியவில்லை. சென்னையில் வசிக்கும் அவரது மனைவி மகன்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கோவில் ஊழியம் செய்து வந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×