என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவாலங்காடு அருகே தொழிலாளி அடித்துக்கொலை
- ஆத்திரம் அடைந்த செல்வம் இரும்பு கம்பியால் பெருமாளை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
- பலத்த காயம் அடைந்த பெருமாளை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
திருத்தணி:
திருவாலங்காடு அருகே உள்ள ரங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(வயது60). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் கருவேல மரத்தை வெட்டி விற்பனை செய்வதில் தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே இது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வம் இரும்பு கம்பியால் பெருமாளை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த பெருமாளை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






