search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபோதை தகராறு"

    • ரெஜின், ராஜேஷ் இருவரும் மது அருந்திவிட்டு குழிக்கோடு பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.
    • கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    தக்கலை:

    தக்கலை அருகே குழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜின் (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் அனீஸ் (30). இவர்கள் இருவரும் நண்பர்கள். இருவரும் ஒன்றாக மது அருந்தும்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரெஜின் நண்பர் அனீசை தாக்கியதாக தெரிகிறது.

    படுகாயம் அடைந்த அனீஸ் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அனீஸ் கொடுத்த புகாரின் பேரில் ரெஜின் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் ரெஜின், ராஜேஷ் இருவரும் மது அருந்திவிட்டு குழிக்கோடு பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று இருவரையும் சரமாரியாக தாக்கினார்கள. கத்தியால் குத்தியதுடன் அந்த பகுதியில் கிடந்த கம்பியாலும், கற்களாலும் தாக்கியதில் ரெஜின் படுகாயம் அடைந்தார்.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. படுகாயம் அடைந்த ரெஜினை சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரெஜின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜேஷ் தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் ரெஜினை தாக்கியது கோழிப்போர்விளை பழ விளையை சேர்ந்த வினித் (24) கூட்டமாவு பகுதியை சேர்ந்த பரத் லியோன் (24), குழிக்கோட்டை சேர்ந்த அருண் (23), ஜெபின் (24), ஜிஜிஸ் (24) மற்றும் கோழிப்போர்விளையை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கைது செய்யப்பட்ட வினித், பரத் லியோன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கி இருந்த மணியை கைது செய்தனர்.

    செங்குன்றம்:

    புழல் அண்ணா நினைவு நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் சரவணன் (வயது33). பெயிண்டர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மணியும் (32) நண்பர்கள் ஆவர்.

    நேற்று இரவு நண்பர்கள் இருவரும் புழலில் உள்ள ஒரு கடையில் மது அருந்தினர். பின்னர் போதை அதிகமானதும் இருவரும் தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர்.

    இந்தநிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் மணி மீண்டும் மதுகுடிக்க நினைத்தார். இதையடுத்து அவர் நண்பர் சரவணன் வீட்டிற்கு சென்று மீண்டும் மதுகுடிக்க வருமாறு அழைத்தார். ஆனால் சரவணன் மதுகுடிக்க வரவில்லை என்று கூறியதாக தெரிகிறது.

    இதனால் நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது.

    ஆத்திரம் அடைந்த மணி அருகில் கிடந்த இரும்பு கம்பியால் சரவணனின் தலையில் பலமாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சரவணன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து புழல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கி இருந்த மணியை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடிபோதையில் பஸ் நிலையத்துக்குள் வந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார்.
    • பெண் போதை வாலிபரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக தாக்கினார்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி பஸ் நிலைய வளாகம் எப்போது பயணிகள் வருகையால் பரபரப்பாக இருக்கும்.

    இந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் பஸ் நிலையத்துக்குள் வந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்த பெண் திடீரென தனது செருப்பை கழற்றி போதை வாலிபரை சரமாரியாக தாக்கினார்.

    அடிவாங்க முடியாமல் அந்த வாலிபர் போதை தள்ளாட்டத்துடன் பஸ் நிலைய பிளாட்பாரங்களில் தப்பி ஓடினார். ஆனாலும் அந்த பெண் போதை வாலிபரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக தாக்கினார்.

    அப்போது ஒரு கடை முன்பு இருந்த இரும்பு கம்பிகளை எடுத்து அந்த பெண் அடிக்க பாய்ந்தார். பதிலுக்கு போதை ஆசாமியும் அங்கிருந்த ஒருவாளியை எடுத்து தடுக்க தயாரானார்.

    இதனை கண்ட கடையில் இருந்த ஊழியர் ஒருவர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு சமாதானப்படுத்தி அனுப்பினார். ஆனாலும் அவர்களது மோதல் தீரவில்லை. நீண்ட நேரத்திற்கு பின்னர் போக்கு வரத்து போலீஸ்காரர் ஒருவர் வந்து போதை வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தார்.இதன் பிறகுதான் அவர்களது மோதல் முடிவுக்கு வந்தது.

    போதை வாலிபரை பெண் விரட்டி,விரட்டி தாக்கும் காட்சியை பஸ் நிலையத்தில் இருந்து ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினார்.

    இந்த வீடிேயா தற்போது வைரலாக பரவிவருகிறது. இச்சம்பவத்தால் பூந்தமல்லி பஸ் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    ×