search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மது போதையில் தகராறு செய்த வாலிபரை ஓட, ஓட விரட்டி செருப்பால் தாக்கிய பெண்
    X

    மது போதையில் தகராறு செய்த வாலிபரை ஓட, ஓட விரட்டி செருப்பால் தாக்கிய பெண்

    • குடிபோதையில் பஸ் நிலையத்துக்குள் வந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார்.
    • பெண் போதை வாலிபரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக தாக்கினார்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி பஸ் நிலைய வளாகம் எப்போது பயணிகள் வருகையால் பரபரப்பாக இருக்கும்.

    இந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் பஸ் நிலையத்துக்குள் வந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்த பெண் திடீரென தனது செருப்பை கழற்றி போதை வாலிபரை சரமாரியாக தாக்கினார்.

    அடிவாங்க முடியாமல் அந்த வாலிபர் போதை தள்ளாட்டத்துடன் பஸ் நிலைய பிளாட்பாரங்களில் தப்பி ஓடினார். ஆனாலும் அந்த பெண் போதை வாலிபரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக தாக்கினார்.

    அப்போது ஒரு கடை முன்பு இருந்த இரும்பு கம்பிகளை எடுத்து அந்த பெண் அடிக்க பாய்ந்தார். பதிலுக்கு போதை ஆசாமியும் அங்கிருந்த ஒருவாளியை எடுத்து தடுக்க தயாரானார்.

    இதனை கண்ட கடையில் இருந்த ஊழியர் ஒருவர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு சமாதானப்படுத்தி அனுப்பினார். ஆனாலும் அவர்களது மோதல் தீரவில்லை. நீண்ட நேரத்திற்கு பின்னர் போக்கு வரத்து போலீஸ்காரர் ஒருவர் வந்து போதை வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தார்.இதன் பிறகுதான் அவர்களது மோதல் முடிவுக்கு வந்தது.

    போதை வாலிபரை பெண் விரட்டி,விரட்டி தாக்கும் காட்சியை பஸ் நிலையத்தில் இருந்து ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினார்.

    இந்த வீடிேயா தற்போது வைரலாக பரவிவருகிறது. இச்சம்பவத்தால் பூந்தமல்லி பஸ் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×