என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வத்தலக்குண்டுவில் கட்டிட தொழிலாளி குத்திக்கொலை
- செங்கல் காளவாசலில் வேலை பார்த்து வந்த பாண்டியராஜன் கடந்த சிலநாட்களாக சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
- குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாண்டியராஜன் தினமும் கணவாய்பட்டி ரோட்டில் உள்ள கடையில் மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு செல்வது வழக்கம்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த அழகர்மகன் பாண்டியராஜன்(35). இவருக்கு திருமணமாகி கனகவள்ளி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
செங்கல் காளவாசலில் வேலை பார்த்து வந்த பாண்டியராஜன் கடந்த சிலநாட்களாக சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாண்டியராஜன் தினமும் கணவாய்பட்டி ரோட்டில் உள்ள கடையில் மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்றுஇரவு அந்த டாஸ்மாக் கடையில் மதுகுடித்துவிட்டு பின்னர் மீண்டும் திண்டுக்கல் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் இன்றுகாலை பாண்டியராஜன் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைபார்த்த அப்பகுதி மக்கள் வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே வேலைக்கு சென்ற தனது கணவர் வராததது கண்டு கனகவள்ளி மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் வரவே வத்தலக்குண்டு வந்தனர்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட பாண்டியராஜன் உடலை கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்