search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி கொலை"

    • தகராறில் ராமகிருஷ்ணன், விக்னேஷ் இருவரும் சேர்ந்து மது பாட்டிலால் சாமிதுரையை தாக்கியுள்ளனர்.
    • சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் ராமகிருஷ்ணன், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் பகுதியில் உள்ள பழைய ராஜவாய்க்கால் கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார்.

    உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் சாளரப்பட்டியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரது மகன் சாமிதுரை (வயது 42) என்பது தெரியவந்தது.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் சாமிதுரையின் தோள்பட்டையில் எலும்பு முறிவு இருப்பது தெரியவந்தது. அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்ததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் பாட்டான் என்கிற ராமகிருஷ்ணன் (34), பாலபூபதி என்பவரது மகன் விக்னேஷ் (26) ஆகியோர் சாமிதுரையை அடித்துக்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. கட்டிடத் தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் நண்பர்களாக இருந்துள்ளனர். சம்பவத்தன்று ராஜவாய்க்கால் கரையில் அமர்ந்து மூவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

    அப்போது ஏற்பட்ட தகராறில் ராமகிருஷ்ணன், விக்னேஷ் இருவரும் சேர்ந்து மது பாட்டிலால் சாமிதுரையை தாக்கியுள்ளனர். மயங்கி விழுந்த சாமிதுரையை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளனர். பலத்த காயமடைந்த சாமிதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் ராமகிருஷ்ணன், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

    • கொலையாளியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஸ்வரனை கல்லால் குத்திய 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

    பெரும்பாறை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் லோகேஷ்வரன் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர். திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு அருகே மூலையாறு பகுதியில் உள்ள தார் சுடுகலவை மையத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    லோகேஷ்வரனுடன் அந்த மையத்தில் உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் அங்கு பணியில் இருந்தனர். சம்பவத்தன்று வேலை செய்து கொண்டிருந்த போது லோகேஷ்வரனுக்கும், 17 வயது சிறுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு பணி முடிந்து அனைவரும் தங்கும் அறைக்கு சென்று விட்டனர். நள்ளிரவில் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது எழுந்த சிறுவன் தன்னிடம் தகராறு செய்த லோகேஷ்வரனின் வயிற்றில் அங்கு கிடந்த கூர்மையான கருங்கல்லை எடுத்து குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து வலி தாங்க முடியாமல் லோகேஷ்வரன் அலறினார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் எழுந்தனர். பின்னர் அவர்கள் லோகேஷ்வரனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து லோகேஷ்வரனின் உறவினர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். கொலையாளியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஸ்வரனை கல்லால் குத்திய 17 வயது சிறுவனை கைது செய்தனர். அதன் பின்பு உறவினர்கள் உடலை பெற்றுச் சென்றனர்.

    • நவநீதன் மற்றும் செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    • தலைமறைவான சக்தி என்ற பறவையை போலீசார் தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெர்மல்நகர் லேபர் காலனியை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் ஜெகன்ராஜ் (வயது30). கூலி தொழிலாளி.

    நேற்று மதியம் லேபர் காலனியில் ஜெகன்ராஜ் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் ஜெகன்ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்தவர்கள் ஜெகன்ராஜை சரமாரியாக வெட்டியும், கத்தியால் குத்தினர்.

    இதனால் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க தெர்மல்நகர் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் அப்பகுதியை சேர்ந்த நவநீதன், செல்வம் (29) மற்றும் சக்தி என்ற பறவை (27) ஆகியோர் ஜெகன்ராஜை கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் நவநீதன் மற்றும் செல்வம் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

    அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் நவநீதன், சக்தி என்ற பறவை என்பவர் மூலம் ஜெகன்ராஜிடம் ரூ. 40 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். அதனை ஜெகன்ராஜ் திருப்பி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ஜெகன்ராஜை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான சக்தி என்ற பறவையையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வீட்டுக்கு வந்த சின்னத்துரை வீட்டில் மனைவி, பிள்ளைகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்தார்.
    • தாயை அவதூறாக பேசியதால் தந்தையை கொன்றதாக கூறி உள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் எம்.ஜி.ஆர். பூங்கா அருகே பொது மையவாடி சுமார் 45 மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று மாலை கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    கொலை செய்யப்பட்டவர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கணேஷபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான சின்னத்துரை(வயது42) என்பது தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்து. அதன் விபரம் வருமாறு:-

    சின்னத்துரைக்கு திருமணமாகி ராஜேஸ்வரி (38 ) என்ற மனைவியும், 4 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது ஆறுமுகநேரி அருகே மூலக்கரை செல்லும் சாலையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சின்னத்துரை அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்ட ராஜேஸ்வரி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார்.

    இந்நிலையில் வீட்டுக்கு வந்த சின்னத்துரை வீட்டில் மனைவி, பிள்ளைகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.

    அப்போது அவரது மகன்களில் ஒருவரான 17 வயது மகன் மட்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அவரை அழைத்து கொண்டு சின்னத்துரை பல்வேறு இடங்களில் மனைவி, குழந்தைகளை தேடி உள்ளார். பின்னர் தூத்துக்குடிக்கு வந்து, மையவாடியில் வைத்து மது குடித்துள்ளார். அதிகமான போதை ஏறிய நிலையில் மனைவியை அவர் அவதூறாக பேசி மகனையும் திட்டியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த 17 வயது மகன் அங்கிருந்த அரிவாளால் தன் தந்தையை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது மகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் தன் தாயை அவதூறாக பேசியதால் தந்தையை கொன்றதாக கூறி உள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீபாவளிக்கு மறுநாள் வழக்கம்போல் பணிக்கு சென்ற அவர்கள் 4 பேரும் மாலையில் ஆலைக்கு அருகிலேயே மது அருந்த சென்றனர்.
    • மதன்குமார், நாகேந்திரன், சரவணக்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து மதுபோதையில் சுந்தரை கல்லால் சரமாரியாக தாக்கினர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகேயுள்ள வெற்றிலையூரணி அரசரடி தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    அதே ஆலையில் விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்த மதன்குமார், நாகேந்திரன், சரவணக்குமார் ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர். நண்பர்களான 4 பேரும் பெரும்பாலான நேரங்களில் பணி முடிந்ததும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

    தீபாவளிக்கு மறுநாள் வழக்கம்போல் பணிக்கு சென்ற அவர்கள் 4 பேரும் மாலையில் ஆலைக்கு அருகிலேயே மது அருந்த சென்றனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த மதன்குமார், நாகேந்திரன், சரவணக்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து மதுபோதையில் சுந்தரை கல்லால் சரமாரியாக தாக்கினர்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும் மற்ற மூவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுந்தரை மீட்டவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கொலையுண்ட சுந்தரின் தாய் வெள்ளத்தாய் (70) கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக மதன்குமார், சரவணக்குமாரை கைது செய்த போலீசார் தலைமறைவான நாகேந்திரனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தான் சுந்தர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், மணியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே உள்ள மணக்கரை கீழுரை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் கூலித் தொழில் செய்து கொண்டு அவ்வப்போது ஆடு மேய்த்து வந்தார். இவருக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்னனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    இந்நிலையில் நேற்று மணக்கரை ஊருக்கு கீழ்புறம் உள்ள மாடசாமி கோவில் அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு, அருகில் இருந்த ஒரு வேப்பரத்தின் அடியில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், மணியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.

    இது தொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட மணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை தொடர்பாக ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் மற்றும் முறப்பநாடு இன்ஸ்பெக்டர் தில்லை நாயகம் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    மணியை கொலை செய்தவர்கள் யார் எதற்காக கொலை செய்தனர் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்டவரின் குடும்பதிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • குடிபோதையில் சக தொழிலாளர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • போலீசார் ஜூலியஸ் குமாருடன் தங்கியிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    குமரி மாவட்டம் நெய்யூர் திங்கள்சந்தை பகுதியை சேர்ந்தவர் ஜூலியஸ் குமார்(வயது 40). கட்டிட தொழிலாளி. இவர் புதிய கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலை செய்து வந்தார்.

    கடந்த சில வாரங்களாக நெல்லை அருகே உள்ள திடீயூரில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணியில் அவர் ஈடுபட்டு வந்தார். இதற்காக சக தொழிலாளர்களுடன் கல்லூரி வளாகத்தில் இருந்த அறையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    நேற்று அதிகாலை சக தொழிலாளர்களில் சிலர் பார்த்தபோது அவர் கோடாரி மற்றும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து முன்னீர் பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், குடிபோதையில் சக தொழிலாளர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் ஜூலியஸ் குமாருடன் தங்கியிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் 2 தொழிலாளர்கள் அங்கு இல்லை. இதையடுத்து அவர்களை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

    இந்நிலையில், காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த குமரி மாவட்டம் சாமியார்மடத்தை சேர்ந்த சூர்யா(24) மற்றும் திங்கள்சந்தை பகுதி சானல்கரையை சேர்ந்த செல்வன்(33) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், தீபாவளி அன்று இரவு தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்ததாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றியதில் ஜூலியஸ் குமாரை வெட்டிக்கொலை செய்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • சக ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையை சேர்ந்தவர் ஜூலியஸ்குமார் (வயது41). கட்டிட தொழிலாளி. இவர் நெல்லை மாவட்டம் மேல திடியூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டிட பணிக்காக அங்கே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். அவருடன் மேலும் சில தொழிலாளர்களும் பணியாற்றி வந்தனர்.

    இந்நிலையில் ஜூலியஸ்குமார் இன்று காலை அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் கல்லூரி வளாகத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவலறிந்ததும் முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜூலியஸ்குமாருக்கும், அவருடன் வேலை பார்த்து வந்த சக ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாராயண பெருமாள், கனகராஜை கம்பால் தாக்கினார்.
    • கனகராஜ், நாராயணபெருமாள் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியதுடன், அவரது மொபட்டையும் அடித்து நொறுக்கினார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், மேல்கரை வடக்குத்தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 40). தொழிலாளி. இவரது மனைவி சந்திரலேகா. கனகராஜின் தம்பி முத்துக்குமார் கோவையில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் முத்துக்குமார் அதே பகுதியை சேர்ந்த நாராயணபெருமாள் (53) என்பவரது மகள் அனிதாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். காதல் திருமணம் என்பதால் நாராயணபெருமாள் திருமணத்தின் போது, தனது மகளுக்கு நகைகள் அணிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    ஆனால் கனகராஜ், நாராயணபெருமாளிடம் உனது மகளுக்கு நகைகள் போட வேண்டும் என்று கூறி வந்துள்ளார். மேலும் அடிக்கடி கனகராஜ், நாரயணபெருமாளிடம் உனது மகளுக்கு எப்போது நகை போடுவாய்? என்றும் கேட்டு வந்துள்ளார். நேற்று மாலை இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நாராயண பெருமாள், கனகராஜை கம்பால் தாக்கினார்.

    இதுபோல கனகராஜ், நாராயணபெருமாள் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியதுடன், அவரது மொபட்டையும் அடித்து நொறுக்கினார்.

    இதுகுறித்து இருவரும் களக்காடு போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே கனகராஜூக்கும், நாராயண பெருமாளுக்கும் இரவில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது கனகராஜ், உனது மகளுக்கு இன்னும் நகை போடாமல் உள்ளாயே என கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நாராயணபெருமாள், கனகராஜை மண்வெட்டியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் பச்சமால், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நாராயணபெருமாளை தேடி வருகின்றனர்.

    • பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • அரிவாளுடன் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் சிவமூர்த்தி சரண் அடைந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது38). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டார்.

    இதனையடுத்து அவர் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே ராஜேஷ்குமார் வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மைத்துனர் சிவமூர்த்தி (30) என்பவர் அங்கு சென்று எனது அக்காவை விரட்டி விட்டு வேறு ஒருவருடன் வாழ்கிறாயா என சத்தம் போட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    நேற்று சிவமூர்த்தியின் வீட்டுக்கு ராஜேஷ்குமார் சென்றார். அங்கு சிவமூர்த்தி இல்லாததால் அவரது மனைவியிடம் இனிமேல் எனது பிரச்சினையில் உன் கணவர் தலையிடக்கூடாது என சத்தம்போட்டு வந்துள்ளார்.

    வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் சத்தம்போட்டதால் ஆத்திரம் அடைந்த சிவமூர்த்தி இன்று போடி அரசு உதவி பெறும் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்த ராஜேஷ்குமாரை வழிமறித்து சத்தம் போட்டார். மேலும் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேஷ்குமாரை வெட்டினார். உயிருக்கு பயந்து அவர் ஓட முயன்றபோதும் விடாமல் துரத்தி சென்ற சிவமூர்த்தி சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடிக்க தொடங்கினர்.

    பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் சிவமூர்த்தி சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆத்திரம் அடைந்த செல்வம் இரும்பு கம்பியால் பெருமாளை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
    • பலத்த காயம் அடைந்த பெருமாளை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருத்தணி:

    திருவாலங்காடு அருகே உள்ள ரங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(வயது60). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் கருவேல மரத்தை வெட்டி விற்பனை செய்வதில் தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே இது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வம் இரும்பு கம்பியால் பெருமாளை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த பெருமாளை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கொலை நடந்த இடத்திற்கு வீரா என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள அய்யம்பாளையம் ஆண்டிபாளையம் ரோட்டில் செங்கல் சூளை பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டம் அருகே சின்ன கிளை வாய்க்கால் செல்லும் பாலம் மீது இன்று காலை சுமார் 46 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில கிடந்துள்ளார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை மீட்டனர். இதில் அவருக்கு உடலில் ரத்த காயங்கள் மற்றும் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது தெரிந்தது.

    பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் விசாரணையில் அவர் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி (வயது 46) என்பதும், அவர் சமையல் தொழிலாளி என்றும், அவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும், தட்சின் (18), கிஷோர் (16) என்ற 2 மகன்கள் உள்ளதும் தெரியவந்தது.

    மேலும் கொலை நடந்த இடத்திற்கு வீரா என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×