search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி கொலை- நண்பர் வெறிச்செயல்
    X

    தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி கொலை- நண்பர் வெறிச்செயல்

    • முகமது பாசில் தங்கி இருந்த பிளாட்பாரத்தில் அருகே கேரளாவை சேர்ந்த ரமேஷ் என்பவரும் தங்கி இருந்தார்.
    • ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் 2 பேருக்கும் நட்பு ஏற்பட்டது.

    கவுண்டம்பாளையம்:

    கேரளாவை சேர்ந்தவர் முகமது பாசில்(வயது28).

    இவர் தனது மனைவியுடன் துடியலூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் தங்கி பாட்டில் உள்ளிட்ட குப்பைகளை சேகரிக்கும் தொழில் செய்து வந்தார்.

    தினமும் இருவரும், அந்த பகுதி முழுவதும் ஒன்றாக சேர்ந்து குப்பைகளை சேகரித்து, அதனை விற்று, அதில் வரும் பணத்தை கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

    முகமது பாசில் தங்கி இருந்த பிளாட்பாரத்தில் அருகே கேரளாவை சேர்ந்த ரமேஷ்(51) என்பவரும் தங்கி இருந்தார். ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் 2 பேருக்கும் நட்பு ஏற்பட்டது.

    2 பேரும் நண்பர்களாக பழகினர். இதையடுத்து 2 பேரும் ஒன்றாக வேலை செய்ய ஆரம்பித்தனர். 2 பேருக்குமே மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் 2 பேரும் பணி முடிந்ததும் சேர்ந்து மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். மேலும் 2 பேரும் ஒரின சேர்க்கையிலும் ஈடுபட்டு வந்தாக தெரிகிறது.

    நேற்றும் வழக்கம் போல் 2 பேரும் தங்கள் வேலையை முடித்து விட்டு ஒன்றாக அமர்ந்து மதுகுடித்தனர். மதுகுடித்த பின்னர் தூங்க சென்றனர். அப்போது முகமது பாசில், ரமேசை ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளார்.

    ஆனால் ரமேஷ் வர மறுத்தார். மேலும் உனது ஆடையை களைந்து இருக்குமாறு கூறியதால் ஆத்திரம் அடைந்தார். இதனால் அவர் முகமது பாசிலின் மீது கடும் கோபம் கொண்டார். அவரை கொல்ல முடிவு செய்தார்.

    அதன்படி முகமது பாசில் தூங்கியதும், சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து அவரின் தலையில் போட்டார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது முகமது பாசில் இறந்த நிலையில் கிடந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியாகினர்.

    உடனடியாக சம்பவம் குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், ஒரின சேர்க்கைக்கு அழைத்ததால் ரமேஷ், முகமது பாசிலை கல்லை போட்டு கொன்றது போலீசின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ரமேசை தேடி வந்தனர். இந்த நிலையில் ரமேஷ் துடியலூர் போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×