search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெரியாதவர்"

    • கன்னிமார் ஓடை அருகில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் கஞ்சமலை கன்னிமார் ஓடை அருகில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். கடந்த 20-ந்தேதி இதை பார்த்த பொதுமக்கள், சேலம் இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வாலி பர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என தெரியவில்லை. இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

    அவர் பெயர் மற்றும் முகவரி தெரியாததால் போலீசாருக்கு மேற்கொண்டு விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அந்த வாலிபர் புளூ நிற பேண்ட், புளூ, ரோஸ்கலர் முழுக்கை சட்டை அணிந்திருந்தார். இவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே கழிவு நீர் சாக்கடையில் ஒருவர் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே கழிவு நீர் சாக்கடையில் ஒருவர் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில், இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும் எனவும், உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×