search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவு நீர் ஓடையில்"

    • ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே கழிவு நீர் சாக்கடையில் ஒருவர் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே கழிவு நீர் சாக்கடையில் ஒருவர் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில், இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும் எனவும், உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×