search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவறான சிகிச்சை"

    • அறுவை சிகிச்சை முடிந்து 3 நாட்கள் ஆன பிறகு சாதாரண நிலைக்கு சிகிச்சை பெற்று இருந்துள்ளார்.
    • வருகின்ற நோயாளிகளின் உயிருக்கு பாதுகாப்பில்லை.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் சோளக்கொட்டாய் அடுத்த லலாகொட்டாய் பகுதியை சார்ந்த தங்கராஜ். இவரது மகள் காயத்ரி. இவர் தருமபுரி அடுத்த நல்லம்பள்ளியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத நிலையில் தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு காயத்ரி உடல் நிலையை சரி செய்து மருத்துவர் ஸ்கேன் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து ஸ்கேன் செய்து பார்த்ததில் ஒட்டுக்குடல் இருப்பது தெரியவந்துள்ளது.

    தொடர்ந்து இதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தி, ரூ.50,000 செலவாகும் என தெரிவித்துள்ளார். அப்பொழுது அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து அறுவை சிகிச்சை முடிந்து 3 நாட்கள் ஆன பிறகு சாதாரண நிலைக்கு சிகிச்சை பெற்று இருந்துள்ளார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்லலாம் என மருத்துவர் அறிவுறுத்தி உள்ளார்.

    அப்பொழுது காயத்ரிக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தடுப்பு ஊசி போட்ட பின் காயத்ரி திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதனைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் உள்ள மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மருத்துவர் காயத்ரியை பரிசோதித்த பின்னர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

    தொடர்ந்து 2 நாட்களுக்குப் பிறகு சேலம் தனியார் மருத்துவமனையில் காயத்ரியின் உடல்நிலை மோசமான நிலையில் சுயநினைவின்றி இருப்பதால் வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் மூளை, தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மற்ற உடலுறுப்புகள் எந்தவித குறைபாடுகள் இல்லாமல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காயத்ரியின் பெற்றோர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒட்டுக்குடல் சிகிச்சைக்காக வந்த காயத்ரிக்கு, தனியார் மருத்துவமனையில் மருத்துவர் கொடுத்த தவறான சிகிச்சையால் தற்பொழுது சுயநினைவின்றி இருந்து வருகிறார். இந்த மருத்துவமனையின் தரம் மிகவும் மோசமானதாக உள்ளது. வருகின்ற நோயாளிகளின் உயிருக்கு பாதுகாப்பில்லை.

    எனவே காயத்ரியின் இந்த நிலைக்கு காரணமான மருத்துவமனை மீதும் மற்றும் மருத்துவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய தருமபுரி நகர காவல் நிலையத்தில் காயத்ரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் இது போன்ற சம்பவ இனி நடைபெறாத வண்ணம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும், மருத்துவரின் பதிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் சேர்த்து தையல் போட்டுள்ளனர்.
    • பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி. கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 19.9.2022 அன்று அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சிகிச்சை முடிந்ததும் பத்மாவதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பிறகு பத்மாவதிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பத்மாவதியை பரிசோதனை செய்ததில் பிரசவத்தின் போது குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் சேர்த்து தையல் போட்டுள்ளதும், அதனால் தான் வயிறு வலி ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்ட பத்மாவதி, சிகிச்சை முடிந்ததும் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவ குழு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு, எவ்வித அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை என தெரிகிறது. 

    இதனையடுத்து பத்மாவதி மற்றும் அவரது கணவர், குழந்தைகள், உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 24-ந்தேதி வந்தனர். அவர்கள் அங்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர். அவர்களிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அறுவை சிகிச்சை யின் போது குடலையும், கர்ப்பபையினையும் சேர்த்து தையல் போட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென பத்மாவதி குடும்பத்தார் வலியுறுத்தினர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை அடுத்து பத்மாவதி குடும்பத்தார் அங்கிருந்து சென்றனர். 

    இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு பத்மாவது, அவரது கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் ஆஸ்ப த்திரியின் டாக்டர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகமே பரபரப்பாக காணப்படுகிறது.

    • பெற்றோர் தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் குழந்தை இறந்து விட்டதாக காடாம்புலியூர் போலீசில் புகார் அளித்தார்.
    • புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே காடாம்புலியூர் தெற்கு மேம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி.

    இவர்களுக்கு பானுஸ்ரீ என்ற 4½ வயது பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் இந்த பெண் குழந்தைக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டது.

    இதனால் நேற்று முன்தினம் பண்ருட்டி தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது பானுஸ்ரீக்கு உடலில் அலர்ச்சி ஏற்பட்டது. இதனால் குழந்தையின் பெற்றோர் பண்ருட்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பானுஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பானுஸ்ரீயின் பெற்றோர் தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் குழந்தை இறந்து விட்டதாக காடாம்புலியூர் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இந்திராதேவி இறப்பில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை டாக்டர்கள் தெரிவிக்கும்வரை நாங்கள் உடலை வாங்கமாட்டோம் என தெரிவித்தனர்.
    • இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை செங்கோட்டையை சேர்ந்தவர் ஜெயராமன்(24). இவர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இந்திராதேவி(20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கருவுற்றிருந்த இந்திராதேவியை கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    நேற்று மாலை அவருக்கு சிசேரியன் மூலம் ஆண்குழந்தை பிறந்தது. அதன்பிறகு இந்திராதேவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இரவு தனது மகளை பார்ப்பதற்காக இந்திராதேவியின் தாய் சென்றுள்ளார். தனது மகளின் உடலை தொட்டு பார்த்தபோது ஐஸ்கட்டி போல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இன்றுகாலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரசவத்தின்போதே தவறான சிகிச்சையால் இந்திராதேவி இறந்துவிட்டதாகவும், ஆனால் தங்களிடம் இதுபற்றி தெரிவிக்காமல் டாக்டர்கள் மறைத்துவிட்டனர் எனக்கூறி அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்திராதேவி இறப்பில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை டாக்டர்கள் தெரிவிக்கும்வரை நாங்கள் உடலை வாங்கமாட்டோம் என தெரிவித்தனர்.

    அப்போது போலீசாருக்கும், போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே வருமாறு அறிவுறுத்தினர். இதனிடையே இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கேயும் பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பதட்டமான சூழல் உருவானது.

    • டாக்டர் உட்பட 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
    • பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் போராட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமீனா (வயது26) நிறை மாதகர்பிணியான இவர் கடந்த 13ம் தேதி அறந்தாங்கி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சிறிது நேரத்தில் ஜோதிமீனா உயிரிழந்துள்ளார்.அதே போன்று கூத்தாடிவயல் பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி (26)என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுகபிரசவத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் ராஜலட்சுமிக்கு உதிரப்போக்கு அதிகமாக காணப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பணியில் இருந்த மருத்துவர்கள் இரத்தப்போக்கை நிறுத்துவதற்காக கர்ப்பப்பையை நீக்கியுள்ளனர். ரத்தபோக்கு நிக்காததால், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி ராஜலட்சுமி மற்றும் உயிரிழந்த ஜோதிமீனா உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோஷங்களை எழுப்பினர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராமு, அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சம்பவத்தின்போது பணியிலிருந்த மருத்துவர் சாரதா, செவிலியர் பரமேஸ்வரி, உதவியாளர் முத்துலெட்சுமி ஆகிய 3 பேரை பணியிடை மாற்றம் செய்ய உத்தரவிட்டார். மேலும் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மேலிடத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என உறுதியளித்தார். அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


    • இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது.
    • வலது காலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிகிச்சை பலன் அளிக்காததால் வலது கால் துண்டிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா வடக்கூர் மேல தெருவை சேர்ந்தவர் ஜோதி. இவர் அரசு பஸ்சில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.

    சம்பவதன்று இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது.

    இதில் ஜோதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கா ததால் அங்கிருந்து வெளியேறி மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்கைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு வலது காலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிகிச்சை பலன் அளிக்காததால் வலது கால் துண்டிக்கப்பட்டது.

    இந்நிலையில் டாக்டரின் தவறான சிகிச்சையால் தான் தனது கால் துண்டிக்கப்பட்டதாக கூறி அவர் கலெக்டர் அலுவகத்தில் மனு அளித்தார்.

    மேலும் இது குறித்து விசாரணை நடத்தி உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

    ×